இலக்குகள்

  • நமது தேசத்தின் பல இன, பல கலாச்சார, பல மதத் தன்மையை வலுப்படுத்த உதவும் சூழலை மேம்படுத்தி உருவாக்குதல்.

செயற்திட்டம்

  1. பலர் புத்த மதத்தை இலங்கையில் பிரதான மதமாக ஏற்றுக் கொண்டாலும், சிறுபாண்மை கலாச்சாரங்களை சகித்துக் கொள்வது மட்டுமல்லாமல் வரவேற்கும் ஒரு பன்முக கலாச்சார நாடாக வரையறுத்தல்.
  2. பன்முகக் கலாச்சார வாதத்தை நமது தேசிய அடையாளத்தை வரையறுக்கும் அம்சமாக அங்கீகரித்து ஒருவருக்கொருவர் மத அடித்தளங்கள், இனத்தின் வரலாறு, கலாச்சார நிகழ்வுகள், சமூகத் தேவைகள், மொழிகள் மற்றும் மரபுகள் பற்றிய உண்மையான புரிதலை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் நமது சமூகத்தின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தவும், மதத்தை அனுமதிக்காத உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும் நாட்டின் பன்முக கலாச்சார தன்மையை தொந்தரவு செய்யும் தீவிதவாதத்திற்கு இடம் கொடுக்காமை.
  3. பாதுகாப்பு விடயங்களில் சமூகங்களுடன் ஈடுபடுவதற்கு முன் கல்வி, தொண்டு, தனிப்பட்ட மற்றும் உணவுச் சட்டங்கள் போன்ற விடயங்களில் சமூகங்களிடையே ஈடுபாட்டுடன் நம்பிக்கையை வளர்த்தல்.
  4. பின்வருவனவற்றை உள்ளடக்கும் ஒரு மத மற்றும் பன்முக கலாச்சார சட்டத்தை உருவாக்குதல்.
    • நாட்டின் மத மற்றும் பன்;முக கலாச்சாரத்தின் அழகு குறித்து இலங்கையரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்..
    • மத மற்றும் இன வேறுபாட்டைக் கொண்டாடுதல்.
    • வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் “பூச்சிய சகிப்புத்தன்மையை” செயற்படுத்துதல்.
    • பின்வருவனவற்றை உள்ளடக்கும் ஒரு மத நல்லிணக்கச் சட்டத்தை நிறைவேற்றுதல்:

      • மதக் குழுக்களிடையே பகை அல்லது வெறுப்பை வளர்ப்பது தொடர்பான சாத்தியமான மற்றும் உண்மையான சம்பவங்களை கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறை.
      • அடையாளம் காணப்பட்ட இந்த பிரச்சினைகள் சிறுபாண்மை மதத்தினர் மற்றும் இனத்;திடையே நீண்ட கால கருத்து வேறுபாட்டிற்குள் வருவதற்கு முன்னர் உடனடியாக அவற்றை தீர்த்ததல்.
      • பொது மக்களை வன்முறைக்குத் தூண்டும் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு மூலம் அமைதியை வெளிப்படையாக சீர்குழைக்கும் ஏந்தவொரு நம்பிக்கை அல்லது சித்தாந்தத்தைச் சேர்ந்த மதக் குழுக்கள் அல்லது அமைப்புக்களைத் தடை செய்தல்.
      • மதத் தீவிரவாத சம்பவங்களை அடையாளமிடல். மத தீவிரவாதச் செயல் ஒன்று நடந்தால், அது தொடர்பில் முடிவெடுப்பவர்கள் ஒரு முழு சமூகத்தின் பொறுப்புக்கும் குற்றவாளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
      • பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும், ஆதரிக்கும், தொடர்புடைய அல்லது வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்தால் எந்தவொரு அமைப்பையும் உடனடியாக தடை செய்தல்
      • நாட்டில் சிறுபாண்மையினருக்கு எதிராக தேவையற்ற தப்பெண்ணங்களை உருவாக்கக் கூடிய செய்திகள் தொடர்பில் ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தல். கருத்துச் சுதந்திரம் மற்றும் “பொறுப்புள்ள வெளிப்பாடு” ஆகியவற்றிற்கு இடையிலான நுட்பமான சமநிலையை பேணுதல், இது ஒன்லைன் மற்றும் ஒப்லைன் செய்தி வெளியீடுகளுக்கான அனைத்து ஊடக நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும்;.
      • மத மற்றும் பன்முக கலாச்சார பாதுகாப்பு குறித்து குறுக்கு-கலாச்சார சுற்று அட்டவணையை உருவவாக்குதல். அனைத்து மத மற்றும் சிறுபாண்மை இனக் குழுக்களின் தலைவர்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுவது கட்டாயமாக இருக்க வேண்டும். இங்கு அடிப்படை சிக்கல்கள் திறம்பட விவாதிக்கப்படும் ஒரு மன்றமாகயிருக்கும், மேலும் அவை தீர்க்கப்பட கூடிய முறை குறித்தும் முடிவெடுக்கப்படும்.
      • உறுதியளித்த அல்லது எந்தவொரு செயலையும் செய்ய முயற்சிக்கும் பின்வரும் செயல்கள் தொடர்பில் தனிநபருக்கு (துறவி, பாதிரிமார்கள், போதகர், இமாம், வயதானவர்,அலுவலக பொறுப்பாளர் ) அல்லது எந்தவொரு மதக் குழு அல்லது நிறுவனத்தில் அதிகார நிலையில் உள்ள வேறு எந்த நபருக்கும் அல்லது உறுப்பினருக்கும் எதிராக தடை உத்தரவை பிறப்பித்தல்.

        • வெவ்வேறு மதக் குழுக்களிடையே பகை, வெறுப்பு அல்லது கோபத்தை அல்லது விரோதப் போக்கை ஏற்படுத்துதல்.
        • ஒரு அரசியல் காரணத்தை ஊக்குவிப்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வது, அல்லது கட்சியின் காரணத்தையும் அல்லது எந்த மத நம்பிக்கையையும் பரப்புதல் அல்லது நடைமுறைப்படுத்துதல் என்ற போவையில் செயற்படுதல்.
        • எந்தவொரு மத நம்பிக்கையையும் பரப்புதல் அல்லது கடைபிடிப்பது என்ற போர்வையில் மோசமான ந்வடிக்கைகளை மேற்கொள்வது, அல்லது
        • எந்தவொரு மத நம்பிக்கையின் போர்வையிலும் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியான செயல்களை செய்தல். மேற்கூறிய எந்தவொரு பயங்கரவாத செயலையும் செய்ய எந்தவொரு மதக் குழு அல்லது மத நிறுவனம் அல்லது நபரையும் தூண்டுதல் அல்லது ஊக்குவித்தல்.
  1. அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய ஒரு “அமைதிக் குழுவை” ஏற்பாடு செய்து, மோதல்களைத் தவிர்ப்பதற்கும், நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் தொடர்புடைய சமூகங்களின் வாராந்த கூட்டங்கள் நடாத்தப்படுவதை உறுதி செய்தல்.
  2. சமூகத்திற்குள் எரிச்சலை ஏற்படுத்தாமல், பண்டிகைகள் ஒரு இணக்கமான சூழ்நிலையில் அனுசரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பல்வேறு திருவிழாக்களை கடைபிடிப்பதற்காக பல்வேறு சமூகங்களி;ன் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு நடத்தை விதிகளை நிறுவி விளம்பரப்படுத்துதல்.
  3. வகுப்புவாத இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டால் குற்றவாளிகளை அடையாளம் காணவும் வழக்குத் தாக்கல் செய்து வழக்கு தொடரவும், மத ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களின் நடவடிக்கைகளை பதிவு செய்ய வீடியோ / ஓடியோ எடுப்பவர்கள் மற்றும் கமராக்களை பயன்படுத்துபவர்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்
  4. வதந்திகளைக் கட்டுப்படுத்தவும், சரிபார்க்கவும் பயனள்ள மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்தல். அனைத்து சமுகங்களின் தலைவர்களுடனும் தகவல் தொடர்பு ஒளியலைகளை நிறுவுதல் மற்றுமு; உணர்ச்சிகளை தூண்டும் மற்றுமு; இனவெறி மற்றும் வெறுப்பு உரைகள் / சொற்களால் இனவாத பதற்றத்தைத் தூண்டும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல். எந்தவொரு தவறான வாந்திகளையும் அகற்றுவும், பொது மக்களுக்குத் அது தொடர்பில் தெரியப்படுத்தவும் ஊடகங்களையும் பிற ஒளியலைகளையும் பயன்படுத்துதல்.
  5. அரசு மற்றும் தனியார் துறை மாணவர்களிடையே எழுச்சியூட்டும் இலக்கியங்களை விநியோகிக்கவும், நல்லிணக்கம் என்ற விடயத்தில் போட்டி மற்றும் விவாதங்களை ஊக்குவிததல். பாடசாலை பாடத்திட்டத்தின் ஒருப் பகுதியாக மத மற்றும் இன வேறுபாடு மற்றும் பன்முக கலாச்சாரத்தை உள்ளடக்குதல்.
  6. குறிப்பாக இனவாத சூழலில் ஊணர்ச்சிகளை தூண்டக் கூடிய சம்பவங்கள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை கண்காணித்து சுருக்கமாகக் கூறுதல்,

    புத்தமதம், இந்து மதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு ஒரு பிரதான அமைச்சரையும் நான்கு இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்தல். தற்போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை இரண்டு மடங்காக்கி ஒவ்வொரு மதத்தி;லும் அந்தந்த மக்கட் தொகை விகிதத்தில் பட்ஜெட்டை விநியோகித்தல்.

  7. “Home Police”நிகழ்ச்சித் திட்டத்தை நிறுவுதல்..

    முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ).

    வருடாந்தம் 1,700 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவதுடன் அவர்களை “Home Police Programme” இற்காக இணைத்துக் கொள்ள முடியும், இது தற்போதைய வருடாந்த குடும்ப வன்முறை பற்றி புகார்களை 3,000 இலிருந்து 2,000 ஆக குறைக்கலாம்,

    மற்றும் இந்த செயன் முறையானது 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்.“Home Police Programme’ இன் விளைவாக மொழி சுமை குறைக்கப்படும்.