இலக்குகள்.

  • தேசிய இறையாண்மையையும் மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தையும் பாதுகாத்தல்.
  • நிலம், கடல் மற்றும் வான் எல்லை முகாமைத்துவம்.
  • பாதுகாப்பு களம் தொடர்பான விடயப்பரப்பில் சர்வதேச கூட்டுதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்களை கட்டியெழுப்புதல்.

Snow

செயற் திட்டம்

  1. தேசிய பாதுகாப்பை அதிகப்படுத்துதல்
  2. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ‘சகிப்புத் தன்மை இன்மை’ (“ணுநசழ வுழடநசயnஉந”) கொள்கையினை செயற்படுத்தல்.
  3. அனைத்து அங்கங்களுக்குமிடையில் திறம்பட தொடர்பாடலைப் பேணுவதற்காக, முப்படை மற்றும் காவல் துறையின் உளவுத்துறை செயற்பாடுகளுக்கு பொறுப்பாக ஒரு அங்கீகாரமளிக்கப்பட்ட தலைவரை நியமித்தல்.
  4. உளவுத் துறையினை தொழில் முறை சேவையாக கருதி, சிறந்த திறமைசாளிகளை கவர்ச்சிகரமான சம்பளத்திற்காக சேவையில் இணைத்துக் கொள்ளுதல்.
  5. உளவுத்துறை அதிகாரிகளை அரசி;யல் தலையீடுகளில் இருந்து பாதுகாப்பதற்கு தேவையான சட்டக் கட்டமைப்பை அறிமுகம் செய்தல்.
  6. உளவுத் துறை அதிகாரிகளை வெளிநாட்டு உளவுத் துறை அதிகாரிகளுடன் இணைப்பதுடன் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சியினை வழங்குதல்.
  7. கடலோர பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
  8. படை வீரர்களின் நலன் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான பயனுள்ள கட்டமைப்பை அமுல்;படுத்துதல்.
  9. பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களுடன் இணைந்தவாறு காவல் துறையினை எண்மயமாக்குதல்.
  10. கண்காணிப்புக் கெமராக்கள் மூலம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அமுல்;படுத்துவதன் மூலம் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளை எந்த இடத்திலும் அடையாளம் காணுதல்.

இலக்குகள்

நிதியின் ஊடாக சிறந்த இலங்கையை உருவாக்குதல்

  1. சிறந்த பிஸ்கால் முகாமைத்துவம்; இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முதலீடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்காக, வருவாயானது நியாயமான, பொறுப்பான மற்றும் திறமையான வழியில் உயர்த்தப்பட்டு செலவிடப்படுவதை உறுதி செய்தல்.
  2. துல்லியமான வறுமைக் குறைப்பு ; வீடுகளில் வறுமைக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளை மதிப்பிடும் 50 குறிக்காட்டிகள் மூலம் ஏழை வீடுகளை அடையாளம் காண நவீன தொழிநுட்பங்களை ஒதுக்குதல், மற்றும் வளர்ச்சியடைந்த நாட்டின் வறுமை மட்டத்தை குறைப்பதற்கு தேவையான முதலீடுகளை ஒதுக்குதல்.
  3. மனித மூலதனத்தின் அபிவிருத்தி ; ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை கல்வியை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தல், மற்றும் ஆண்டொன்றுக்கு மொத்தம் 360,000 மாணவர்களில் 50% ஆனவர்கள் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்தல். தொழில்நுட்ப, தொழில் முறை மற்றும் கல்வி பயிற்சியின் (TVET) தரத்தினை மறு பெயரிட்டு மேம்படுத்துதல், அத்துடன் ஆண்டொன்றுக்கு 360,000 மாணவர்களில் 40% ஆனவர்கள் TVET கல்வி நிலையத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதை உறுதி செய்தல், அதன் மூலம் வருடத்திற்கு 10% மாணவர்கள் மாத்திரமே திறமையற்ற தொழிலாளர் சந்தையில் இணைந்துக் கொள்வார்கள்.
  4. சிறந்த சமூகக் கொள்கை கட்டமைப்பு ; நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள், மற்றும் வேலைவாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கும், விவசாயத்துறையை மறுசீரமைப்பதற்குமான (விவசாயிகளின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பது, விவசாயிகளின் வீட்டு வருமானம், பாதுகாப்பான மற்றும் மலிவு விலையின் சமமான நுகர்வு, சத்தான உணவு ஆண்டு மற்றும் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு உள்ளடங்களாக) அரசாங்கத்தின் முன்னுரிமைகளை எட்டுவதற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல்.
  5. உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ; ஒரு வலுவான நீண்ட கால மற்றும் தூய்மையான பொருளாதார நிலைமைகளை உருவாக்குதல், இதன் மூலம் இலங்கையர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தல்.
  6. இலங்கையின் மக்கள் தொகை வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 190,000 ஆகும். எனவே, தற்போதைய பொருளாதாரத்தை பராமரிக்கும் பொருட்டு, மேலதிகமாக ஆண்டுக்கு 62,400 வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் அவசியமாகும்.

    (மூலம்: Jobless Growth, World Bank, 2018)

    வேலையின்மை விகிதத்தில் ஒவ்வொரு 1% குறைப்பிற்கும் மொத்த தனி நபர் உள்நாட்டு உற்பத்தி 3% அதிகரிக்கும் என்று ஒகுனின் சட்டம் கூறுகிறது.

    வேலையின்மையை குறைப்பதற்கு மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தினை நிறுவி செயற்படுத்துதல். இது மாதந்தோறும் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் தனியார்த் துறை முதலீடுகளுக்கு அரசு உதவும்.

    லாபர் வளைவானது, வரி விதிப்பு விகிதங்களுக்கும் அதன் விளைவான அரசாங்க வருவாயின் அளவிற்கும் இடையிலான உறவை விளக்குகிறது. இது வரி விதிக்கக் கூடிய வருமான நெகிழ்ச்சித் தன்மையின் கருத்தை விளக்குகிறது. உ.ம் வரி விதிப்பு விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வரி விதிக்கக் கூடிய வருமான மாற்றங்கள்.

    தற்போது நாட்டில் முதலீடுகள் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம் தவறான வரி விகிதங்களாகும், ஏனெனில் நமது தற்போதைய வரி விகிதங்கள் முதலீட்டாளர்கள் எங்கள் போட்டியாளர்களை விட அதிகமாக உள்ளனர், அது நாட்டினுள் முதலீடு செய்யப்படுவதனை ஊக்கப்படுத்தவில்லை.

    எனவே, நாட்டிற்கு உயர்ந்த அளவிளான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருவாய் அதிகரிக்கும் புள்ளியில் வரி விகிதத்தை பராமரித்தல் தேவைப்படுத்தப்படுகிறது.

    கிறீன்பீல்ட் மற்றும் பிரவுன்பீல்ட், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்க வரி மற்றும் சுங்க வரி கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதானது பொருளாதார வளர்ச்சி, மாவட்ட வரியான வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி என்பவற்றிற்கு அவசியமாகும்.

    ஆண்டு வருமான வரி
    (நேரடி வரி)
    (ரூ.மில்லியன்)
    அரசாங்க மொத்த வருமானம்
    (ரூ.மில்லின்)
    % அரசாங்க மொத்த வருமானத்தின் நேரடி வரி வீதம். % அரசாங்க மொத்த வருமானத்தின் மறைமுக வரி வீதம். ரூபாய் தேய்மானத்தின் விளைவாக பரிமாற்ற இழப்பு வெளிநாட்டு கடன்
    (ரூ மில்லியன்)
    2005 52,535 379,747 13.80% 86.20% 117,785 956,620
    2006 79,693 477,833 16.70% 83.30% 108,579 1,103,418
    2007 107,169 565,051 19.00% 81.00% 71,646 1,326,487
    2008 126,541 655,260 19.30% 80.70% 117,785 1,448,734
    2009 139,558 699,644 19.90% 80.10% 23,114 1,760,467
    2010 135,624 817,279 16.60% 83.40% -10,028 2,024,583
    2011 157,310 967,862 16.30% 83.70% 90,335 2,329,280
    2012 172,594 1,051,462 16.40% 83.60% 230,642 2,767,299
    2013 205,666 1,137,447 18.10% 81.90% -15,361 2,960,424
    2014 198,115 1,195,206 16.60% 83.40% -89,335 3,113,116
    2015 262,583 1,454,878 18.00% 82.00% 285,091 3,544,031
    2016 258,857 1,686,061 15.40% 84.60% 186,650 4,045,796
    2017 274,562 1,831,531 15.00% 85.00% 225,223 4,718,618
    2018 310,450 1,919,974 16.20% 83.80% 1,063,218 5,959,547
    மொத்தம் 2,481,257 2,405,344

    *வருமான வரி (நேரடி வரி)

    வருமான வரி
    (நேரடி வரி)

    =

    கூட்டிணைக்கப்பட்ட மற்றும் கூட்டிணைக்கப்படாத வரி

    +

    நீங்கள் சம்பாதிக்கும் போது செலுத்தும் வரி (PAYE)

    +

    பொருளாதார
    சேவைக் கட்டணம்

    +

    வட்டி
    வருமானத்திற்கான வரி.

    செயற்திட்டம்

    கடந்த 14 ஆண்டுகளில், அரசாங்கத்தின் நேரடி வரி வருவாய் மொத்த அடிப்படையில் ரூ 2,481 பில்லியனாக இருந்த அதே வேளை, மேலதிகமான ரூ 2,405 பில்லியன் ரூபா தேய்மானம் காரணமாக கடந்த வருடம் வெளிநாட்டுக் கடன் ரூ 5,959 பில்லியனாக அதிகரித்தது. எனவே, ரூபாய் தேய்மானமானது 2% - 3% இற்கு அப்பால் தேய்வடைவதை நிறுத்துவதற்கு முதலீடுகளை கொண்டு வருதல் அவசியமாகின்றது, விஷேடமாக வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் நேரடி வரி வருமானத்தை பொருட்படுத்தாத ஏற்றுமதியை அதிகரித்தல் என்பன முக்கியமானவை.

    உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான கொள்கைகள்

    2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.1,919 பில்லியனாகும். தவிர்ப்புக்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் ஒரு செயற்கை உளவுத்துறை (AI) அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் (சுவிஸர்லாந்தில் ஐடீஆ றுயவளழn இனை அறிமுகப்படுத்திய பின்பு 10% சுங்க வருவாய் அதிகரித்தது) அதன் பிறகு, அரசாங்க வருவாய் 15% அதிகரிக்கப்படுவதுடன் அதன் மூலமான மேலதிக வருமானமாக ரூ.287 பில்லியன் பெறப்பட முடியும்.

    1. பின்வரும் தொழில்த் துறைகளில் தற்போதுள்ள கூட்டிணைக்கப்பட்ட வரியின் விகிதத்தினை பேணுதல்.
      • காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியியல் தவிர்ந்த நிதி சேவைகள்
      • மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கில்கள் தவிர்ந்த ஏனைய மொத்த விற்பனை.
      • புகையிலை தயாரிப்புக்களின் உற்பத்தி.
      • தொடர்பாடல்.
      • சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடர்பான செற்பாடுகள்.
      பங்கு இலாப வரி மற்றும் மூலதன ஆதாய வரி என்பவற்றின் விகிதத்தை 0% ஆக குறைத்தல
      (இது மேலதிக வேலைவாய்ப்பிற்கு உதவும்)
    2. தற்போதைய கூட்டிணைக்கப்பட்ட வரி விகிதத்தினை 0% ஆக குறைத்து, டீழுஐ உடனான ஒப்பந்தத்தின் மூலம் புதிய முயற்சியாளர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கும் பின்வரும் தொழில்துறைகளுக்கு குறைக்கப்பட்ட விகித உத்தரவாதத்தை வழங்குதல்.
      • கல்வி
      • தகவல் சேவை செயற்பாடுகள்
        (ஏதேனும் வகையான டீPழு, முPழு, தொகுப்பிற்கான உட்கட்டமைப்பு கூறு, தரவு செயலாக்க சேவைகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள், வலைத்தளங்கள், செய்தி பிரதிநிதிகள் மற்றும் செய்தி முகவர்களின் நடவடிக்கைகள், ஊடகத்திற்கான படம் மற்றும் அங்கங்கள், கணினி அடிப்படையிலான தொலைப்பேசி தகவல் சேவைகள், ஒப்பந்த அல்லது கட்டண அடிப்படையிலான தகவல் தேடுகை சேவைகள் மற்றும் செய்தி துண்டாடல் சேவைகள், பத்திரிக்கை துண்டாடல் சேவைகள் மற்றும் ஏனைய எண்முறை சேவைகள்)
      • மனித சுகாதார செயற்பாடுகள்.
      • வான் போக்குவரத்து
      • மோட்டார் வாகனங்கள், டிரைலர்ஸ் மற்றும் செமி டிரைலர்ஸ் உற்பத்தி.
      • கழிவுகளை சேமித்தல், முறைமைப்படுத்தல் மற்றும் அகற்றல் செயற்பாடுகள்; பொருட்கள் மீட்பு.
      • தண்ணீர் சேமிப்பு, முறைமைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல்.
      • கழிவு நீர்.
      • ஏனைய போக்குவரத்து சாதனங்களின் உற்பத்தி
      • மீன் பிடி மற்றும் மீன் வளர்ப்பு.
      • மாற்று செயற்பாடுகள் மற்றும் கழிவு முகாமைத்துவ சேவைகள்.
    3. 1 மற்றும் 2 ஆம் குறிப்புக்களில் சொல்லப்படாத தற்போது காணப்படுகின்ற முயற்சியாளர்களுக்கான தற்போதைய கூட்டிணைக்கப்பட்ட வரி விகிதத்தினை 12% ஆக குறைத்தல்.
    4. 1 மற்றும் 2 ஆம் குறிப்புக்களில் சொல்லப்படாத புதிய முயற்சியாளர்களுக்கான தற்போதைய கூட்டிணைக்கப்பட்ட வரி விகிதத்தினை 12% ஆக குறைத்தல் மற்றும் அனைத்து துறைகளுக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்ட விகிதத்தை உத்தரவாதப்படுததுதல் (மேல் மாகாணத்தில் ) , எட்டு மாகாணங்களுக்கும் 80% சலுகை வழங்கப்படுதல், இதன் மூலம் 2.4% ஆன பயனுள்ள விகிதத்தை வசூலிக்க முடியும்(இது மாவட்ட ரீதியாக கிராமப் புறங்களில் மேலதிக வேலை வாய்ப்புக்ககை உருவாக்க உதவும்)
    5. மாதாந்த வருமானம் ரூ.500,000 இலிருந்து ஆரம்பிப்பவர்களுக்கு PAYE வரி 12% அறவிடப்படும்.

    இலங்கை சுங்கம் தொடர்பான கொள்கைகள்.

    2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.1,919 பில்லியனாகும். தவிர்ப்புக்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் ஒரு செயற்கை உளவுத்துறை (AI) அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் (சுவிஸர்லாந்தில் ஐடீஆ றுயவளழn அனை அறிமுகப்படுத்திய பின்பு 10% சுங்க வருவாய் அதிகரித்தது) அதன் பிறகு, அரசாங்க வருவாய் 15% அதிகரிக்கப்படுவதுடன் அதன் மூலமான மேலதிக வருமானமாக ரூ.287 பில்லியன் பெறப்பட முடியும்.

    1. சுங்கத்தில் நிலவும் 7,162 ர்ளு குறியீடுகளில் 90% ஆன சுங்க வருவாய் 500 ர்ளு குறியீடுகளில் ஊடாக உருவாக்கப்படுகின்றன (6-எண்கள்). 90% ஆன சுங்க வருவாயினை பெற்றுத் தரும் 500 ர்ளு குறியீடுகள் மறுசீரமைக்கப்படும், இது மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவின் தரப்படுத்தலாகும் (இது உள்நாட்டு தொழில்த் துறைகள் மற்றும் மேலதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் உதவும்). அதன் விளைவாக, சுங்க வருவாய் 10% ஆல் அதிகரிக்கப்பட முடியும்.

    அரசாங்க மூலதன முதலீடு.

    1. அரசாங்க மூலதன முதலீடானது பொது முதலீட்டு நிகழ்ச்சி (PஐP) என அறியப்படுகின்றது, இங்கு பல காலமாக இலங்கையர்களுக்கு நன்மை விளைவிக்கப்படுகின்றது, சில கடன் முறைமைகள் மூலம் அவர்களுக்கு பணம் செலுத்துவது நியாயமானதும் அதிக பயனுடையதுமாகும்.
      அறிவார்த்த நிதி ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் நிதியின் பங்கை தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு மிகவும் சமமாக விநியோகி;க்க உதவும் வகையில் பொறுப்புள்ள விதத்தில் மற்றும் நிலையான முறையில் கடன் செய்து கொடுக்கப்படும்.

    அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவு

    1. துல்லியமான வறுமைக் குறைப்பு, ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, பல்கலைக்கழக, தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி கல்வி என்பன அவசிய செலவுகளாக கணக்கிலெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக செலவு செய்யப்படல்.
    2. இலங்கை கடனின் மூலமாக இந்த செலவுகளுக்கு நிதியளிப்பதன் மூலம் இலகு வழிமுறையை கையாளுகின்றது. இது நீண்ட காலத்திற்கு ஏற்றதல்ல, இது போன்ற கடன்கள் இன்றைய தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான சுமையை எதிர்கால சந்ததியினருக்கு கைமாற்றும்;. தொடர்ச்சியான வருவாயுடன் தொடர்ச்சியான செலவீனங்ளை சந்திப்பதே ஒரு சிறந்த மற்றும் வலுவான அணுகுமுறையாகும். எனவே, எங்கள் வரி முறையின் வினைத்திறனை உறுதிப்படுத்த நாம் தொடர்ந்தும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

    இலங்கைக்கான எதிர்கால கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம்.

    1. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு இலங்கைக்கான எதிர்கால கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடலுக்கு பொறுப்பாகும்.
    2. பொருளாதார பகுப்பாய்வு செய்யப்பட்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட எந்தவொரு கொள்கையையும் சரி பார்க்க நிதி அமைச்சை பயன்படுத்தலாம்.
    3. வரவு செலவுத் திட்டத்தின் உறுதிகளின் செயற் திறனை கண்காணிக்க தகவல் முகாமைத்துவ முறைமை (MIS) இனை அமுல்ப்படுத்துதல்
    4. அரசாங்க மூலங்கள் மற்றும் சொத்துக்களின் அதிகப்படியான பயன்பாடு தொடர்பில் கண்காணிப்பதற்கு சொத்து முகாமைத்துவ முறைமை அமுல்ப்படுத்தப்படல்.

இலக்குகள்

To increase GDP per capita from

USD 4,000 to USD 12,000

தற்போது இலங்கையில்
தற்போது இலங்கையில (19 – 23 வருட மாணவர்களுக்கான சதவிகிதம்)
2020 – 2025 இற்கான இலக்கு
(மாணவர்ச் சேர்க்கை)
இலக்கை அடைவதற்கு தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 7% 25,200 16.67% 60,000 தடவைகளால 2.38 அதிகரிப்பு
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 4.1% 15,000 29.23% 105,228 தடவைகளால 7.1 அதிகரிப்பு
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. 4.1% 15,000 4.1% 15,000
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) 22% 79,200 40% 144,000 தடவைகளால 1.8 அதிகரிப்பு
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) 62.8% 225,600 10% 36,000 மூலம் குறைகிறது 6.28 அதிகரிப்பு
வருடாந்த மாணவர்கள். 360,000 360,000
  • தற்போது உயர் தரம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 218,101 இலிருந்து 300,000 ஆக அதிகரித்தல் மற்றும் அதிகமான மாணவர்கள் STEM பாடங்கள் பயில்வதனை உறுதி செய்தல்.
  • சாதாரண தர பரீட்சைக்கு வருடாந்தம் 360,000 மாணவர்கள் அமர்வதை உறுதி செய்தல்.
  • முழுமையான வசதிகளுடன் கூடிய தேசிய பாடசாலைகளின் தரத்துடன் பொருந்துமாறு மாகாண சபைகளின் கீழ் 771 பாடசாலைகளை உருவாக்குதல்.
  • மாணவரகளின் தொகையை 1,500 ஆல் அதிகரிப்பதற்கு போதுமான இட வசதிக் காணப்படும் பாடசாலைகளை தெரிவு செய்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல்.

செயற் திட்டம்

  1. ஆரம்ப நிலை, பல்கலைக்கழக மற்றும் தொழில்பயிற்சி கல்வி என்பவற்றிற்கு வருடாந்தம் 10% அதிகரிப்புடன் கூடிய ரூ.200 பில்லியன் இனை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குதல்.
  2. வாரத்தின் ஐந்து நாட்களுக்கும் ஐந்து புதிய வகை பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்துதல், அவற்றை காலை உணவை வாங்க முடியாத குழந்தைகளுக்கு துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூப்பனை வழங்குவதன் மூலம் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
    இந்த புதிய வகை பிஸ்கட்டுக்களானது சந்தைகளிலும் கிடைக்கக் கூடிய வசதிகளை செய்தல்; துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் ஊடாக இலவச புத்தகங்கள், மற்றும் ஏனைய கொடுப்பனவுகள், பாடசாலை சீருடை, காலுறை மற்றும் பாதணிகள் என்பவற்றின் விநியோகத்தையும் ஆரம்ப நிலை முதல் இரண்டாம் நிலை பாடசாலை மட்டம் வரையில் தொடர்ந்து செய்தல்.
  3. தரமான மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப நிலைப் பாடசாலைகள் அமைப்பதற்கு தனியார் துறைக்கு நிதியளித்தல்.
  4. ஆரம்ப நிலை பாடசாலைகளுக்கான வீடியோ அடிப்படையிலான மற்றும் தேவையான ஏனைய ஆசிரியர்ப் பயிற்சிகளை எளிதாக்குதல்.
  5. முழுமையான வசதிகளுடன் கூடிய தேசிய பாடசாலைகளின் தரத்துடன் பொருந்துமாறு மாகாண சபைகளின் கீழ் 771 பாடசாலைகளை உருவாக்குதல்.
    • 276 பிரதேச சபைகளில் இருந்தும் 2 பாடசாலைகள் (552 பாடசாலைகள் )
    • 41 நகர சபைகளில் இருந்தும் 3 பாடசாலைகள் ( 123 பாடசாலைகள் )
    • 24 மாநகர சபைகளில் இருந்தும் 4 பாடசாலைகள் ( 96 பாடசாலைகள் )

    இந்த 771 பாடசாலைகளில் அதே தேசிய அளவிளான பிரபலமான பாடசாலைப் பெயர்கள் மற்றும் நிர்வாகம் என்பன பின்பற்றப்பட வேண்டும்.

    மாணவரகளின் தொகையை 1,500 ஆல் அதிகரிப்பதற்கு போதுமான இட வசதிக் காணப்படும் பாடசாலைகளை தெரிவு செய்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல்..

    அதன் விளைவாக, இந்த 771 பாடசாலைகளிலும் சராசரியாக 1,500 மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான இட வசதி அதிகரிப்பதுடன் இது 1,156,500 மொத்த மாணவர்த் தொகையாக உயரும்.

  6. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமான பாடசாலைகளின் இருக் கிளைகளை கிடைக்கக் கூடியதாக்குதல்.
    மொத்தமாக 50 பாடசாலைகள் கட்டப்படும், ஒவ்வொரு பாடசாலையும் 6,000 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான இட வசதியை கொண்டிருக்கும், எனவே மொத்த மாணவர் கொள்; திறன் 300,000 ஆல் அதிகரிக்கப்படும்.
  7. வெளிநாட்டிற்கு சேவை செய்யும் தொழில்த் தகைமையுடையோர்களை ஊக்குவிக்கும் முகமாக சர்வதேச பாடசாலைகளை நிறுவுவதனை ஊக்குவிக்கும் பொருட்டு 0% கூட்nணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT என்பவற்றை ஆரம்பித்தல்.
    தற்போது, ஆங்கிலம் பேசக் கூடிய தொழில் தகைமையுடையோர் நமது நாட்டில் ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளின் குறைபாடு காணப்படுவதால் தனது பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் சேவை செய்கின்றனர்.
  8. வருடத்தின் மொத்த மாணவர்களில் 50% ஆனோரை பட்டதாரிகளாக்கும் இலக்கை அடைந்து கொள்ளும் பொருட்டு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT போன்ற சலுகைகளை கொடுப்பதன் மூலம் மருத்துவக் கல்லூரிகள் தவிர்ந்த தனியார் பல்கலைக்கழங்களை நிறுவுவதற்கு ஊக்கமளித்தல்.
  9. அனைத்து பாடசாலை செயற் திட்டங்களுக்குமான அறிவுறுத்தல் ஒளி நாடாக்கள் உள்ளடக்கிய கட்டணம் இல்லாத ஒன்லைன் தளத்தை அறிமுகம் செய்தல்.
  10. மாணவர்களது வாழ்வு மற்றும் சமூகத் தொடர்பு திறன்களை கற்பிக்க ஒளி நாடா வகுப்புகனை பயன்படுத்தல்.
  11. உயர் தர மாணவர்களுக்கு தொழில் ஆலோசனைகளை வழங்குதல்.

  12. Snow

    (மூலம் - காவல்த் துறை திணைக்களம்)

    2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 99,036 குற்றஞ்சாட்டப்படாத கைதிகள் இருந்தனர், இவர்களில் 6.8% ஆனவர்களுக்கு பாடசாலைக் கல்வி கிடைக்கப் பெற்றிருக்கவில்லை, 52.9% ஆனோர் 5 ஆம் தரம் வரையில் மாத்திரமே கல்வி கற்றிருந்தனர் மற்றும் 85.1% ஆனவர்கள் 8 ஆம் தரம் வரையில் மாத்திரம் படித்திருந்தார்கள். எவ்வாறாயினும், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் உயர் தரத்திற்கு உட்பட்டவர்கள் 3.1% ஆனவர்கள் மாத்திரமேயாகும்.

    எனவே, ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது உயர்தரம் வரையில் கல்வி கற்றால் சிறைச்சாலைகள் மூடப்படலாம்.

  13. துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு செல்லாத 5,000 சிறுவர்களை புவியில் ரீதியாக அடையாளம் கண்டு (Geo-tag) அவர்களின் குடும்பங்களின் வருமானத்தை ஆலோசனை உதவி மூலம் அதிகரித்தல், இதனால் இந்த சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும். இதனால் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கையை 5,000 இலிருந்து 0 ஆக குறைக்க முடியும்.
  14. சமூக அபிவிருத்து முயற்சிகளின் அமுலாக்கம் மற்றும் துல்லியமான வறுமை குறைப்பு என்பவற்றின் ஊடாக பாடசாலையிலிருந்து இடையில் விலகுபர்களின் எண்ணிக்கையை 30,000 இலிருந்து 0 ஆக குறைத்தல்.
  15. நாடு முழுவதும் உள்ள 10,194 அரசாங்க பாடசாலைகளிலும் இருந்து உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டிய தேவைபாடுள்ள பாடசாலைகளை தெரிவு செய்தல்.
  16. குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இணங்கண்டு உன்னிப்பாக கண்காணித்தல்.
    • 50 இற்கும் குறைவான மாணவர்களுடன் 1,486 பாடசாலைகள்
    • 50 – 100 இற்கும் இடைப்பட்ட மாணவர் எண்ணிக்கையுடன் 1,560 பாடசாலைகள்.
    • 9 ஐ விடவும் குறைவான எண்ணிக்கை கொண்ட ஆசிரியர்களுடன் 3,133 பாடசாலைகள்.
  17. அனைத்து பாடசாலைகளுக்கும் சுத்தமான தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகள் காணப்படுவதை உறுதி செய்தல்
  18. தனியார் கல்விக்கு 0% VAT மற்றும் 0% கூட்டிணைக்கப்பட்ட வரியினை அறிமுகப்படுத்துதல்.

    இந்த வரி சலுகையானது அடுத்த 25 வருடங்களுக்கு தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை கட்டுவதற்கு உத்தரவாதமளிக்கிறது.

  19. கொழும்பில் 6 முக்கிய தாழ்வாரங்களில் பிரபலமான பாடசாலைகளை திறத்தல் - காலி, ஹோமாகம, கடுவலை, நிட்டம்புவ மற்றும் நீர்கொழும்பு. இச் செயற்பாடு வீதிப் போக்குவரத்து நெறிசலைக் குறைப்பதுடன் கொழும்பிற்கு வெளியே பாடசாலைகளின் தரத்தினை உயர்த்துகிறது.
  20. குறைவான செயற்திறன் கொண்ட மாணவர்களுக்கு தரம் ஆறிலிருந்து வேறு பாடத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இரு தரம் கணித பாடம் கற்பித்தல்.
  21. தரம் ஆறிலிருந்து விஞ்ஞான பாடத்தை ஆங்கிலத்தில் கற்பதற்கான தெரிவினை அறிமுகம் செய்தல்.
  22. தனிப்பட்ட நிதியியல் முகாமைத்துவத்திற்காக தரம் 10 மற்றும் 11 மாணவர்களை வணிக பாடத்தை தெரிவு செய்வதற்கு ஊக்கமிளித்தல்.
  23. ஆங்கிலத்தை “இணைப்பு மொழியாக” இலங்கையில் அடையாளப்படுத்துதல்.
    உ.ம். தமிழ் மொழியை படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மொழியினை படிக்கும் தெரிவினை வழங்குதல், அதே போல் சிங்கள மொழியை படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மொழியினை படிக்கும் தெரிவினை வழங்குதல்.
  24. தரம் 1 தொடக்கம் 13 வரையில் கற்பிக்கப்பட்ட அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர் பயிற்சி மற்றும் கற்றல் ஒளி நாடாக்கள் கிடைக்க கூடியதாக இருப்பதனை உறுதி செய்தல்.
  25. வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றாற் போல் மாணவர்களை விஞ்ஞானம், கணிதம், வணிகம், உயிரியல் மற்றும் பொறியியல் பிரிவுகளை தெரிவு செய்ய ஊக்கமளித்தல்.
  26. பாடசாலைகளின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கூடங்களின் கொள்த்திறனை அதிகரிக்கும் போதே, தரம் 12 மற்றும் 13 இற்கான மாணவர்ச் சேர்க்கையை 210,000 இலிருந்து 300,000 ஆக அதிகரித்தல்.
  27. மாவட்ட அளவிலான பாடசாலைக் கல்வி முறையின் தரத்தை கண்காணிக்க ஒரு தளத்தை உருவாக்குதல்.
    தளமானது பாடசாலை தொடர்பான பொதுவான தரவுகளை உள்ளடக்க வேண்டும் (நகர மற்றும் கிராமபுற பாடசாலைகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை) மற்றும் செயற் திறமான திரை காணப்படல் (இடை விலகல் விகிதம்,செயற்படக் கூடிய கழிவறைகளுடனான பாடசாலைகள், குடிநீர் வசதிகளுடனான பாடசாலைகள் போன்றன).
  28. அரசாங்க,தனியார், சர்வதேச மற்றும் ஏனைய பாடசாலைகள் மற்றும் ஆரம்ப நிலைப் பாடசாலைகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு குழுவை அமைத்தல்.
  29. கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தினை ஒருங்கிணைத்தல், கணினிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் பாடசாலைகளில் இணைய இணைப்பை உறுதி செய்தல்.
  30. ஒன்லைன் தளத்தினூடாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கக் கூடியதாக இருப்பதனை உறுதி செய்தல்.
  31. தகவல் தொழில்நுட்பத்தை கற்பிக்கும் முறைகள் தொடர்பான அறிவுறுத்தல் ஒளிநாடாக்களை ஆசிரியர்கள் மத்தியில் பகிர்தல்.
  32. ஆசிரியர்கள் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிறாமப்புற பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் நேரடியான வகுப்புக்களை வீடியோ தொடர்பாடலை பயன்படுத்தி கற்பித்தல்.
  33. ஆசிரியர்கள் தங்களது தகுதிக்கு பொருத்தமான வெற்றிடங்களை கொண்ட பாடசாலைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள ஒன்லைன் விண்ணப்ப முறைமையினை விருத்தி செய்தல்.
  34. ஆசிரியப் பயிற்சிக்கான சான்றிதழுடன் கூடிய நிகழ்ச்சி திட்டத்தை நிறுவுதல்.
  35. ஒவ்வொரு பாடசாலையிலும் தரம் 6 முதல் 13 வரையான மாணவர் வெற்றிடங்களை ஒன்லைன் தளம் புதுபிக்கும்.
  36. மாவட்ட, தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலிருந்தான விளையாட்டு பற்றிய பதிவுகளுடனான வளைத்தளத்தை உருவாக்கி ஒவ்வொரு மாவட்ட மாணவர் விளையாட்டு வீரர்களின் தற்போதைய நிலையை புதுபித்தல்.
  37. பயிற்ச்சி; ஒளிநாடாக்களுடன் கூடிய ஒன்லைன் பயிற்சித் தளத்தை நிறுவுவதன் மூலம், மாணவர்கள் விளையாட்டுக்கு தேவையான பயிற்சிகளை பெற்று சர்வதேச மட்டங்களை அடைவதற்கு அவர்களின் செயற் திறனை மேம்படுத்துதல்.
  38. தற்போது காணப்படுகின்ற பாடசாலை கிரிகட் மைதானங்களை அபிவிருத்தி செய்தல்.
  39. பாடசாலையிலோ அல்லது ஒன்லைன் மூலமாகவோ சாதாரண தர மாணவர்களுக்கான கட்டாயமான மேலதிக கணித வகுப்புக்களை வழங்குதல்.
  40. ஆறுப் பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற ஆனால் கணிதத்தில் தேர்ச்சிப் பொறாத மாணவர்களுக்கு உயர் தரம் படிக்கும் போதே மேலதிகமாக கணித வகுப்புகளில் கலந்து கொண்டு கணித பாட பரீட்சையினை எழுதி சித்தியடைய வாய்ப்பளித்தல்.

    அவர்களின் சாதாரண தரத்தின் கணிதப் பாட தேர்ச்சியின் அடிப்படையில், உயர் தர இறுதிப் பரீட்சைக்கு அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

  41. மாணவர்களின் வருகை, செயற்திறன் மற்றும் நடத்தை என்பவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்கள் பாடசாலையை விட்டு இடையில் வெளியேறும் அபாயத்தை அணுமானித்தல்.
  42. வாராந்த கலை மற்றும் கைவினை நிகழ்ச்சிகள், விளையாட்டு, வாசிப்பு மற்றும் கதை சொல்லுதல் போன்ற மாணவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயற்பாடுகளுக்காக பாடசாலை நேர அட்டவனையில் ஒரு பாட நேரத்தை ஒதுக்குதல்,
  43. பாடசாலையை விட்டு இடையில் மாணவர்கள் விலகுவதற்கு காரணமாக அமையும் கடினமான பாடம் என கொள்;ளக் கூடிய பாடங்களுக்கு பாடசாலை முடிந்த பின்னர் மேலதிக வகுப்புக்களை வழங்குதல்.
  44. பாடசாலையை விட்டு இடையில் மாணவர்கள் விலகக் கூடியவர்கள் என கருதப்படக் கூடிய மாணவர்களளுக்கு உதவித் தொகை மற்றும் புலமைப் பரிசில் போன்ற அமைப்பில் நிதியினை ஒதுக்குதல்.
  45. பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்துதல்.
  46. இலவச அணுகலுடன் கூடிய ஒன்லைன் நூலகங்களை அறிமுகம் செய்தல்.
  47. ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் திட்ட அடிப்படையிலான STREAM பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்தல் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், வாசிப்பு, பொறியியல், கலை மற்றும் கணிதம்)

    ஒவ்வொரு பாடத்திலும் கணிதம், விஞ்ஞானம், வாசிப்பு மற்றும் பொறியியல் ஆகியவை குழுக்களில் கற்க வேண்டிய மாணவர்களுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

  48. கட்டாய சுகாதார பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் விசேடமாக, இளம் பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் சரியான மாதவிடாய் சுகாதாரம் பற்றி கற்பிக்கப்படல்.
  49. அவசர கால சுகாதார பொருட்கள் மற்றும் நப்கின்களை அகற்றக் கூடிய சரியான கழிவறை வசதி கிடைக்கக் கூடியதாக இருப்பதனை உறுதி செய்தல்.
  50. மாதவிடாய் காலங்களிலான மனப் பாதிப்பை குறைப்பதற்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களது கல்வி நிலை மேம்படுத்தப்பட வேண்டும்.
  51. அனைத்து ஆசிரியர்களுக்கும் போதுமான முதலுதவி பயிற்சி இருப்பதையும் முதலுதவி பயிற்சி பாடசாலை கல்வித் திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதையும் உறுதி செய்தல்.
  52. பெண்கள் பாடசாலைகளை நிறுவுவதற்கும் புதுபிப்பதற்கும் முன்னுரிமை வழங்குதல். மேலதிகமாக கல்வியை ஊக்குவிப்பதற்கு சிறுமிகளுக்கு உதவித் தொகையை வழங்குதல்.
  53. புவியியல் மற்றும் விஞ்ஞான பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்று சூழல் நட்பு, கழிவுகளை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி என்பவற்றை கொண்ட கட்டாய சுற்று சூழல் கல்வியை அறிமுகப்படுத்துதல்.
  54. வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் இலங்கைக்கு வருகைத் தரும் போது உள்நாட்டு பாடசாலைகளுக்கு வருவதற்கும் உள்நாட்டு பரீட்சைக்கு தோற்றுவதற்கும் அனுமதியளித்தல்.
  55. நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும், வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அறிவு மற்றும் புரிதலை வலுப்படுத்துவதற்குமாக, ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை கற்றல் மாணவர்களுக்கு பாடத்திடடங்களை அறிமுகப்படுத்துதல்.
  56. சாதாரண தரத்திற்கு மேலாக கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இருப்பதனை உறுதி செய்தல்.
  57. விஞ்ஞான பிரிவு காணப்படும் பாடசாலைகளை 1,029 இலிருந்து 2,029 ஆக அதிகரிக்கும் பொருட்டு 1,000 பாடசாலைகளை அதிகரித்தல்.
  58. நமது கல்வி முறைமையின் தரத்தினை மதிப்பீடு செய்யும் பொருட்டு சர்வதேச மாணவர் மதிப்பீட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கெடுத்தல் (PISA)
  59. 15 வருடங்கள் பழைமையான பாடசாலை பேரூந்து மற்றும் வான்களை கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கு வாகனம் வாங்குவதற்கு வரி சலுகையுடன் கூடிய அனுமதியை வழங்குதல்.
  60. பாடசாலையை அடைவதற்கு பிரதான வீதிக்கு வருவதற்கு 2 கிலோ மீற்றரை விட அதிகமான தூரத்தை நடந்தே கடக்கும் மாணவர்களுக்காக கிராமங்களுக்கு 2,000 சிறிய ரக பேரூந்துக்களை வழங்குதல்.
  61. சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிற்காக காத்திருக்கும் காலத்தை 2 மாதங்களாக குறைத்தல்.

    சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்றிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான முன் உயர் தர வகுப்புக்களை அறிமுகம் செய்தல்.

    இலங்கையில் தற்போதைய பரீட்சை பெறுபேறு காத்திருப்புக் காலம் 4 மாதங்கள் ஆகும். அதற்கு மேலதிகமாக 2 மாதங்கள் பபடசாலையில் உயர் தர வகுப்புகள் ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டும். எனவே, மாணவர்களது 6 மாத காலப் பகுதி எந்த வித பயனும் இன்றி கழிந்து போகின்றன.

  62. உயர்தர பரீட்சை பெறுபேற்றிற்காக காத்திருக்கும் காலத்தை 2 மாதங்களாக குறைத்தல்.

    இலங்கையில் தற்போதைய பரீட்சை பெறுபேறு காத்திருப்புக் காலம் 4 மாதங்கள் ஆகும்.

  63. உயர் தரத்திற்கு பின்பு பல்கலைக்கழகம் செல்வதற்கான காத்திருப்புக் காலத்தினை 6 மாதங்களாக்குதல்.

    இலங்கையில் தற்போதைய காத்திருப்புக் காலமானது பெறுபேற்றிற்காக காத்திருக்கும் 4 மாதங்கள் உள்ளடங்ளாக 17 மாதங்கள் ஆகும்.

இலக்குகள்

To increase GDP per capita from

USD 4,000 to USD 12,000

தற்போது இலங்கையில்
(மாணவர்களுக்கான சதவிகிதம் 19 – 23 வருட)
2020 – 2025 இற்கான இலக்கு
(மாணவர்ச் சேர்க்கை)
தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு இலக்கை அடைவதற்கு
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 7% 25,200 16.67% 60,000 அதிகரிப்பு 2.38 தடவைகளால்
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 4.1% 15,000 29.23% 105,228 அதிகரிப்பு 7.1 தடவைகளால்
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. 4.1% 15,000 4.1% 15,000
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) 22% 79,200 40% 144,000 அதிகரிப்பு 1.8 தடவைகளால்
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) 62.8% 225,600 10% 36,000 குறைப்பு 6.28 தடவைகளால்
வருடாந்த மாணவர்கள். 360,000 360,000
  • அரசாங்க பல்கலைக்கழக பட்டதாரிகளின் எண்ணிக்கையை 25,200 இலிருந்து 60,000 ஆக அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களின் பட்டதாரிகள் எண்ணிக்கையை 15,000 இலிருந்து 105,228 ஆக அதிகரித்தல்.
  • வருடாந்த மொத்த பல்கலைகழக பட்டதாரிகளின் எண்ணிக்கையை 180,000 இலிருந்து 360,000 ஆக அதிகரித்தல்.

செயற் திட்டம்

  1. அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர் உள்ளெடுக்கும் திறனை 30,000 இலிருந்து 60,000 ஆக அதிகரித்தல்.
  2. குறைந்த தர மதிப்பெண் கொண்ட பகுதிகளை மேம்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள பல்கலைக்கழக தர வரிசைகளை மேம்படுத்துதல்

    உலக உயர் கல்வி பல்கலைக்கழக தரவரிசைகளின் தரப்படுத்தல் தடவைகள

    • கற்பித்தல் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல்
    • தொழில்த்துறை வருமானத்தை அதிகரித்தல்
    • சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
    • வெளியீடுகள் மற்றும் மேற்கோள்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
  3. அனைத்து பட்டப்படிப்புக்களுக்கும் வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதத்தினை வழங்குதல். வேலை வாய்ப்பு சந்தையில் கேள்வியில்லாத அனைத்து பட்டப்படிப்புக்களையும் நிறுத்துதல்.
  4. பல்கலைக்கழக பட்டப்படிப்புக்களை தொழிற் சந்தையிலும் எதிர்கால தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுத் தரக் கூடியவாறான கல்வி அமைப்பைக் கொண்டு மறுசீரமைத்தல்.
  5. அரச மருத்துவக் கல்லூரியின் கொள்திறனை 1,300 இலிருந்து 2,000 ஆக அதிகரித்தல் மற்றும் பல் வைத்திய துறைக்கான உள்ளீர்ப்பை அதிகப்படுத்தல். தனியார் மருத்துவப் பல்கலைக்கழங்களை தடை செய்தல்.
  6. அரச மற்றும் பகுதியளவு அரசாங்க பல்கலைக்கழகங்களில் ஒன்லைன் தளத்தின் ஊடாக விரிவுரைகள் கிடைக்கக் கூடியதாக இருத்தலை உறுதிப்படுத்தல்.
  7. இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு மாணவர் கடன் வசதிகளையும் சிறப்பாக திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு உதவித் தொகையையும் வழங்குதல்.
  8. வெளிநாடுகளில் மேலதிக கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க பல்கலைக்கழகங்களில் IELTS போன்ற மொழிப் பரீட்சை வசதிகளை வழங்குதல்.
  9. அரச பல்கலைக்கழக நூலகங்களில் இருக்கும் புத்தகங்களை மின் நூலக தளத்திற்கு மேம்படுத்துதல்.
    சர்வதேச மென்புத்தகங்களை வாங்கி, E-நூலகம் வழியாக அனைத்து மாணவர்களுக்கும் அவற்றை இலவசமாக வழங்குதல்.
  10. நவீன சாதனங்களைக் கொண்டு அரசாங்க பல்கலைக்கழகங்களின் ஆய்வு கூடங்களை புதுப்பித்தல்.
  11. ஒன்லைன் ஒதுக்கீடு முறைமையின் மூலம் அரசாங்க பல்கலைக்கழகத்தின் ஆய்வு வசதிகளை திறந்து கொடுத்தல்.
  12. தற்போதுள்ள அனைத்து அரசு பல்கலைக்கழக விடுதிகளையும் முறையான சுகாதார வசதிகளுடன் மேம்படுத்தல்.
  13. அனைத்து அரச பல்கலைக்கழச சிற்றூண்டிச் சாலைகளிலும் தரமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல்.
  14. அனைத்து வகையான பகிடி வதைகளையும் அரச பல்கலைக்கழகங்களில் தடை செய்தல
    2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை 1980 மாணவர்கள் பகிடி வதைக் காரணமாக அரச பல்பலைக்கழகங்களை விட்டு விலகியுள்ளனர்.
  15. உயர் கல்விக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT இனை அமுல்படுத்துதல்.
    கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் VAT விகிதங்கள் என்பன அடுத்த 25 வருடங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் தவிர்ந்த தனியார், தனியார் சர்வதேச பல்பலைக்கழங்களை கட்டுவதற்கு உத்தரவாதமளிக்கும்.
  16. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவினுள் சர்வதேச தரம் வாய்ந்த 5 பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு அரசாங்க மென் கடன் வழங்குதல்.
    வருடாந்தம் 50,000 சர்வதேச மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவை பற்றி ஊக்கமளித்தல்.
  17. மாவட்ட ரீதியான வர்த்தக முயற்சியின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனியார் அல்லது பகுதியளவு அரசாங்க பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க ஊக்கமளித்தல்.
  18. வருடாந்தம் 105,228 மாணவர்கள் என்ற அடிப்படையில் உயர் தரம் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1.2 மில்லின் வட்டியில்லாத கடன் தொகையினை அவர்கள் தங்கள் உயர் கல்வியை தனியார் பல்கலைக்கழகங்களில் தொடரும் பொருட்டு அறிமுகப்படுத்தி வழங்குதல்.
  19. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்த வகையில் STEM தொடர்பான பிரிவு மற்றும் பிரிவிற்கு பிரிவு உருவாக்குதல்.
  20. வெளியீடு வீதத்தை அதிகரிக்கும் முகமாக, விரிவுரையாளர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அவர்களின் ஆராய்ச்சியின் தரம் மற்றும் அவர்கள் வெளியிட்ட வெளியீடுகள் மற்றும் ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஊக்கத் திட்டங்களை உருவாக்குதல்.
  21. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் பங்காளராக செயற்பட்டு மாணவர்களை, விரிவுரையாளர்களை, ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை மற்றும் நிபுணர்களை பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்வதற்கு ஊக்கமளித்தல்.
  22. தனியார் மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களை இளமானி மற்றும் முதுமானி பட்டப்படிப்புக்களுக்காக இணைத்துக் கொள்வதை அதிகரித்தல்.
  23. அனைத்து எழுத்துரு புத்தகங்களையும் பிரைலி முறைமைக்கு மாற்றுவதுடன் இலவசமாக கேள் மற்றும் பார்வை தகவு உதவிகளை செய்தல்.
  24. இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களது தாய் மொழிக்கு மேலதிகமாக சிங்களம்,ஆங்கிலம், தமிழ் மொழியினை கற்பதற்கு ஒன்லைன் மூலமான மொழி கற்கை வசதிகளை செய்து கொடுத்தல்.
  25. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தொழில் வழிகாட்டலை வழங்குதல்.
  26. தொழில்நுட்பஃவிஞ்ஞான மாணவர்களை தொழில் முயற்சியாண்மையாளர் ஆக்குவதங்கு தேவையான அறிவுறைகள் மற்றும் முயற்சிகைளை வழங்கி ஊக்கப்படுத்துதல்.
  27. மாணவர்களை அவர்களது கல்வித் தகைமைக்கு ஏற்றாற் போல் பயிற்சி பட்டறைகளில் இணைவதற்கு தேவையான உதவிகளை செய்தல்.
  28. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மனநல ஆலோசனையை வழங்குதல்.
  29. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனிப்பட்ட சீர்ப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஒளிநாடாக்களுடன் ஒரு தளத்தை தொடங்குதல்.

இலக்குகள்

To increase GDP per capita from

USD 4,000 to USD 12,000

Sதற்போது இலங்கையில்
(மாணவர்களுக்கான சதவிகிதம் 19 – 23 வருட)
2020 – 2025 இற்கான இலக்கு
மாணவர்ச் சேர்க்கை)
தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு இலக்கை அடைவதற்கு
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 7% 25,200 16.67% 60,000 அதிகரிப்பு 2.38 தடவைகளால்
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 4.1% 15,000 29.23% 105,228 அதிகரிப்பு 7.1 தடவைகளால்
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. 4.1% 15,000 4.1% 15,000
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) 22% 79,200 40% 144,000 அதிகரிப்பு 1.8 தடவைகளால்
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) 62.8% 225,600 10% 36,000 குறைப்பு 6.28 தடவைகளால்
வருடாந்த மாணவர்கள். 360,000 360,000
  • சான்றிதழ் பெறுனர்களின் எண்ணிக்கையை 79,200 இலிருந்து 144,000 ஆன அதிகரித்தல், இது வருடாந்த மாணவர் எண்ணிக்கையான 360,000 இல் 40% ஆகும்.
  • தற்போதுக் காணப்படும் பயிற்றப்படாத தொழிலாளர் எண்ணிக்கையை 225,600 ஆக குறைப்பதன் ஊடாக பயிற்றப்படாத தொழிலாளர்களை பயிற்றப்பட்ட தொழிலாளர்களாக்குதல். உ.ம் வருடாந்த மொத்த மாணவர்களில் 62.8% இனை 10% ஆக்குதல்.
  • மாணவர்கள் மற்றும் வயது வந்த கற்பவர்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்நாள் கற்றலுக்கான திறன்கள், அறிவு மற்றும் மதிப்புக்களை பெறுவதந்கான வாய்ப்புக்களை உருவாக்குதல்.
  • பயிற்சித் தரங்கள், திறன்களின் பயிற்சி மற்றும் சான்றிதழ் அளிப்பு முறைமைகளை தொடர்ச்சியாக திருத்தி விருத்தி செய்தல்.

செயற் திட்டம்

  1. பிரத்தியேக பெயருக்கான வழிக்காட்டுதல்களை வழங்குவதன் மூலம் TVET இனை கவர்ச்சிகரமான கற்றல் தேர்வாக மறுப் பெயரிடுதல்.
  2. தொழில் வல்லுனர்களை பாடத்திட்டத்தினை நடாத்துவதற்கு இயலச் செய்வதன் மூலம் பட்டதாரி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களின் தரத்தை அதிகரித்தல்.
  3. 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT இனை TVET கல்விக்கு அமுல்படுத்துதல்.
    கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் VAT விகிதங்கள் என்பன அடுத்த 25 வருடங்களுக்கு தனியார் TVET பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு உத்தவாதமளிக்கிறது.
  4. வேலைவாய்ப்பு சந்தையில் கேள்வியாக காணப்படும் இந்தியா,ஜேர்மனி மற்றும் மலோசியாவில் கிடைக்கக் கூடிய புதிய TVET கற்கைகளை அறிமுகம் செய்தல்.
  5. வருடாந்தம் 360,000 மாணவர்களில் 40% மாணவர்களை உள்ளடக்கும் வகையில் வருடாந்த TVET சான்றிதழ் பெறுனர்களின் எண்ணிக்கையை 79,200 இலிருந்து 144,000 ஆக அதிகரிக்கும் பொருட்டு தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களுடன் கூடிய அனைத்து NVQ தர சான்றிதழ்களுடனான முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட TVET நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்தல்.
  6. உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தற்போது காணப்படுகின்ற தொழில்நுட்ப கல்வியினை மேம்படுத்துதல்.
  7. 4 மணித்தியாலங்கள், 6 மணித்தியாலங்கள், 12 மணித்தியாலங்கள், 20 மணித்தியாலங்கள், ஒரு நாள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் போன்ற கால எல்லைக்குரிய சிறிய கற்கைகளை TVET பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்தல்.
  8. வேலை வாய்ப்புச் சந்தையில் கேள்வி அதிகம் உள்ள தளவாடங்கள் பிரிவில் சமையல் கற்கைகளை TVET மேலதிகமாக அறிமுகம் செய்தல்.
  9. பெண்களுக்கான TVET கற்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
    • முகாமைத்துவம், கணினி செயலாக்கம், நிகழ்ச்சித் திட்ட உதவி, சுற்றுலா மற்றும் பிரயாண உதவி போன்ற கற்கைகள்.
    • மேலதிகமாக, கூந்தல் பராமரிப்பு, முக அழகு, நகக் கலை மற்றும் தையல் போன்ற சிறிய கால எல்லைக்கான கற்கைகளை (1 தொடக்கம் 2 வாரங்கள் ) அறிமுகம் செய்தல்.
  10. TVET பயிற்சியாளர்களது திறமையை அதிகரிப்பதற்கு ‘பயிற்சியாளரை பயிற்றுவித்தல்’ கற்கை அறிமுகம் செய்தல்.
  11. அனைத்து குடிமக்களுக்கும் ஒன்லைன் மொழிக் கற்கைகள் இலவசமாக கிடைப்பதை உறுதிப்படுத்தல்.
  12. தனி நபருக்கு அவர்களது திறன்களை மதிப்பீடு செய்யவும் முன்னேற்றம் செய்ய வேண்டிய பகுதிகளை இணங்காண்வதற்கும் ஒன்லைன் திறன் மதிப்பீட்டு முறைமையை அறிமுகம் செய்தல்.
  13. வேலையில்லாத குடிமக்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களது திறன்களுக்கு ஏற்றாற் போல் வேலை வங்கியினை அறிமுகப்படுத்தி வேலைகளுக்கு அவர்களை சேர்த்து விடுதல். இது புதிய மாணவர்களை வேலைக்கமர்த்தும் வரை கண்காணிக்கும்.
  14. மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான அர்ப்பணிப்பான திட்டத்தை ஆரம்பித்தல்.
    • சுற்றுலாத் துறை தொடர்பான வேலைவாய்ப்பு.
      சுற்றுலா வழிகாட்டல் கற்கை, சில்லறை, வீட்டிலிருந்து உணவு விடுதி செயலாக்கம், கடற்கரை கிளப் செயலாக்கம், பார் அட்டென்டர், வைட்டர்ஸ், வரவேற்பாளர்கள் போன்றன.
    • ஒன்லைன் விருந்தோம்பல் கற்கைகளின் ஊடாக விடுதிகளில் வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
    • வீட்டிலிருந்தான உணவு விடுதி செயலாக்கத்திற்கான பயிற்சி ஒளி நாடாக்கள்.
    • தாதியர் பயிற்சி கற்கைகள்.
    • கைத்தறி, பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றைப் பற்றிய கற்கைகளை நடத்த நிதி வழங்குதல்
  15. TVET மாணவர்களுக்காக பின்வரும் தகவல்களுடன் கூடிய அர்ப்பணிப்பான வலைத்தளத்தை நிறுவுதல்.
    • பிரதேசத்தில் கிடைக்கக் கூடிய தொழில்நுட்ப கல்லூரிகள்
    • இடவமைவை அடிப்படையாக கொண்ட கற்கைகள்
    • தொழில் வழிகாட்டல்.
    • பிரதேசத்தில் காணப்படும் தொழில் கிடைக்கும் தன்மை.
    • வீடியோ அடிப்படையிலான TVET கற்கை முறை.
    • சீர்ப்படுத்தும் உதவிக் குறிப்புக்களுடனான வீடியோ அடிப்படையிலான தனிப்பட்ட மற்றும் மென்மையான திறன் மேம்பாடு.
  16. தாதியர் கல்லூரிக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

இலக்குகள்

  • வறுமை இன்மை
  • பூச்சிய அளவில் பசி
  • பாலின சமத்துவம்.
  • கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி
  • சமமின்மையை குறைத்தல்.

சமூக இடமாற்றங்கள்

வறுமையில் வாழ்வோர் அல்லது வறுமைக்கு உள்ளாகும் அபாயம் உடையோரது சமூக இடமாற்றங்கள்.

சமூக இடமாற்றங்கள் பங்களிப்பு செய்யாதவையாகும், அதாவது பெறுநர்கள் காப்பீடு அல்லது குறித்த வரிகளை செலுத்துவதற்கு வேண்டப்படுவது இல்லை. வறுமையில் வாழ்வோர் அல்லது வறுமைக்கு உள்ளாகும் அபாயம் உடையோருக்கு பொது மற்றும் சிவில் அமைப்புக்களால் சமூக உதவி வழங்கப்படும். உ.ம். பங்களிப்பில்லாத ஓய்வூதியம், சிறுவர் பயன்கள், பாடசாலை உணவுகள், இயலாமைக்கான கொடுப்பனவுகள் மற்றும் விவசாய காணிக்கைகள்.

இலக்கம். விளக்கம். 2014
ரூ.மில்லியன்
2015
ரூ.மில்லியன்
2016
ரூ.மில்லியன்
2017
ரூ.மில்லியன்
2018
ரூ.மில்லியன்
1. சுகாதாரம் 34,805 31,703 38,028 38,596 43,440
1.1 மருந்துகள் 34,805 31,703 38,028 38,596 43,440
2. பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும்
தேவையுடையவர்களை மேம்படுத்துதல்.
18,314 49,189 51,612 50,862 51,319
2.1 சமுர்;த்தி 15,042 39,994 40,704 39,707 39,239
2.2 பயனாளிகளின் எண்ணிக்கை
(குடும்பங்கள் மில்லியனில்)
1.5 1.4 1.4 1.4 1.4
2.3 முதியவர்களுக்கு உதவி
(70 வயதுக்கு மேற்பட்டோர்)
2,655 8,039 9,060 9,008 9,590
2.4 மாற்றுத் திறனாளிகளுக்கான
நாளாந்த கொடுப்பனவு.
138 220 247 195 31
2.5 ஊனமுற்றவர்களுக்கான
நாளாந்த கொடுப்பனவு
479 936 1,114 1,083 1,141
2.6 சிறுநீரக நோயாளிகளுக்கான
நிதி உதவி
487 869 1,318
3. அரசாங்க பாதுகாப்பு படையினை மேம்படுத்துதல். 18,290 23,433 26,772 27,808 45,901
3.1 படையினரின் மூன்றாம்
பிள்ளைக்கான கொடுப்பனவு
46
3.2 இறந்த மற்றும் ஊனமுற்ற படையினருக்கான இழப்பீடு 18,244 23,433 26,772 27,808 45,901
4. விவசாய அபிவிருத்தி 32,086 57,051 28,013 30,361 26,879
4.1 உர மானியம் 31,858 49,571 27,771 30,361 26,879
4.2 நெல் கொள்வனவு (நெல் விலையை இஸ்தீரப்படுத்தல்) 228 7,480 242
5. வர்த்தக பயிர் அபிவிருத்தி 1,873 11,029 2,391 2,136 2,317
5.1 பயிர் மானியம்
5.2 தேயிலை 331 7,292 549 445 615
5.3 இறப்பர் 763 2,871 713 703 542
5.4 தேங்காய் 485 471 709 598 653
5.5 முந்திரிகை 40 35 40 54 67
5.6 சிறுபயிர்கள் (இலவங்கப்பட்டை,கொகோ, கோப்பி, மிளகு) 254 360 380 336 440
6. பாடசாலை பிள்ளைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 14,903 17,984 22,817 24,923 20,255
6.1 பாடசாலை சீருடைகள் 3,574 2,261 2,157 2,479 1,073
6.2 சீசன் டிக்கெட் 1,695 1,800 1,998 4,923 5,000
6.3 பாடசாலை மற்றும் தர்ம
பாடசாலை புத்தகங்கள்.
2,773 3,979 5,599 4,476 4,318
6.4 தரம் 5 புலமைப் பரிசில், மகாபொல மற்றும் பர்சரி உதவித் தொகை. 852 1,390 1,914 1,344 2,136
6.5 ஊட்டச் சத்து நிகழ்ச்சிகள். 3,725 3,938 3,916 4,434
6.6 பிள்ளைகள் மற்றும் பிள்ளை பேற்றை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கான திரிபோஷா 1,787 1,956 1,351 1,692 1,982
6.7 பிள்ளைப் பேற்றை எதிர்ப்பார்க்கும்
தாய்மார்களுக்கான போஷன மல்லா.
279 2,422 5,746 5,408 5,490
6.8 முன் பள்ளி மற்றும், பாடசாலை மாணவர்களுக்கான காலை பால். 197 189 106 167 256
6.9 போஷன மன்பெத
மற்றும் லமா சவிய
21 49 30
7. அனர்த்த உதவி 549 389 243 5,854 5,279
உணவு மற்றும் வறட்சி நிவாரணம். 521 271 132 5,854 5,279
சமைக்கப்பட்ட உணவு
மற்றும் உலர் உணவுகள்
28 118 111
8. மதத் தளங்களுக்கு
உதவி
50 50
8.1 மதத்தளங்களுக்கான நீர். 50 50
9. பொது நிறுவனங்களுக்கான இழப்புக்கள் 33,122 32,663 97,486 (35,777) (131,436)
9.1 பெற்றோலியம் (இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனம்)
19,468 69,620 3,504 (104,037)
9.2 மண்ணெய்.
9.3 மின்சாரம் (இலங்கை
மின்சார சபை)
15,737 14,499 (49,231) (29,000)
9.4 நீர் 252 2,977 738 (568)
9.5 புகையிர போக்குவரத்து. 11,034 7,714 6,773 7,595
9.6 இலங்கை போக்குவரத்துச் சபை. 6,351 5,229 3,617 1,617 2,169
10. போக்குவரத்து வசதிகள். 5,046 5,275 5,288 5,321 5,223
10.1 SLTB போக்குவரத்து வசதிகள் - பொருளாதார வகையறா அல்லாத வழிகள். 4,770 4,975 4,999 5,000 5,004
10.2 இலங்கை இராணுவத்திற்கான
போக்குவரத்து வசதிகள்
276 300 289 321 219
11. பொதுவான வசதிகள்.
11.1 வீதி விளக்குகள்.
மொத்தம் (பொது நிறுவனங்களின் இழப்புக்கள் இல்லாமல்) 125,916 196,103 175,164 185,861 200,613
மொத்த சமூக இடமாற்றங்கள். 106,049

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவிலக்கணத்தின் படி தற்போது இலங்கையின் மொத்த சமூக இடமாற்றங்கள் ரூ.106 பில்லினாகும். எனவே, இங்கு துல்லியமான வறுமைக் குறைப்பு செய்யப்படாது வறுமை அதிகரித்து வரும் குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கான உதவி மட்டுமே வழங்கப்படுகின்றது.

செயற்திட்டம்

  1. வரவு செலவு திட்டத்தில் சமூக இடமாற்றங்கள் மற்றும் சமூக அபிவிருத்திக்காக 10% அதிகரிப்புடன் கூடிய ரூ.100 பில்லியனை மேலதிகமான ஒதுக்குதல்.

    1.5 மில்லியன் குடும்பங்கள் தற்போது சமுர்த்தி திட்டத்தின் கீழ் காணப்படுகின்றன. தற்போது காணப்படும் சமுர்த்தி தி;ட்டத்தின் கீழ் தங்களுடைய வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத குடும்பங்களுக்காக, துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் கல்வியை நோக்காக கொண்ட ‘சமுர்த்தி 2’ திட்டத்தினை அறிமுகம் செய்தல்.

  2. சமுர்த்தி திணைக்களத்திற்கு கீழான இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தின் படியான துல்லியமான வறுமை ஒழிப்பு நிகழ்ச்சியின் கீழ் முழுமையாக வறுமையினை ஒழித்தல்.
    • நிலையான வறுமானம், சுகாதாரத்திற்கான அணுகல், ஊட்டச்சத்து, பாதுகாப்பான வீடு, எழுத்தறிவு வீதம் போன்ற வறுமை குறைப்பிற்கு உதவும் 50 குறிக்காட்டிகளை இணங்காணுதல்.
    • வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு துல்லிமான வறுமைக் குறைப்பை வழங்குதல்.
    • கண்பார்வைக் குறைப்பாடு, கேள்தகைமை குறைபாடு, பலவீனமான இயக்கம் மற்றும் மோசமான மன ஆரோக்கியம் போன்றவற்றைக் கொண்ட மாறுபட்ட திறன்களுடைய மக்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.
    • தற்கொலைக்கு முயன்று உயிர்ப் பிழைத்தவர்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை அவர்களின் விபரங்களுடன் பேணுதல். தற்கொலை வீதத்தை 50% ஆல் குறைக்கும் பொருட்டு அதிகமாக தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் நிகழ்ந்த பிரதேசங்களை இணங்காணுதல்.

      தற்கொலை அவசர அழைப்பு சேவையில், அழைப்பவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் பதிலளிக்கும் பொருட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தவர்களை நியமித்தல்.

    • நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு, சரியான வடிகட்டல் வசதியுடன் ஆழமான கிணறுகளை உருவாக்கும் பொருட்டு சிறுநீரக நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை புவியியல் ரீதியாக இணங்காணுதல். ஏற்கனவே குறிப்பிடத்தக்க கிராமங்களில் அவ்வாறான வடிகட்டல் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.
      உ.ம். Hayleys PLC ஆல் செய்யப்பட்ட சாட்டியாவர திட்டம்.

      உரத்தின் அதிகப்பட்ச பாவணையை 20% குறைப்பதற்கு விவசாய நோக்கங்களுக்காக மண் சுகாதார அட்டைகளை அறிமுகம் செய்தல்.

    • இலங்கையில் வருடாந்தம் 23,000 புற்றுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதால், புற்றுநோயால் பீடிக்கப்பட்டவர்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு ஓய்வு பெற்ற வைத்தியர்களைக் கொண்டு தேவையான உணர்வு ரீதியான மற்றும் மன நல அறிவுரைகளை வழங்குதல்.
    • மாற்றுத் திறனாளிகளை வகைப்படுத்தும் ஒரு தரவுத் தளத்தை பராமரித்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அறிவுறுத்துவதற்கும், ஆதரிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் நிபுணர்களை நியமித்தல்.
    • சிறுவர்ப் பாதுகாப்பு
      • “baby hatches” இனை அறிமுகப்படுத்துவதன் மூலம், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வேண்டுமென்றே புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் அநேமதேயமாக விடக் கூடிய சம்பவங்களை குறைத்தல்.
      • சிறுவர் பாலியல் வல்லுறவு வழக்குகளுக்காக வேகமான விஷேடமான நீதிமன்றங்களை அறிமுகம் செய்தல்.
  3. பெண்களின் பாதுகாப்பு
    • பெண்களுக்கான உதவி தொலைப்பேசி இலக்கத்தை அறிமுகம் செய்தல்
      பயிற்றுவிக்கப்பட்ட உதவியாளருடன் பேசி தொலைப்பேசி மூலமாகவே ஆதரவினைப் பெறுதல். தொலைப்பேசி இலக்கம் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும், மேலும் பல்வேறு கவலைகளுக்கு உதவவும், பச்சாதாபப்படவும், ஆதரவு வழங்கவும், தகவல் மற்றும் ஊக்கத்தை அளிக்கவும் முடியும். ஒரு சட்டத்தரணியுடனோ அல்லது உளவள ஆலோசகருடனோ பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடு;த்தல்..
    • பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு அவர்களின் அதிர்ச்சியைச் சமாளிக்கவும், அவர்களின் அடுத்த படிகள் குறித்து முடிவுகளை எடுக்கவும் முக்கியமான சேவைகளை வழங்கும் பொருட்டு பாலியல் தாக்கத்திற்கான பராமரிப்பு நிலையத்தை (SACC)நிறுவுதல்
      • Drop-in centre – தப்பிப் பிழைத்தவர்களுக்கு உடனடியாக ஒரு இடத்திலுள்ள சமூக சேவையாளரை அணுகி, முன் அனுமதி இல்லாமல் ஆலோசனைகளைப் பெற ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குதல்.
      • உதவி எண்ணின் ஆதரவு – பயிற்றுவிக்கப்பட்ட தன்னார்வளருடன் பேசி தொலைப்பேசி மூலமாக உதவியை பெற்றுக் கொள்ளுதல். மேலதிகமாக, மேலதிக உதவியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சமூக சேவையாளர் அல்லது உளவள ஆலோசகரை சந்திப்பதற்கான நியமனத்தைப் பெறல்..
      • நண்பனாக இருப்பவரின் சேவைகள் - பயிற்சியளிக்கப்பட்ட நண்பர்கள் இந்த தப்பிப்பிழைத்தவர்களுடன் காவல் நிலையம், மருத்துவமனை அல்லது நீதிமன்றத்திற்கு தங்கள் பாலியல் வன்கொடுமை வழக்கை புகாரளித்து பின்பற்றுவதற்கும், பல்வேறு சட்ட மற்றும் மருத்துவ செயல்முறைகள் மூலம் தகவல் மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவார்கள். ஒரு நண்பராக இருப்பவரது சேவையினை உதவி எண் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
      • உளவள ஆலோசனை மற்றும் வழக்கு முகாமைத்துவம் - பாலியல் தொல்லையிலிருந்து தப்பிப்பிழைத்தப் பலர், உளவள ஆலோசகர்களிடம் பேசுவதற்கு உதவியை நாடுகின்றனர். அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களுக்கு பின்பற்றக் கூடிய உளவள ஆலோசனையை வழங்குவார்கள். அனைத்து ஆதரவும் கட்டாயமாக இரகசியமாக வழங்கப்பட வேண்டும். முதல் மூன்று உளவள ஆலோசனை வகுப்புக்கள் இலவசமாகும். நான்காவது வகுப்புக்கான கட்டணமானது பாதிக்கப்பட்டவர்களின் மாத சம்பளத்தில் 1% ஆகும், பாதிக்கப்பட்டவர்களில் வருமானம் ஈட்டாதவர்களுக்கு ஒரு வகுப்பிற்கு 50 ரூபாயாகும்.
      • சட்ட ஆலோசனை – தப்பிப்பிழைத்தவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தொலைப்பேசியினூடாக சட்டத்தரணி ஒருவரை சந்திப்பதற்கான நியமனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
    • குருதிச் சோகையை பரிசோதிக்க ஹீமோக் குளோபின் மீட்டரை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை முழுவதும் உள்ள குருதிச் சோகை உடைய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உதவுதல், அவர்களுக்கு சிகிச்சையளிக்க IFA (இரும்பு மற்றும் போலிக் அஸிட் ) மாத்திரைகளை கொடுத்தல் மற்றும் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்க தேவையான வாழ்க்கை முறை நடவடிக்கைகள் குறித்து பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்குதல், மற்றும் இரும்பு, புரதம் மற்றும் விற்றமின் சி நிறைந்த உணவுகள் குறித்து அறிவுறுத்துதல். குருதிச் சோகை என்பது குருதியில் ஏற்படும் இரும்பு பற்றாக்குறையாகும். இது கர்ப்ப காலத்தில், மற்றும் பிள்ளை பேற்றின் போது தாய் மற்றும் பிள்ளையின் இறப்பிற்கு காரணமாக அமையும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் இழப்பின் காரணமான ஏற்படும் அனுமானித்த பொருளாதார இழப்பு 6% ஆகும்.
      (மூலம் : Horton and Ross, 2003)
  4. மூத்த குடிமக்கள்

    நாட்டின் அனைத்து மூத்த குடி மக்களும் அணுகும் முறையிலான ஒன்லைன் தளத்தை உருவாக்குதல். தளம் பின்வரும் சேவைகளை வழங்கும்;

    • வயதானவர்களுக்கு பராமரிப்பினை வழங்குபவருக்கு ஒன்லைன் பயிற்சி ஒளிநாடாக்கள் மற்றும் கற்கைகளை.
    • அரசாங்க அனுமதிப் பெற்ற முதியோர் இல்லங்கள் தொடர்பான விபரம்.
    • உள்நாட்டு தன்னார்வளர்களுக்கான வாய்ப்புக்கள் பற்றிய விபரம்;
    • மூத்த குடிமக்களுக்கான வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு.
  5. சிறைக் கைதிகளுக்கான புனர்வாழ்வு மற்றும் குற்றக் குறைப்பு - "(‘நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சி’ இனைப் பார்க்கவும்)".
  6. போதைப் பொருள் தடுப்பு
    • வஸ்து துஷ்பிரயோகம் மற்றும் மனநல சேவைகள் பற்றிய விழிப்புணர்வூட்டும் அதிகாரப்பூர்வ யூடியூப் ஒளியலையை நிறுவுதல்.
    • மருத்துவ உதவி வழங்கும் போது ஓபியாய்டு பயன்பாட்டுக் கோளாறுகளுக்கு பயனுள்ள, சான்றுகள் அடிப்படையிலான பராமரிப்பை வழங்க சுகாதாரப் பயிற்சியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு இலவச அப்லிகேஷனை உருவாக்குதல்
    • போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மதுசார மற்றும் புனர்வாழ்வு என்பவை கட்டிளமைப் பருவத்தினர் மத்தியில் ஏற்படுத்தும் பாதிப்பைப பற்றி பெற்றோரினை குறி வைத்து ஒன்லைன் சஞ்சிகைகளை பிரசுரித்தல்;
      • அடிமைப்படுதல் மற்றும் இந்த நாட்பட்ட நோயிலிருந்து வெளிவரும் வழிவகை.
      • போதைப்பொருள் அடிமைப்படுதலின் மறைமுக அறிகுறிகள்.
      • மறுவாழ்வுக்கு செல்லுதல் மற்றும் அது ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழிவகுக்கிறது.
      • ஏன் Fentanyl அனது இலங்கையை அச்சுறுத்துகிறது.
      • அடிமைப்படுதல் மற்றும் மனநல சுகாதாரத்தை புறக்கணித்தல் என்பது ஏன் பெரிய தவறாக கொள்ளப்படுகின்றன?
      • கட்டிளமையும் கஞ்சாவும்
  7. சிறுவர்ப் பாதுகாப்பு
    • வீதியோர சிறார்களை பாதுகாத்தல்.
      அர்ப்பணிப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைத்து இந்த நிலையங்களின் ஊடாக கல்வியினை வழங்குதல்.
    • வாரத்தின் ஐந்து நாட்களுக்கும் ஐந்து புதிய வகை பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்துதல், அவற்றை காலை உணவை வாங்க முடியாத குழந்தைகளுக்கு துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூப்பனை வழங்குவதன் மூலம் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய வகை பிஸ்கட்டுக்களானது சந்தைகளிலும் கிடைக்கக் கூடிய வசதிகளை செய்தல்
    • துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு செல்லாத 5,000 சிறுவர்களை புவியில் ரீதியாக அடையாளம் கண்டு (புநழ-வயப) அவர்களின் குடும்பங்களின் வருமானத்தை ஆலோசனை உதவி மூலம் அதிகரித்தல், இதனால் இந்த சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும். இதனால் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கையை 5,000 இலிருந்து 0 ஆக குறைக்க முடியும்.
    • சமூக அபிவிருத்து முயற்சிகளின் அமுலாக்கம் மற்றும் துல்லியமான வறுமை குறைப்பு என்பவற்றின் ஊடாக பாடசாலையிலிருந்து இடையில் விலகுபர்களின் எண்ணிக்கையை 30,000 இலிருந்து 0 ஆக குறைத்தல்.
    • மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்காக, முன் பள்ளி மற்றும் பிரதான பாடசாலைகளில் உடற்பயிற்சிகளுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தல். பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளுக்கு தினமும் பகல் நேரத்தில் குறைந்தது 2 – 3 மணிநேரம் வெளியில் செலவிட உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
      • முழு நாள் முன் பள்ளி நிகழ்ச்சிகளுக்கான உடற்பயிற்சி செயற்பாடுகளுக்கான நேரத்தை குறைந்தது ஒரு மணி நேரமாக உயர்த்துதல், அதில் அரை மணி நேரம் வெளியில் செய்யப்படல் வேண்டும்.
      • முன் பள்ளி ஆசிரியர்களுக்கு கள செயற்பாடுகளை செய்வதற்கான கல்வியியல் மூலங்களை வழங்குதல்.
      • முறையான பாடத்திட்டத்திற்கு அப்பால் பிரதான பாடசாலைகளில் கட்டமைக்கப்படாத விளையாட்டிற்கான வாய்ப்புக்களை அதிகரித்தல்.
      • பாடசாலை வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன பாடசாலை நேரத்தில் மற்றும் / அல்லது பாடசாலை நேரத்திற்கு அப்பால் கிடைக்கக் கூடிய வசதிகளை செய்தல்.
    • பாடசாலை மற்றும் சமூகத்தின் ஊடாக செயற்திறன் மிக்கதும் சுகாதாரமானதுமான வார இறுதி நாட்களை பெற்றுக் கொள்வதற்கு குடும்பங்களை ஊக்குவித்தல்.
      உடல் ரீதியிலான செயற்பாடுகள் மூலம் பெற்றோர்-குழந்தை பினைப்பை ஊக்குவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பூங்காக்கள், பொழுதுப்போக்கு மையங்கள் மற்றும் திறந்த வெளிகளில் பொழுதுபோக்கு செயற்பாடுகளை ஒழுங்கு செய்தல்.
    • ஊனமுற்ற குழந்தைகளுக்கு பின்வருவனவற்றின் மூலம் பாடசாலைகளில் நாளாந்த சேவைகளை வழங்குதல்.;
      • ஊனமுற்ற பிள்ளைகளின் மதிப்பீடு மற்றும் திரையிடல்
      • அனைத்து அரச மற்றும் மாவட்ட வள மையங்களை செயற்படுத்துதல்.
      • குறித்த விடயம் உள்ளடக்கிய கல்விக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்.
      • தேவைக்கேற்ப பாடசாலைகளில் அறைகளை இணைத்தல்.
      • தேவைக்கேற்ப உதவிகள் மற்றும் உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.
      • சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்ட ஒழுங்கு முறையான பயிற்சிப் பெற்ற நிபுணர்களுடன் பிள்ளை மேம்பாட்டு மையங்களை ஒருங்கிணைத்தல்.
  8. கட்டுப்பாடற்ற துறைகளை ஒருங்கிணைத்தல்.
    • முச்சக்கர வண்டி ஓட்டும் சமூகத்தை மேம்படுத்தி உயர்த்துதல். இந்த நோக்கத்திற்காக பயிற்சி ஒளிநாடாக்கள் மற்றும் ஏனையவற்றை பயன்படுத்துதல்..
    • இலவச ஒன்லைன் தளத்தை உருவாக்கி முச்சக்கர வண்டி முன் பதிவு மற்றும் வரிசை முகாமைத்துவத்தை நிறுவுதல்.
    • தெருவோர உணவு விற்பனையாளர்கள்.
      • அவர்களது வியாபாரத்திற்கு ஆதரவளிக்கும் விதத்தில் மென் கடன் திட்டங்களை அறிமுகம் செய்தல்.
      • பயிற்சி ஒளிநாடாக்களின் ஊடாக தெருவோர விற்பனையாளர்களுக்கு தொழில்பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக அவர்களது வருமானத்தை அதிகரித்தல்.
      • Introduce a mobile application with information of street food vendors including location and directions via Google Maps, to attract and inform local and foreign visitors.
        • பொதுப் போக்குவரத்து வழியாக பயணிக்க விரும்பும் பயணர்களின் வசதிக்காக கடைகள் மற்றும் தளங்களின் முகவரிகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கச் செய்தல்.
  9. ஓவ்வாரு மாவட்டத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் கூடிய வள மையத்தை உருவாக்குதல்.
  10. பெற்றோருக்குரிய குழந்தை பராமரிப்பு கற்கைகளை ஆதரிப்பதற்கான இலவச ஒன்லைன் கற்கைகளை செயற்படுத்துதல்.
  11. குடும்ப அலகினை ஆதரவளிக்கவும் வளப்படுத்தவும் தேவையான தகவலுடன் கூடிய அரசாங்க ஒன்லைன் தளத்தை பின்வருவனவற்றை உள்ளடக்கி நிறுவுதல்;
    • திருமணத்திற்கு முன்பான உளவள ஆலோசனை.
    • ஆரோகியமான திருமணத்தை பேணுதல்.
    • நிதி முகாமைத்துவம்
    • விவாகரத்தை முகாமை செய்தல்.
    • குடும்பக் கட்டுப்பாடு.
  12. விவாகரத்து வழக்குகளை குறைத்தல்.

    திருமணத்திற்கான அடித்தளத்தை நிறுவுவதற்கு ஒன்லைன் ஒளிநாடாக்களுடன் கூடிய திருமண ஆயத்த நிகழ்வுகளை அறிமுகம் செய்தல், மற்றும் மோதல் தீர்வு, தகவல் தொடர்புகளை வலுப்படுத்துவதில் நடைமுறை திறன்களைக் கொண்ட தம்பதிகளை சித்திரித்தல்.

இலக்குகள்

  • தரமான வாழ்க்கையுடன் கூடிய வெற்றிகரமான மாவட்டங்களை உருவாக்குதல்.
  • ஒவ்வொரு மாவட்டத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் ஊக்குவித்தல்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அலுவலகத்தின் கிளைகளை திறப்பதன் மூலம் கொழும்பிற்கு மட்டுமே தடை செய்யப்பட்ட சேவைகள் மற்றும் வசதிகளை விரிவுபடுத்துதல்.

  • மாவட்ட அபிவிருத்தி

    தரமான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான மாவட்டங்களை உருவாக்குவதற்கு மூன்று பிரதான பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்:

    1. கொழும்பிலிருந்து குறித்த மாவட்டத்திற்குள்ள தூரம்.
    2. ஒவ்வொரு மாவட்டத்திற்கான தனித்தன்மையான பிரச்சினைகள்.
      • கலாச்சாரம்
      • மொழி
      • உட்கட்டமைப்பு
    3. “மாகாண அரசியல் அதிகாரத்தின் பகிர்வு”?

    பிரச்சினை 1: கொழும்பிலிருந்து குறித்த மாவட்டத்திற்குள்ள தூரம்.

    தீர்வு : ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் பல்தரப்பட்ட சேவைகளை வழங்குதல்.

    கொழும்பிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் வசதிகளை கொண்ட அரச அலுவலகங்களின் முழுமையான கிளைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் திறப்பதன் மூலம் அதன் சேவையை விரிவுப்படுத்துதல்.

    “மாவட்ட பல் சேவைகள் மையம்” ஒன்றினை நிறுவி பின்வரும் சேவைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இலகுவாக வழங்குதல்:

    • கடவுச் நீட்டு வழங்குதல் உட்பட குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அனைத்து சேவைகளும்.
    • தேசிய அடையாள அட்டை விநியோகம் உள்ளடங்களாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும்.
    • சாரதி அனுமதிப்ப பத்திரம் வழங்குதல் மற்றும் வாகனங்கள் பதிவு செய்தல் உள்ளடங்களாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து சேவைகளும்.
    • வெளிநாட்டு தூதரக சேவைகள் உள்ளடங்களாக வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும்.
    • வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனைத்து சேவைகளும்.
    • தற்போது கொழும்பிலிருந்து மாத்திரமே விநியோகிக்கப்படும் காவல் துறை மற்றும் தடவியல் அறிக்கைகள் உட்பட காவல் துறை திணைக்களத்தினால் செய்யப்படும் அனைத்து சேவைகளும்.
    • EPF இ ETF மற்றும் ஏனைய நிதி பெறுகைகள் உட்பட தொழிலாளர் திணைக்களத்தினால் ஆற்றப்படும் அனைத்து சேவைகளும்.
    • பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சினால் செய்யப்படும் அனைத்து சேவைகளும்.
    • சட்ட மற்றும் நீதித் துறையினால் செய்யப்படும் அனைத்து சேவைகளும்.
      • குடிமக்களால் ஏற்படும் செலவுகளை திருப்பி செலுத்ததல்.

        இரண்டு வருடங்களுக்குள் குறித்த சேவையை வழங்குவதற்கு குறித்த அரச திணைக்களம் அல்லது உத்தியோகத்தர் ஏதேனும் காரணத்திற்காக தாமதம் செய்திருந்தாலோ அல்லது சேவையை பூர்த்தி செய்யாதிருந்தாலோ, அதன் மூலம் பாதிப்பிற்குள்ளாகிய குடிமகனின் போக்குவரத்து செலவுகள் கணக்கிடப்பட்டு பொருத்தமான அரசாங்க நிறுவனத்தால் நஷ்ட ஈடாக செலுத்தப்பட வேண்டும்.

    பிரச்சினை 2 : ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உரிய தனித்தன்மையான கலாச்சார,மொழி மற்றும் உட்கட்டமைப்பு.

    1. கலாச்சாரம்

    உ.ம். யாழ்ப்பாண மாவட்டம்:

    தலையில் பூ அணிந்து செல்லும் மோட்டார் சைக்கில் ஓட்டும் பெண் சாரதிகள், மணிக்கு 30 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுவர். இது தற்போது ஆபத்தான வாகன ஓட்டுதலாக இணங்காணப்படுகிறது.

    மணிக்கு 30 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் மோட்டார் சைக்கிலில் பயணிக்கும் போது காலாசார உடையான புடவை அணிந்த பெண்கள் கால்கள் இரண்டையும் ஒரே பக்கம் வைத்து பயணித்தல் என்பதற்கு பயங்கர ஓட்டுனர் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.

    சமூகத்தின் நலன் கருதி இவ்வாறான பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு பொருத்தமான தீர்வுகளை கொடுத்தல்.

    2. மொழி

    உ.ம்.யாழ்ப்பாணம் மாவட்டம்:

    முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ). இது மொழி ரீதியான சுமையை குறைப்பதுடன் வாசலுக்கு வாசல் திறமான பொலிஸ் சேவையினை வழங்க உதவுகிறது. இத்திட்டமானது 4,960 பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதுடன் (ஒரு நிலையத்திற்கு 10 அதிகாரிகள் வீதம் நாடு முழுதும் காணப்படும் 496 பொலிஸ் நிலையங்கள்) ஒரு நிலையத்திற்கு 5 மோட்டார் சைக்கிள் வீதம் வழங்கப்படும்.

    வருடாந்தம் 1,700 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவதுடன் அவர்களை “ர்ழஅந Pழடiஉந Pசழபசயஅஅந” இற்காக இணைத்துக் கொள்ள முடியும், மற்றும் இந்த செயன் முறையானது 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும். “ர்ழஅந Pழடiஉந Pசழபசயஅஅந”’ இன் விளைவாக மொழி சுமை குறைக்கப்படும்.

    மேலதிகமாக, மொழி பெயர்ப்பிற்காக (சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இடையில்) அரசாங்கத்தின் முயற்சியால் ஆன இலவசமாக அணுகக் கூடிய தளத்தை அறிமுகம் செய்தல். முடிமக்களின் பாவனைக்காக குறித்த தளத்தை ஒளிநாடாக்கள் மூலம் பெயரிட்டு சந்தைப்படுத்துதல்.

    புரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் பொருட்டு பல்வேறு இனத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கல்வியை அனுமதித்தல். எனவே, ஆங்கிலமானது இலங்கையின் தொடர்பு மொழியாக அடையாளங்காணப்படும்.

    உ.ம். சிங்கள மாணவர்கள் தமிழ் கற்கும் காலத்தில் ஆங்கிலம் கற்பதை ஒரு தெரிவாக வழங்குதல். அதே போல் தமிழ் மாணவர்கள் சிங்களம் கற்கும் காலத்தில் ஆங்கில மொழி கற்பதை ஒரு தெரிவாக வழங்குதல்.

    3. குறைந்த உட்கட்டமைப்பு

    கொழும்பிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவு படுத்ததல்.

    செயற் திட்டம்.

    1. மாவட்டத்தை முத்திரையிடல்.

      • ஒவ்வொரு மாவட்டத்தையும் அதன் சுற்றுலாத் தளங்கள், வரலாற்றுத் தளங்கள், தாவரவியல் பூங்காக்கள் போன்ற அடையாளங்களைக் கொண்டு முத்திரை குத்துதல்.
    2. பொதுக் கல்வி – மாகாண சபைக்கு கீழுள்ள 771 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளின் தரத்திற்கு ஒப்பாக அனைத்து வசதிகளுடனும் அபிவிருத்தி செய்தல்.

      • 276 பிரதேச சபைகளில் இருந்தும் 2 பாடசாலைகள் வீதம் (552 பாடசாலைகள்)
      • 41 நகர சபைகளில் இருந்து 3 பாடசாலைகள் வீதம் (123 பாடசாலைகள்)
      • 24 மாநகர சபைகளில் இருந்து 4 பாடசாலைகள் வீதம் (96 பாடசாலைகள்)

        மாணவர்களின் தொகையை 1,500 ஆல் அதிகரிப்பதற்கு போதுமான இட வசதிக் காணப்படும் பாடசாலைகளை தெரிவு செய்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல். அதன் விளைவாக, இந்த 771 பாடசாலைகளிலும் சராசரியாக 1,500 மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான இட வசதி அதிகரிப்பதுடன் இது 1,156,500 மொத்த மாணவர்; தொகையாக உயரும்.

      • இதன் விளைவாக, தரம் 1 இற்கான அனுமதியை பெறுவதற்கான போட்டியானது 80,000 இலிருந்து 0 ஆக குறைக்கப்படும்.

    3. தனியார் கல்வி - வெளிநாட்டிற்கு சேவை செய்யும் தொழில்த் தகைமையுடையோர்களை ஊக்குவிக்கும் முகமாக சர்வதேச பாடசாலைகளை நிறுவுவதனை ஊக்குவிக்கும் பொருட்டு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT என்பவற்றை ஆரம்பித்தல்.

      தற்போது, ஆங்கிலம் பேசக் கூடிய தொழில் தகைமையுடையோர் நமது நாட்டில் ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளின் குறைபாடு காணப்படுவதால் தனது பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் சேவை செய்கின்றனர்.

      • வருடத்தின் மொத்த மாணவர்களில் 50% ஆனோரை பட்டதாரிகளாக்கும் இலக்கை அடைந்து கொள்ளும் பொருட்டு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT போன்ற சலுகைகளை கொடுப்பதன் மூலம் மருத்துவக் கல்லூரிகள் தவிர்ந்த தனியார் பல்கலைக்கழங்களை நிறுவுவதற்கு ஊக்கமளித்தல்.
      • வருடாந்தம் 360,000 மாணவர்களில் 40% மாணவர்களை உள்ளடக்கும் வகையில் வருடாந்த TVET சான்றிதழ் பெறுனர்களின் எண்ணிக்கையை 79,200 இலிருந்து 144,000 ஆக அதிகரிக்கும் பொருட்டு தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களுடன் கூடிய அனைத்து NVQ தர சான்றிதழ்களுடனான முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட TVET நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்தல்.
    4. போக்குவரத்து, நீர், கழிவுநீர் பராமரிப்பு, பகல் நேர பிள்ளை பராமரிப்பு, முன் பள்ளி, பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய மாவட்டங்கிள்ன மையப்படுத்தப்பட்ட வசதிகளுடனான குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய அடுக்கு மாடிக் கட்டிடங்களை முன்மொழிதல்.
    5. புதிய வேலைவய்ப்புக்களைக் கொண்டு வரும் புதிய வணிகங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த வாடகையுடன் கூடிய அகலமான அலுவலக வளாகங்களை முன்மொழிதல் மற்றும் EPF/ETF உடன் ஆரம்பப் பதிவு செய்யும் 70 வயது ஊழியருக்கு 70 சதுர அடி ஒதுக்குதல்.
    6. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதார மத்திய நிலையத்தை நிறுவுதல்.
    7. கடற்கரையோர பிரதேசங்களைக் கொண்ட 14 மாவட்டங்களில் மொத்த வியாபாரத்திற்கான மீன் சந்தை மற்றும் சேமிப்பகத்தை கட்டுதல்.
    8. மீன் பிடிக்கும் கிராமங்களுக்கு நடமாடும் குளிர் சேமிப்பகத்தை வழங்குதல்.
    9. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நீர் விநியோகம் மற்றும் சுகாதார சீர்த்திருத்தங்களை ஆரம்பித்தல்.
    10. மாவட்ட ரீதியாக வேலைவாய்ப்பு உருவாக்கம்.

      • தனியார்த் துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஒவ்வொரு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பொறுப்பு எடுக்க வேண்டும். இது மாதாந்தம் கண்காணிக்கப்பட வேண்டும்.
      • கொழும்பைத் தவிர வேறு மாவட்டங்களில் BOI உடனான உடன்படிக்கையிலான தனியார் துறை வியாபார முயற்சிகளுக்கு 80% கூட்டிணைக்கப்பட்ட வரி குறைப்பானது அடுத்த 25 வருடங்களுக்கு உத்தரவாதமளிக்கப்படும்.
      • 380,000 வேலையற்ற குடிமக்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களது திறனுக்கு ஏற்றாற் போல் தனியார் துறைகளில் கிடைக்கக் கூடியதாக காணப்படும் வேலைகளில் இணைத்துக் கொள்ளுதல். வேலை வாய்ப்புச் சந்தையில் காணப்படும் கேள்விக்கு ஏற்றாற் போல் அவர்களது திறனை அதிகரித்தல்.
    11. உடல் ஆரோக்கியம்
      • ஒரு மாத கால காத்திருப்பு வரிசைகளின் பின்னிணைப்பைக் கொண்ட அரச அறுவை சிகிச்சை அரங்குகளில் ஒரு நாளைக்கு 8 முதல் 12 வரையான காலத்தை செயற்பாட்டு நேரமாக அதிகரித்தல்.
      • மகரகம புற்றுநோய் வைத்தியசாலையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வைத்தியசாலையில் புற்றுநோயியல் அங்கத்தை நிறுவுதல்.
      • ஓவ்வொரு மாவட்டத்திலும் நவீன மற்றும் முழுமையாக உபகரணங்களால் ஆன ஆய்வுகூடத்தை நிறுவுதல்.
      • கொழுபில் காணப்படும் அந்தந்த சிறப்பு மருத்துவ மனைகளுடன் இணைந்து இதயம், நுரையீரல், நரம்பியல், கண் மருத்துவம் மற்றும் குழந்தைகளின் நோய்களுக்கான முழுமையான உபகரணங்களை கொண்ட நிலையங்களை கட்டுதல்.
      • நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு, சரியான வடிகட்டல் வசதியுடன் ஆழமான கிணறுகளை உருவாக்கும் பொருட்டு சிறுநீரக நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை புவியியல் ரீதியாக இணங்காணுதல். ஏற்கனவே குறிப்பிடத்தக்க கிராமங்களில் அவ்வாறான வடிகட்டல் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

        e.g. உ.ம். Hayleys PLC ஆல் செய்யப்பட்ட சாட்டியாவர திட்டம்.

      • மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகித்தல்.

        தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.

      • 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT அறிமுகத்தின் கீழ் தனியார் வைத்தியசாலைகள் நிறுவப்படுதலை ஊக்குவித்தல்.
        • பொது சேவை உத்தியோகத்தர்களுக்கு மேலதிக காப்புறுதி திட்டத்தின் படி மருத்துவ பராமரிப்பினை வழங்குதல்.
        • சத்திர சிகிச்சைக்காக மாதக்கணக்கில் வரிசையில் இருக்கும் நோயாளிகள் இந்த புதிய தனியார் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவர்.
    12. உள்நாட்டு மற்றும் செளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீட்டு செயன் முறையில் வேகத்தை அதிகரிப்பதற்காக ளுஅயசவ ஐவு பூங்கா மற்றும் தொழில்துறை பூங்கா என்பவற்றை விருத்தி செய்தல்.

இலக்குகள்

  • கொள்கை, சட்டம் மற்றும் சேவைகள் மூலம் நீதிக்கான அணுகள், சட்டத்தின் ஆட்சி, பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
  • புத்திசாலித்தனமான பாதுகாப்பு
  • சிறைச்சாலை புனர்வாழ்வு
  • ஊழல் குறைப்பு.

  • செயற் திட்டம்

    பொலிஸ் திணைக்களம்

    புத்திசாலித்தனமான பாதுகாப்பு

    1. பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்படும் மக்களுக்கான புதிய எண்முறை பயோமெட்ரிக் அடையாளப்படுத்தல் முறைமையை அமுல்படுத்தல்.
    2. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் கூடிய CCTV கெமராக்களை அனைத்து பொது மற்றும் தனியார் இடங்களில் நிறுவுதல்.
    3. உலக பாதுகாப்பு முகவர்களுடன் குற்றவாளிகளின் தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல். மேலும், நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவுவது தொடர்பில் கவனமாக செயற்படுவதற்காக முக அடையாளப்படுத்தலை விமான நிலையங்களில் பாவித்தல்.
    4. பொலிஸாருக்கு உடனடியாக முகத்தை அடையாளம் காணும் வகையிலான மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல்.
    5. சமூக ஊடக நடவடிக்கைகளை கண்காணிக்கவும், சாத்தியமான குற்றச் செயல்களை கண்காணிக்கவும் தரவு அறிவியலின் பகுப்பாய்வு மூலம் சாத்தியமான குற்றச் செயல்களை அனுமானித்தல்.
    1. அனைத்து பொலிஸ் சேவைகளையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்குதல் உ.ம். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வதற்கான பொலிஸ் சான்றிதழ் கொழும்பில் மாத்திரமே வழங்கப்படுகிறது.
    2. இனை அறிமுகப்படுத்துதல “Home Police” programme.

      முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ). இது மொழி ரீதியான சுமையை குறைப்பதுடன் வாசலுக்கு வாசல் திறமான பொலிஸ் சேவையினை வழங்க உதவுகிறது. இத்திட்டமானது 4,960 பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதுடன் (ஒரு நிலையத்திற்கு 10 அதிகாரிகள் வீதம் நாடு முழுதும் காணப்படும் 496 பொலிஸ் நிலையங்கள்) ஒரு நிலையத்திற்கு 5 மோட்டார் சைக்கிள் வீதம் வழங்கப்படும்.

      வருடம் தோறும் 1,700 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதுடன் அவர்கள் ஒன்லைன் மூலமாக பயிற்றப்பட்டு உள்ளுர் வன்முறைகளான சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை மற்றும் பாடசாலைப் பாதுகாப்பு போன்ற சேவைகளை செய்வதற்காக அணைத்துக் கொள்ளப்பட முடியும் மற்றும் இச் செயற்பாடானது அன்றாட புகார்களை 3,000 இலிருந்து 2,000 ஆக குறைக்கலாம்.

      “Home Police Programme” ஆனது, மையப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

    3. நிகழ் நேர தகவல் பரிமாற்றம் மூலம் விசாரணைகளை துரிதப்படுத்துதல். சந்தேக நபரின் இலத்திரனியல் படம், நிகழ்நேர பகர்வுடன் கூடிய நடமாடும் எண்முறை வழக்கு கோப்பு, எண்முறை சான்றுகள் பிடிப்பு, நடமாடும் அடையாள அட்டை சரிபார்ப்பு, காவலில் உள்ள பல் வகை தேடல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமான கூட்டத்தை அடிப்படையாக கொண்ட விசாரணை ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னணு சாட்சி அறிக்கை மூலம் இவை நடாத்தப்படும்.
    4. செயற் திறனை அதிகரிப்பதற்காக டிக்கெட்டுக்களை விரைவுப்படுத்துவது போன்ற எண்முறை மற்றும் நேர் சீரான செயற்பாடு.
    5. செயல் திறன் மிக்க பொலிஸ் செயற்பாட்டை ஆராய்தல் - சாத்தியமான குற்றச் சம்பவத்தை முன்கூட்டியே அடைவதற்கு கோரிக்கை முன்கணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல். வரிசைப்படுத்தப்பட்ட முடிவுகளை இயக்குவதற்கு எதிர்கால அபாயங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உளவுத் துறை பகுப்பாய்வுகளை மாதிரியாக் கொள்ள முன் கணிப்பு பொலிஸ் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துதல்.
    6. கையில் வைத்திருக்கும் இலத்திரனியல் உபகரணம் அல்லது நடமாடும் கொடுப்பனவு முறைமை மூலம் தளத்திலேயே கண்டம் கட்டும் செயன் முறையை அறிமுகம் செய்தல்.
    7. பொலிஸ் விசாரணையின் கண்டுபிடிப்புக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மரபணு பரிசோதனை மற்றும் போதைப் பொருள் பரிசோதனை ஆய்வுக் கூடங்களை கட்டுதல்.
    8. தானியங்கு பயோமெட்ரிக் அடையாள அமைப்புக்கள், தடவியல் பகுப்பாய்வு மற்றும் வழக்கு முகாமைத்துவ அமைப்புக்கள் போன்ற அனைத்து சட்ட அமுலாக்க பிரிவுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த தளமாக E-police application பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல்.
    9. போலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ஒன்லைன் பயிற்சி ஒளிநாடாக்களை அறிமுகம் செய்தல்.
    10. வஸ்து துஷ்பிரயோகம் மற்றும் மனநல சேவைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் அதிகாரபூர்வ யூடியூப் ஒளியலையை நிறுவுதல்.
    11. மருத்துவ உதவி வழங்கும் போது ஓபியாய்டு பயன்பாட்டுக் கோளாறுகளுக்கு பயனுள்ள, சான்றுகள் அடிப்படையிலான பராமரிப்பை வழங்க சுகாதாரப் பயிற்சியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு இலவச அப்லிகேஷனை உருவாக்குதல்
    12. போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மதுசார மற்றும் புனர்வாழ்வு என்பவை கட்டிளமைப் பருவத்தினர் மத்தியில் ஏற்படுத்தும் பாதிப்பைப பற்றி பெற்றோரினை குறி வைத்து ஒன்லைன் சஞ்சிகைகளை பிரசுரித்தல்;
      • அடிமைப்படுதல் மற்றும் இந்த நாட்பட்ட நோயிலிருந்து வெளிவரும் வழிவகை.
      • போதைப்பொருள் அடிமைப்படுதலின் மறைமுக அறிகுறிகள்.
      • மறுவாழ்வுக்கு செல்லுதல் மற்றும் அது ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழிவகுக்கிறது.
      • ஏன் Fentanyl ஆனது இலங்கையை அச்சுறுத்துகிறது. குநவெயலெட
      • அடிமைப்படுதல் மற்றும் மனநல சுகாதாரத்தை புறக்கணித்தல் என்பது ஏன் பெரிய தவறாக கொள்ளப்படுகின்றன?
      • கட்டிளமையும் கஞ்சாவும்
    13. சிறைச்சாலை புனர்வாழ்வு

      ஒழுக்கமான குடிமக்கள்.


      Snow

      (மூலம் - காவல்த் துறை திணைக்களம்)

      2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 99,036 குற்றஞ்சாட்டப்படாத கைதிகள் இருந்தனர், இவர்களில் 6.8% ஆனவர்களுக்கு பாடசாலைக் கல்வி கிடைக்கப் பெற்றிருக்கவில்லை, 52.9% ஆனோர் 5 ஆம் தரம் வரையில் மாத்திரமே கல்வி கற்றிருந்தனர் மற்றும் 85.1% ஆனவர்கள் 8 ஆம் தரம் வரையில் மாத்திரம் படித்திருந்தார்கள். எவ்வாறாயினும், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் உயர் தரத்திற்கு உட்பட்டவர்கள் 3.1% ஆனவர்கள் மாத்திரமேயாகும்.

      எனவே, ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது உயர்தரம் வரையில் கல்வி கற்றால் சிறைச்சாலைகள் மூடப்படலாம்.

  1. கைது செய்யப்பட்ட இடத்தில் குற்றவாளிகளின் விவரங்களை பதிவு செய்ய ப்ரோண்டோ போன்ற பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல். இந்த தகவல் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் அணுகக் கூடிய ஒன்லைன் தரவுத் தளத்தில் சேமிக்கப்படும். பொலிஸ் உள்ளடங்களாக பயனாளிகள் மற்றும் பயன்களை தனது கட்டை விரல் அடையாளத்தைப் பதிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும், களத்தில் இருக்கும் போது தேசிய பொலிஸ் தரவுத் தளத்தை உடனடியாக அணுகும் திறன் மற்றும் செயற் திறனை அதிகரித்தல், மற்றும் செயற் திறனை அதிகரிப்பதற்காக டிக்கெட்டுக்களை விரைவுப்படுத்துவது போன்ற எண்முறை மற்றும் நேர் சீரான செயற்பாடு.
  2. சிறைச்சாலைகளுக்கு கடன் நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல், அங்கு கைதிகளை அபராதம் மற்றும் நீதிமன்றக் கட்டணங்களில் இருந்து நிவாரணம் பெறும் பொருட்டு சமூக ரீதியிலான சேவைகளில் ஈடுபடலாம்.
  3. படித்துப் பகுப்பாய்வு செய்யப்பட்ட விஞ்ஞானம், இலக்கியம், மதம் மற்றும் வரலாறு குறித்த முன் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் சிறைத் தண்டணையை நான்கு நாட்களாக குறைத்தல

நீதி அமைச்சகம்

  1. பின்வருவனவற்றை செயற்படுத்துவதன் மூலம் ஊழலைக் குறைத்தல்:;
    • ஒவ்வொரு அமைச்சிற்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைக்கான ஆணைக்குழுவில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்படல் வேண்டும்.
    • கணக்காய்வு ஆணைக்குழுவில் இருந்தும் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு உறுப்பினரை நியமித்தல்.
    • அனைத்து கொள்முதல் செயல்முறைகளுக்கும் மின்-கொள்முதல் முறைமையை செயற்படுத்துதல்.
    • அரசியல் நிதியை நிர்வகிப்பதில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் பரப்புரைகளை ஊக்கப்படுத்துதல்.
    • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சரியான சொத்து பிரகடன முறைமையை அறிமுகம் செய்தல்.
    • ஊ. அரசு, சட்ட அமைப்புக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (SOEs) சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்கள் ஃ ஒப்பந்தங்களில் அரசாங்க நலன்களைப் பாதுகாப்பதற்காக திட்ட கொள்முதல், நிறுவனங்களில் நிலையான உட்பிரிவுகளை அறிமுகப்படுத்துதல்.
    • In the case of any breach of contract(s), the Government can at any given time, terminate or/and file a civil suit against the party who breaches the contract.
  2. நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பை விருத்தி செய்தல், அங்கு அடிப்படை வசதிகள், இருக்கை மற்றும் விளக்குகள் இருப்பதை உறுதி செய்தல்.
  3. நீதிமன்ற அறைகள், ஒலி உபகரணங்கள், மல்டிமீடியா உபகரணங்கள் அத்தியவசிய மென் பொருட்கள் மற்றும் வேகமான இணைய இணைப்பு ஆகியவற்றுடனான கணினி வழங்கல் மற்றும் மாற்றல்.
  4. நீதிமன்றத்தின் திறனான செயற்பாட்டை உறுதி செய்யும் பொருட்டு தேவையான அளவு பயிற்றப்பட்ட நீதி சாரா உத்தியோகத்தர்களை நியமித்தல்.
  5. மொழிப்பெயர்ப்பு ஆவணம், இஸ்டெனோகிரபி மற்றும் கணினி முறைமை முகாமைத்துவம் போன்ற நீதிமன்ற சேவைகளை வழங்க பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு நிறுவனத்தை நிறுவுதல்.
  6. எண்முறை நீதிமன்ற முறைமையை அறிமுகப்படுத்துதல்.
  7. பாலியல் வன்புணர்வு வழக்குகளில் விரைவான நீதிமன்றத்தை அறிமுகப்படுத்தல்.

    நீதிமன்றங்களானது பாலியல் வன்புனர்வு வழக்குகளை தினமும் விசாரணை செய்வதோடு 4 மாத காலப்பகுதிக்குள் குறித்த வழக்கு விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

    இது நிறைவேற்றப்படும்;

    • பாலியல் வன்புனர்வு வழக்குகளை விசாரிக்க அரப்பணிப்பான ஆளணியை கொண்டிருத்தல்.
    • ஒவ்வொரு மாவட்டமும் தடவியல் சான்றுகளை பரிசீலிக்க சிறந்த ஆய்வு கூடத்தைக் கொண்டிருத்தல்.
    • அனைத்து பொலிஸ் நிலையம் மற்றும் வைத்தியசாலைகளுக்கும் பாலியல் வன்புனர்வு வழக்கினை விசாரிக்கும் பொருட்டு விசேட தடவியல் உபகரணத்தை வழங்குதல்.
  8. பின்வருவனவற்றை இயலச் செய்யும் ஒன்லைன் தரவுத் தளத்தை உருவாக்குதல்;
    • சமர்ப்பிக்கப்பட்ட சட்ட வரைபை மக்கள் வாசிப்பதற்கு வழங்குதல். அதன் பாராளுமன்ற செயன் முறையின் போது, சட்ட மூலத்தை சமர்ப்பித்தவர் யார், அதன் தற்போதைய நிலவரம் மற்றும் மாற்றங்கள் போன்ற விபரங்களை தரக் கூடியதாக இருக்க வேண்டும்.
    • சபை அமர்வுகளை குடிமக்கள் நேரடியாக பார்வையிடல்.
    • நகர சட்டங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை ஒன்லைனில் வழங்குதல்.

    இது ஊழலைக் குறைப்பதுடன், குடிமக்களை சட்டவாக்க விடயங்களில் பங்கேற்பதை ஊக்கப்படுத்துகிறது.

  9. பொலிஸ் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட ஒன்லைன் வீடியோ தொடர்பாடல் வசதிகளுடனான போதைப் பொருள் நீதிமன்றத்தை அறிமுகம் செய்தல், அதன் மூலம் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை கைது செய்யும் போது சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக நேரடியாக மறு வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள்.

    போதைப் பொருள் வைத்திருத்தல் அல்லது விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு தற்போதைய சட்டங்களே பேணப்படல்.

    அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட மீதமான சமூகத்தில் சேவை செய்த பிறகு, குற்றவாளிகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் இலத்திரனியல் கண்காணிப்புடன் வீட்டில் தங்குவது, பகலில் வேலை செய்வது /படிப்பது மற்றும் இரவில் மேற்பார்வை மையங்களில் தங்குவது அல்லது கட்டமைக்கப்பட்ட திட்டத்துடன் பாதியளவில் வீட்டில் தங்குதல்.

இலக்குகள்.

உள்ளடக்கிய விவசாய மாற்றத்தை செயற்படுத்துதல்:

  • விவசாயிகளுக்கான விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
  • விவசாயிகளின் வீட்டு வருமானத்தை அதிகரித்தல்.
  • பாதுகாப்பான, மலிவான மற்றும் சத்தான ஓய்வு ஆண்டின் சமமான நுகர்வினை அதிகரித்தல்
  • விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல.

செயற் திட்டம்.

  1. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகித்தல்.

    தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.

  2. தேவையான இயந்திரங்களை பயன்படுத்தி உள்நாட்டு அதிகாரிகளால் விவசாயிகளுக்கான ஆரம்ப நிலத் தயாரிப்புக்களை மேற்கொள்ளுதல்.
  3. விவசாயத்திற்கு ஆதரவளிக்கும் பொருட்டு நீர்ப்பாசண உட்கட்டமைப்பை செய்தல்.;
    • 2,400 குளங்களை புனர்நிர்மாணம் செய்து கொள்திறனை அதிகரித்தல்.
    • குள நீர்வீழ்ச்சி முறைமையை அடையாளம் கண்டு விருத்தி செய்தல்.
    • புனர்நிர்மாணம் செய்த நீர்ப்பாசண கிணறுகளை விருத்தி செய்தல்.
  4. தரமான விதைகள் மலிவான விலையில் சரியான நேரத்திற்கு கிடைப்பதை உறுதி செய்தல
  5. திரவ உரங்கள் மற்றும் கரிம விவசாயத்திற்கு மானியம் வழங்குதல்.
  6. வறட்சியான காலத்தில் விவசாயிகளின் வாழ்க்கைச் செலவை ஈடு செய்வதற்காக உர மானியத்தை பணமாக செலுத்துதல்.
  7. கரிம விவசாயத்தின் இலாபத்தை மேம்படுத்துவதற்கும் அதிகரிப்பதற்கும் ஒரு பிரத்தியேக E-commerce தளத்தினை உருவாக்குதல், இதன் மூலம் நுகர்வோருக்கு கரிம விளைபொருட்கள் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கலாம்.
  8. அறிவுபூர்வமான விவசாயத்தை அமுல்படுத்துதல்.;
    1. விவசாயியின் பயிர் விவரக் குறிப்பு மற்றும் கண்காணிப்பு.
    2. 7 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு
    3. காலநிலைப் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் காலநிலை இஸ்மார்ட் பாசன விவசாய நிகழ்ச்சி.
    4. ஊர்ப்பயன்பாடு பற்றிய பரிந்துரை.
    5. பயிர்நிலைக் கண்காணிப்பு
    6. புவியியல் அடையாப்படுத்தல் மற்றும் பகுதிகளை அடையாளம் காணுதல்.
    7. விவசாயிகளுக்கு பயிர்களின் குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் அளிக்க பகுதி ஆய்வுகள்.
    8. அறுவடைக் கண்காணிப்புக்கள்
    9. பூச்சிய அளவிலான நோய் மற்றும் ஆலோசனைகள் (சரியான நேரத்திலான பயிர் ஆலோசனை)
    10. நாற்று நிலைத் தொடக்கம் விற்பனை வரையான முடிவுக்கு முடிவை கண்டறிதல்.
    11. விவசாயிகளுக்கான பயிர் ஆலோசனை தொலைபேசி அப்லிகேஷன் பயன்பாடு.
    12. அறுவடையின் அளவை புரிந்துக் கொள்வதற்கு செயற்கை கோள் படங்கள் மூலம் இலங்கையின் பயிர்களின் முழுமையான வரைப்படத்தை பெறுதல்
    13. விநியோகஸ்தர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையில் அல்காரிதம் அடிப்படையிலான பொருத்தப்பாட்டை செய்தல்.
    14. நாடு முழுவதும் பயிர் விளைச்சலைக் கணிப்பதன் மூலமும் உகந்த தீர்வுகளை வழங்குவதன் மூலமும் விவசாய விரயத்தைக் குறைத்தல்.
  9. பயிர் நடும் பருவத்தின் தொடக்கத்திலும் மற்றும் மீதமுள்ள கட்டத்திலும் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டில் வளர்க்கப்படும்; புதிய உற்பத்திகளுக்கும் தற்போதைய இறக்குமதி வரியின் 50% விதித்தல்.
  10. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதார மையத்தை கட்டுதல்.
  11. சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பயிர் அறுவடை பற்றி ஒளிநாடாக்களை யூடியூப் இல் பகிர்தல்..
  12. இணையத்தின் வழியாக பயிர் உற்பத்தி பற்றிய அன்றாட தகவல், உள் விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய விபரங்களை வழங்குதல்.
  13. உள்நாட்டு சந்தைப்படுத்தல் ஒளியலைகளை பயன்படுத்தல் மற்றும் விவசாய விளைப் பொருட்களின் நுகர்வினை ஊக்குவித்தல், மொத்த சந்தைகளை வலுப்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாய கூட்டுறவு சந்தைகளை உருவாக்குதல் மற்றும் ஒப்பந்த விவசாயத்தை மேம்படுத்துவதற்காக விளம்பர பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்.
  14. மாவட்ட வாரியாக தேவைகளுக்கு ஏற்ப விவசாய விளைப் பொருட்களின் சேமிப்பிற்கு தேவையான தளவாட இணைப்புக்களை உறுதிப்படுத்த ஒரு தேசிய சேமிப்பக கட்டத்தை நிறுவுதல்.
  15. விவசாயக் அமுல்ப்படுத்தல்கள் வாடகைக்கு கிடைக்கும் தன்மையை ஊக்குவிப்பதற்கு தொலைப்பேசி அப்லிகேஷன் அடிப்படையிலான அமைப்பை ஆரம்பித்தல்.
  16. வழங்குகை மூலமாக, பத்து பெரிய அளவிலான கலப்பின தனிமைப்படுத்தப்பட்ட விதை தோட்டங்களை திறக்க தனியார் துறைக்கு உதவுதல்.;
    1. அரச பண்ணைகளுக்குச் சொந்தமான ஒரு மரத்திற்கு 120 தேங்காய்கள் தரக் கூடிய கலப்பின தேங்காய் விதைகள (DXT)
    2. செயற்கை மகரந்த சேர்க்கைக்கு பயிற்சியளித்தல்.

விவசாய ஏற்றுமதி

  1. விவசாய உற்பத்தி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் கட்டுநாயக்க, பலாலி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொக்கல, மத்தள மற்றும் கண்டியில் திகன ஆகிய விமான நிலையங்களில் அனைத்து பொருட்கள் ஏற்றும் விமானங்களுக்கும் நிறுத்தி வைக்கும் வசதி மற்றும் விமானத்தை இறக்கும் வசதிகளை வழங்குதல்.
  2. திருகோணமலை, மட்டக்களப்பு, கொக்கல மற்றும் திகன(கண்டி) இலிருந்து பொருட்கள் ஏற்றும் விமான சேவைகள் சர்வதேசத்திற்கு செல்வதற்கு வசதிகள் செய்தல்.
  3. அனைத்து விவசாய உற்பத்திகளையும் குறைத்து, அனுமானிக்கக் கூடிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கையை அமுல்படுத்துதல்.
  4. துரியன் மற்றும் மா ஏற்றுமதிக்கான 300 பில்லியன் டொலர் இலக்கை அடைய பொது தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல், தனியார் துறைக்கு தாவரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குதல்.

    நூற்றுக்களை திறக்க மற்றும் தாவரங்களை விற்பனை செய்வதற்காக தாய்லாந்திலிருந்து துரியன் தாவரங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தல்.

  5. தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இளம் இனிப்பு-தேங்காய் விதைகளை தனியார் துறைக்கு வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்ட விதை தோட்டங்களைத் திறந்து தாவரங்களைவ விற்க உதவுகிறது.
  6. வரிச்சலுகைகளை வழங்குவதன் மூலம் உள்ளுர் மற்றும் ஏற்றுமதி சந்தைக்கு மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் செயலாக்கத்தை ஊக்குவித்தல்.

இலக்குகள்

  • தற்போதுள்ள மற்றும் எதிர்கால பரம்பரைக்காக சுத்தமான பாதுகாப்பான, மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தல்.
  • இயற்கையின் ஆயள் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்தல்.
  • வாழக்கூடிய மற்றும் பிரியத்திற்குரிய இலங்கையை கட்டியெழுப்புதல்.

  • செயற் திட்டம்

    1. சுர்வதேச சூழற் குறியீடுகளில் இலங்கையின் தரத்தை மேம்படுத்துதல்.
    2. மறு சுழற்சி செய்வது குறித்து புத்தகங்கள் மற்றும் சூழல் குறித்து மேலும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் தேவை குறித்து மூன்று மொழிகளிலுமான ஒளிநாடாக்கள் மூலம் ஊக்குவித்தல்.
    3. 5 ஆண்டுகளுக்குள் 200 மில்லியன் மரங்களை நடுவதன் மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல்: ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 மில்லியன் மரங்களை மறுக்காடாக்கத்திற்காகவும், 100 மில்லியன் மரங்களை வணிக பயன்பாட்டிற்காகவும் நடுதல்.
    4. உலக பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஒளிநாடாக்கள் மற்றும் மறுசுழற்சி புத்தகங்கள் மூலம் மாணவர்களுக்கு சூழல் உயர்ததிறன் மற்றும் பாதுகாப்பு குறித்து கற்பித்தல்.
    5. உயிரியல் பூங்காக்களுடன் இணைந்து அழிந்து வரும் உயிரினங்களுக்கான இனப்பெருக்க மையங்களை உருவாக்குதல்.
    6. 26 வன விலங்கு பூங்காக்களை மேம்படுத்துதல் (மொத்தம் 57,376 பரப்பளவில் ) மற்றும் உள்ளுர் வனவிலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.;
      • வனவிலங்கு பூங்காக்களுக்குள் கூடுதல் வளங்களை உருவாக்குதல்.
      • இயற்கை வாழிடங்களை பாதுகாக்க வெறிச்சோடிய பகுதிகளில் மரங்களை நடுதல்.
      • வறட்சியின் போது விலங்குகளுக்கு குடிநீரை வழங்க சூரிய நீர்விசை இயக்க குழாய்களை நிறுவுதல்.
      • சத்தான புல் வகைகளை வளர்த்தல்.
      • தற்போதுள்ள பூங்காக்களின் வெளியேறும் இடத்திற்கு அருகாமையில் 200 ஏக்கர் புதிய நிலத்தில் வனவிலங்குகளுக்காக அறிமுகம் செய்தல் மற்றும் அவற்றிற்கு உயிர்வாழ்வதற்கு போதுமான அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்தல்.
    7. பயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத விலங்குகளை இணங்கண்டு இனப்பெருக்கம் செய்தல்.
    8. குப்பைகள் குவிந்து கிடக்கும் மற்றும் நுளம்புகள் வளரும் பிரதேசத்தை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவற்றின் படங்களை பொது மக்களுக்கு அனுப்பக் கூடிய ஒரு தளத்தை அறிமுகப்படுத்தல். ஒரு வருடத்திற்குள் நாட்டை சுத்தம் செய்வதற்கான பிரச்சாரத்தை இலங்கை இராணுவம் தொடங்குதல்.
    9. கால்வாய் தூய்மைப்படுத்தல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் நீர்முனை ஈர்ப்புக்கள், கால்வாய் பயணங்கள் போன்வற்றுக்கு ஏற்ற கால்வாய்களை இணங்காணுதல்.
    10. கார்பன் தரத்தினை குறைக்க GBI (பசுமை கட்டிடப் புரட்சி) அல்லது LEED(எரிசக்தி மற்றும் சூழல் வடிவமைப்பில் தலைமைத்துவம் ) போன்ற சான்றிதழ்களை வழங்குதல்.
    11. பாதிக்கப்பு மதிப்பீட்டை நடாத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் ஏற்றுக் கொள்ளத் தக்க திட்டத்தை தயாரித்தல்.
    12. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வசதியான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்துகளுடன் பொதுப் போக்குவரத்து முறையை நெறிப்படுத்துதல் (கொழும்பு இனிய சவாரி திட்டம்)
    13. ஆற்றலுடைய சிறந்த தெரு விளக்கு முறைமையை அறிமுகப்படுத்துதல்.
    14. நகராட்சி திடக் கழிவுகளை பராமரிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் நிலையங்களை அமைத்தல். பொது-தனியார் கூட்டாண்மை மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்படல். இந்த மின் நிலையங்களுக்கு அரசு இயக்க கட்டணத்தை செலுத்தும்.

    கடற்கரைச் சூழல் பாதுகாப்பு

    1. கடற்கரை முகாமைத்துவ முறைமை.
      • கடற்கரையோரங்களின் உயர் அரிப்புப் பகுதிகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகளை அடையாளம் காணுதல். எவ்வகையான கட்டமைப்புக்களை நிர்மாணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க குறித்த பகுதியின் விரிவான வரைப்படங்களை பெறுதல்.
      • இலங்கையில் 90% பவளப் பாறைகள் இறந்து விட்டன, எனவே ஹிக்கடுவை, கல்பிட்டி, சிலாவத்துறை, திருகோணமலையில் உள்ள புறா தீவு, மட்டக்களப்பிள் உள்ள கயங்Nணி போன்ற கடல் சரணாலயங்கள் பாசிக்குடா பவளப்பாறை என்பவற்றையும் பாதுகாக்க “பவளப் பாறை பணிக்குழுவை நிறுவுதல்”
    2. இந்த பவளப் பாறைகளை புதுபிக்ககும் வழிமுறைகள் குறித்து உள்ளுர் மீன்பிடி சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
      உ.ம். குறைந்த விலை பவள மறுசீரமைப்பு முறைகள்.

    பல்லுயிர்.

    1. உள்நாட்டு கவனம் செலுத்தல் பொருளாதார-சுற்றுலா மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் ஊடாக பல்லுயிரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.;
      • தேசிய பல்லுயிர் தகவல் தொடர்பு, கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு (ஊநுPயு) செயல் திட்டத்தை உருவாக்கி செயற்படுத்துதல்.
      • பொது உறுப்பினர்கள் பல்லுயிர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் குடிமக்களுக்கு அறிவியல் மூலம் விழிப்புணர்வூட்டுதல்.
      • சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு மற்றும் பிற பல்லுயிர் தொடர்பான முகவர்களின் வலைத்தங்கள் ஊடாக இருப்பை உறுதிப்படுத்தல்.
    2. இயற்கையை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.;
      • முன்பள்ளி முதல் உயர்க் கல்வி நிறுவனங்கள் வரை பொதுக் கல்வியின் அனைத்து மட்டங்களிலும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் முகாமையாளர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சியினை வலுப்படுத்துதல்.
      • இயற்கையை வெளிப்புற கற்றலின் மூலம் தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துவதுடன் இயற்கை சங்கங்கள், பசுமை முகாம்கள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு உள்ளிட்ட இணை பாடத்திட்ட பள்ளி நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து பலப்படுத்துதல்.
      • இதுபோன்ற முகாம்கள் நாடு முழுவதும் எதிரொலிக்க இயற்கை முகாம்களுக்கான தரப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்குதல் அல்லது விருத்தி செய்தல்.
      • பல்லுயிர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கு பொருத்தமான அமைப்புக்களுடன் இணைந்தவாறு இளைஞர் குழுக்களை இயக்குதல்.

    வெள்ள முகாமைத்துவம்.

    1. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுக்க மழைக்காலங்களில் தொடர்ச்சியான நதி மற்றும் நதி-வாய் முகாமைத்துவம், பருவக்கால அகழ்வாராச்சி மற்றும் நிரப்புதல் ஆகியவற்றை செய்தல்.
    2. வெள்ளப்பெருக்கை தணிக்க இலங்கை கடற்படையின் பொறியிலாளர்களை நதி வாய் முகாமைத்துவ அதிகாரிகளாக நியமித்தல்.

    அனர்த்த முகாமைத்துவம்.

    1. தேசிய பேரிடர் அபாய சுயவிபர ஆய்வை நடாத்தி, பேரழிவுகள், பேரழிவு ஏற்படக் கூடிய பகுதிகள் மற்றும் தீவிரத்தன்மையின் அளவை அடையாளம் காணுதல்.
    2. மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கை நிலச்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளின் தரவுத்தளத்தை பராமரித்து, எந்தெந்த பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள தொடர்ந்து அவந்நைக் கண்காணித்தல்.

    வறட்சி முகாமைத்துவம்.

    1. ஏற்பனவே காணப்படுகின்ற மற்றும் சாத்தியமான அபாயங்களைப் புரிந்து கொள்ள வறட்சி அபாய மதிப்பீட்டை மேந்கொள்ளுதல்.
    2. விவசாயிகள், ஆயர் சமூகம் மற்றும் கடற்கரையோர சமூகங்களுக்கான வேலைக்கான பணம் மற்றும் அவசர கால வாழ்வாதார தொகுப்புக்கள் மூலம் உணவு அணுகலை அதிகரித்தல் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களை பாதுகாத்தல்.
    3. நீர்த் தெளிப்பு, சொட்டு நீர்ப் பாசண முறைமை போன்ற நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்குதல்.
    4. சேமிப்பகத்தை உருவாக்கி, பற்றாக்குறை காணப்படும் பிராந்தியங்களுக்கு நீர் பரிமாற்றத்தை இயலச் செய்தல், எனவே அதிக மற்றும் சமமான விநியோகம் மற்றும் நீர்வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தவதற்கான ஒரு தெரிவாக இருத்தல்.
    5. கூடுதலான கால்நடை உணவு, நீர் ஊடுகை, நீரினை சிறு நீர்ப் பைகளைக் கொண்டு வழங்குதல் மற்றும் நாடு தழுவிய சிகிச்சை மூலம் கால் நடைகளை பாதுகாத்தல்.
    6. கால்நடை பொருட்களை வழங்குதல், நதிக் கரையை பழுதுப் பார்த்தல் மற்றும் உணவுச் சங்கிலி அச்சுறுத்தலுக்கு எதிராக உள்ளுர் தயாரிப்புக்களை வலுப்படுத்துவதன் மூலம் புதிய ஆபத்துக்களை தணித்தல்.
    7. முhற்றுப் பயிர்கள் / பயிர் வகைகள் / சிறப்பான விவசாய நடைமுறைகள் / வறட்சி சூழ்நிலைக்குப் பொருத்தமான பிற முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் நடுகை உள்ளிட்ட மாவட்ட தற்செயல் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். .
    8. நீர் முகாமைத்துவ முறைமைகளை பின்பற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கு வரி சலுகைகளை வழங்குவதன் மூலம் பிராந்திய சுய நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைந்த நீர் நிர்வாகத்தை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் அதிகரித்தல்.
    9. நிலையான மறுசுழற்சி விதிமுறைகளை பின்பற்றி மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாட்டை அதிகரித்தல்.
    10. சீரழிந்த நீரோடைகள், நீர்வழிகள் மற்றும் ஈரநிலங்கள் போன்ற முக்கியமான சுற்றுச் சூழல் அமைப்புக்களைப் பாதுகாத்து மீட்டெடுங்கள்.
    11. சூழல் ரீதியாக சிறந்த வன நிர்வாகத்துடன் வன ஆரோக்கியத்தை மீட்டெடுத்தல்.

    வனவிலங்குப் பூங்காக்கள்.

    1. மனித-யானை முரண்பாட்டிற்கான தீர்வுகள்.

      வறண்ட வலயத்தில் தான் பெரும்பாலான மனித-யானை முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கப்படுகின்றன. சராரரியாக, வருடாந்தம் 70 மனித மற்றும் 250 யானைகளின் உயிர்கள் மனித-யானை முரண்பாட்டினால் இழக்கப்படுகின்றன. கடந்த 70 வருடங்களாக வன விலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தால் இடப்படும் காணிகளுக்கான வேலிகளின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டு இருக்கிறார்கள். எவ்வாறாயினும், மனித-யானை முரண்பாட்டின் அதிகரிப்பானது குறித்த தடுப்பு முறையின் வீரியமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால், யானைகளின் மொத்த தொகையில் 30% மாத்திரமே வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. மீதி 70% வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நிலத்தில் வாழுகின்றன.

      முனித-யானை முரண்பாட்டிற்கு உள்ளாகும் கிராமங்களை சுற்றி வேலிகளை அமைத்தல் (இது 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வினைத்திறனற்ற முறை என நிரூபிக்கப்பட்டுள்ளது). உயிரியல் வேலிகளை அமைத்தல், சென்சார் மூலம் இயங்கும் மெய்நிகர் வேலிகளை அறிமுகப்படுத்துதல் என்பன மனித-யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு ஊடுருவலை ஏற்படுத்தி யானைகளை எச்சரிக்கின்றன. ஏனெனில், மின்சார வேலியிடல் காரணமாக யானைகளில் மின்சாரம் பாய்ந்த பல சம்பவங்கள் காணப்படுகின்றன.

      மின்சார வேலியின் இரு புறமும் யானைகளைக் கொண்ட பகுதிகளை அடையாளம் காண இலங்கை விமானப் படை கூகில் அடைவிடம் மூலமாக காணப்படுகின்ற மின்சார வேலிகளை புவியியல் ரீதியாக அடையாளம் காணுதல்.

    2. வறட்சிக் காலங்களில் காட்டு விலங்குகளி;ன இறப்பு விகிதத்தை குறைக்க மொத்தம் 573,376 ஹெக்டேயர் பரப்பளவில் தற்போதுள்ள 26 வனவிலங்கு பூங்காக்களின் விளிம்பு திட்டங்களை பெறுவதன் மூலம் விலங்குகளுக்கான ஒளியலைகள், நீர்த் தொட்டிகள் மற்றும் குடி நீர் வசதிகளை மேம்படுத்துதல்.
    3. அனைத்து வனவிலங்கு பூங்காக்களிலும் காயமடைந்த விலங்குகளுக்கான மறுவாழ்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.
    4. வேட்டைக்காரர்களி;ன் அத்து மீறல் மற்றும் வேட்டைக்காரர்களை கண்காணிக்க மற்றும் பிடிக்க வனவிலங்கு பூங்காக்களில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை முறைமைப்படுத்துதல்.
    5. வனத்துறை அதிகாரிகள் தங்கள் தேவைகளை வெளிப்படுத்த பின்னூட்டன் கணக்கெடுப்பை நடாத்துதல்.
    6. சாலைகளுக்கு வெளியே பரீட்சயமான ஒழுங்கைகளை ஒதுக்குதல்.
    7. வனவிலங்கு பூங்காவைப் பார்வையிடுவதற்கு தரப்படுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்துதல்.
    8. சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சபாரி வாகனத்தை வாங்குவதற்கு நிதி உதவி வழங்குதல்.
    9. சபாரி வழிகாட்டிகளை பெயரிட்டு அவர்களுக்கு ஒளிநாடாக்கள் மூலம் பயிற்சியளித்தல்.
    10. சபாரி தொகுப்புகளை பற்றிய ஊக்குவிப்பினை வழங்குவதுடன் ஒன்லைன் மூலமாக டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தல்.
    11. ஓவ்வொரு பூங்காவிற்கும் தனித்துவமான அனுபவங்களை நிறுவி அவற்றின் சந்தைப்படுத்தலுக்கு மையமாக்குதல்.
    12. வனவிலங்கு பூங்காக்களில் மோட்டார் பாதைகள் மற்றும் நுழைவு அறிகுறிகளில் விளம்பரத் தன்மை மற்றும் காணும் நிலையை அதிகப்படுத்துதல்.
    13. ஒருங்கிணைக்கப்பட்ட திறந்த உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார இடங்கள் மூலமாக பார்வையாளர் மையங்களை மேம்படுத்தல்.
    14. கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட கல்வித் தொகுப்பை உருவாக்குதல்.

இலக்குகள்

  • சிறந்த மற்றும் மலிவான சுகாதாரத்திற்கான அணுகல்.
  • சிறப்பான மருத்துவத்தை தொடருதல்.
  • மக்களை அவர்களது ஆரோக்கியத்தில் முழு தினையும் அடைவதற்கு அவர்களுக்கு உதவுதல்.

  • 50 மில்லியன் நோயாளிகள் வருடாந்தம் வெளிநோயாளர் பிரிவிற்கு வருகைத் தருகின்றனர்.
  • 15,000 தினசரி அனுமதிகள்
  • 5 மில்லியன் நோயாளிகள் வருடாந்தம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
  • 1,085 வைத்தியசாலைகள் நாட்டில் காணப்படுகின்றன.
  • வைத்தியசாலைகளின் மொத்த கட்டில்களின் எண்ணிக்கை 83,275

செயற் திட்டம்

  1. சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சராசரி ஆயுட் காலத்தை 3 ஆண்டுகளாக அதிகரித்தல்.
  2. இலங்கையில் இறப்பிற்கான முதல் 10 காரணிகளை கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கான நட்வடிக்கைகளை எடுத்தல்.

    மரணத்திற்கான 10 காரணிகள்;

    • இதயநோய்
    • பக்கவாதம்
    • நீரிழிவு நோய்
    • மூச்சுத் திணறல் அல்லது ஆஸ்துமா
    • ஆல்சீமரின் நோய்நிலைகள்.
    • நுரையீரல் நோய்கள்
    • நாள்ப்பட்ட நுரையீரல் நோய்கள்.
    • தற்கொலைகள்
    • நாளப்பட்ட சிறுநீரக நோய்கள்.
    • சிரோசிஸ்.
  3. கொழும்பை அண்டிய முக்கிய 7 பிரதேசங்களில் (மொரட்டுவ, பிலியந்தல, கொட்டாவ, பத்தரமுல்ல, கடவத்த, ராகம மற்றும் நீர்க்கொழும்பு) முழு அளவிலான வைத்தியசாலைகளை அமைத்தல்.
    • கொழும்பின் புற நகர் பகுதிகளிலும் உயர்தர சுகாதார சேவையை அணுகக் கூடியதாக இருக்கும்.
    • இது சுகாதார தேவைகளுக்காக கொழும்பு நகரிற்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்.
  4. மகரகம புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலையிலும் புற்று நோயியல் பிரிவு ஒன்றை நிறுவுதல்.
  5. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன மற்றும் உபகரணங்களுடன் கூடிய நோயாளிகளை பரிசோதிக்கும் ஆய்வுக் கூடங்களை நிறுவுதல்.
  6. இதயம், நுரையீரல், நரம்பியல், கண், மற்றும் குழந்தகளுக்கான நோயயியல் போன்ற பொருத்தமான சிறப்பு வைத்தியசாலைகளுடன் இணைந்து சுகாதார மையங்களை கட்டுதல்.
  7. சத்திர சிகிச்சைக்காக நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் பொருட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியரகளுக்காக புதிய அதிக நேர கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தல்.
    • தற்போது நோயாளிகள் 1 வாரம் முதல் 10 மாதங்கள் வரை காத்திருப்பு பட்டியலில் இடப்படுகின்றனர்.
    • புதிய கட்டண திட்டத்தின் மூலம் 8 மணி நேர வேலைக்குப் பயன்படுத்தப்படும் சத்திர சிகிச்சை அரங்குகளை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் உட்பட 12 மணி நேரம் வரை நீடிக்கலாம்.
  8. நோயாளிகள் காத்திருக்கும் காலத்தைக் குறைப்பதற்கு பயன்படுத்தாது காணப்படும் சத்திர சிகிச்சை அரங்குகள், சோதனை மற்றும் இஸ்கேள் அறைகள் என்பவற்றை பயன்படுத்தும் மருத்துவ துறை ஊழியர்களுக்கு குறித்த புதிய கட்டணத் திட்டத்தை ஏற்புடையாக்குதல்.
  9. நாட்டின் தகுதி வாய்ந்த வைத்தியர்களின் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர்களின் கொள்த்திறன் அளவை 1,300 இலிருந்து 2,000 ஆக அதிகரித்தல்.

    தொடர்புடைய பிற சுகாதார ஊழியர்களையும் அதிகரித்தல்.

  10. தாதியர் கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர் எண்ணிக்கையையும் அதிகரித்தல்.

    சிரேஷ்ட மட்ட தாதியர்களுக்கு அவர்களது திறன்களை விருத்தி செய்வதற்கு வெளிநாட்டு புலமைப் பரிசில்களை வழங்குதல்.

  11. 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT அறிமுகத்தின் கீழ் தனியார் வைத்தியசாலைகள் நிறுவப்படுதலை ஊக்குவித்தல்.
    • பொது சேவை உத்தியோகத்தர்களுக்கு மேலதிக காப்புறுதி திட்டத்தின் படி மருத்துவ பராமரிப்பினை வழங்குதல்.
    • சத்திர சிகிச்சைக்காக மாதக்கணக்கில் வரிசையில் இருக்கும் நோயாளிகள் இந்த புதிய தனியார் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவர்.
  12. ஒன்லைன் மூலமாகவும் தொலைபேசி அப் மூலமாகவும் கிடைக்கக் கூடிய “Digital Health Hub” (DHH) இனை அறிமுகப்படுத்துதல்

    எண்முறை அடையாள அட்டையின் உதவியுடன் DHH இணை அணுகலாம்,
    DHH இ ன் சேவைகள் பின்வருமாறு,;

    • கடந்த 10 ஆண்டுகளுக்கான நோயாளரின் சுகாதார வரலாற்றை அணுகலாம்.
    • அனைத்து வைத்தியசாலைகள், சிறிய வைத்திய நிலையங்கள், இஸ்கேள், வைத்தியர்களின் சந்திப்பிற்கான நேர மற்றும் இடங்களை காணுதல்.
    • திட்டமிடப்பட்ட சந்திப்புக்கள் குறித்த விழிப்பூட்டல்கள்.
  13. ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் கிடைக்கக் கூடிய மருந்துகளை கண்காணிக்கக் கூடிய ஒன்லைன் தளத்தை விருத்தி செய்தல்.
    • இது ஏனைய வைத்தியசாலைகளில் கிடைக்கக் கூடிய மருந்துகளின் அளவை ஒரு வெளி சூழலில் இருந்து பார்க்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்கும்.
    • .தற்போது காணப்படும் மருந்துகளின் அளவை கண்காணிப்பதன் மூலம் மருந்துகள் வெளியே கொடுக்கப்படுவதை தவிர்த்து வைத்தியசாலைகள் முன்கூட்டியே மருந்துகளை வாங்கலாம்.
  14. வைத்தியசாலைகளின் கட்டில்களின் வினைத்திறனான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக வார்டுகளில் காணப்படும் படுக்கைகளின் விநியோகத்தை எண்முறையாக்குதல்.
  15. இரத்த வங்கியுடன் இணைந்து நோயாளிகளின் அனைத்து பரிசோதனை ஆய்வுக் கூடத்தையும் எண்முறை மயமாக்கி, நோயாளிகளின் வைத்திய நிலைகளின் முறைகளை முன்னறிவிக்க இந்த அறிக்கையை பயன்படுத்துதல்.

    எந்தவொரு வைத்திய நிலையையும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை நோயாளிகள் எடுக்கலாம்.

  16. பின்வரும் தரத்திற்கு அமைவாக கழிவறைகளை விருத்தி செய்து பேணுதல்.:
    • அனுமதிக்கப்பட்டிருக்கும் 20 நோயாளிகளுக்கு 1 கழிவறை.
    • வெளிநோயாளர்களுக்கு குறைந்தது 4 கழிவறைகள்.
    • வைத்திய மற்றும் பொது ஊழியர்களுக்கு தனியான கழிவறைகள்.
  17. அத்தியவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கான மலிவு விலைக் கொள்கையை அறிமுகப்படுத்தி பேணுதல்.
  18. சந்தைகளுக்கு வெளியாக்கப்படும் மருந்துகள் குறித்து ஒப்புக் கொள்ளப்பட்ட தரத்தை பேணுதல்.

    மருந்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி விளக்கும் விபரங்கள் அடங்கிய லேபில்களை அறிமுகப்படுத்துதல்.

  19. மருத்துவ காரணங்களுக்காக குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாத குடும்பங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை எளிதாக அணுகக் கூடிய வசதிகளை வழங்குதல்.
  20. நாடப்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு, சரியான வடிகட்டல் வசதியுடன் ஆழமான கிணறுகளை உருவாக்கும் பொருட்டு சிறுநீரக நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை புவியியல் ரீதியாக இணங்காணுதல். ஏற்கனவே குறிப்பிடத்தக்க கிராமங்களில் அவ்வாறான வடிகட்டல் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

    உ.ம். Hayleys PLC ஆல் செய்யப்பட்ட சாட்டியாவர திட்டம்.

  21. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகித்தல்.

    தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.

  22. சுகாதார நிபுணர்களால், குறிப்பாக கிராமப்புறங்களுக்கு ஒன்லைன் அழைப்பு அல்லது முன்பே பதிவேற்றப்பட்ட தரவு மூலம் தகவல் மற்றும் நோயறிதலை வழங்க தொலைவைத்திய சேவைகளை அறிமுகப்படுத்துதல்.
  23. தொற்றா நோய்களின் ஆபத்தைக் குறைக்க பெரியவர்கள் மற்றும் சிறுவர்களிடையே உடல் செயற்பாடுகளை மேம்படுத்தும் ஒளிநாடாக்களை உருவாக்குதல்.
  24. அனைத்து வைத்தியசாலைகளிலும் முறையான கழிவகற்றும் முறையை அமுல்;படுத்துதல்.
  25. கிராமப்புறங்களுக்கான நியமனங்களுக்காக வைத்திய ஊழியர்களை ஈர்க்கும் பொருட்டு:;
    • குழந்தைகளுக்கு சர்வதேச பாடசாலைகளை உருவாக்குதல்.
    • தேவையான சுகாதார வசதிகளுடன் கிராமப்புற வைத்தியசாலைகளை புதுப்பித்தல்.
    • தனியார் பயிற்சிக்காக தனியார் வைத்தியசாலைகளை கட்டுதல்.
    • அனைத்து அத்தியவசிய பொருட்களையும் வழங்கி வைத்தியரின் காலாண்டு சேவைக்கு வசதி செய்து கொடுத்தல்.
  26. தாதியர்கள், மருந்தாளர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் கிடைப்பதை அதிகரிக்கும் பொருட்டு துணை மருத்துவ துறையில் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வருதல்.
  27. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விபத்து இல்லாத வீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
  28. ஆயர்வேத சிகிச்சைப் பிரிவை உருவாக்குதல்;
    • ஆயர்வேத சிகிச்சையளிப்பவர்களுக்கு ஆயர்வேதத்தில் பயன்படுத்தப்படும் புதிய முறைகளுக்கான பயிற்சி மற்றும் அணுகலை வழங்குதல்.
    • ஆயர்வேத மருந்து உற்பத்தியை வலுப்படுத்த அதிக மூலிகைப் பண்ணைகளை நாட்டுதல்.
    • மேற்கத்தேய மருத்துவர்களை போலவே ஆயர்வேத மருத்துவர்களுக்கும்; வருமானம் மற்றும் ஓய்வூதிய திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
    • சுற்றுலா மையங்களில் சிகிச்சை மையங்களை நிறுவ நாட்டின் உயர் மட்ட ஆயர்வேத சிகிச்சையளிப்பவர்களுக்கு உதவுதல்.
  29. குடிப் பழக்கத்துடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களைக் குறைக்க “குறைந்த ஆபத்துடைய குடி வழிகாட்டலை” அறிமுகப்படுத்துதல்.
  30. குடிமக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த அனைத்து மட்டங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட நித்திரை பழக்கம் பற்றிய வழிகாட்டுதலை அறிமுகப்படுத்துதல்.
  31. மனநல பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆலோசனை மற்றும் சிகிச்சைகளுக்கு தேiவாயன தொழில்முறை ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய மையங்களை நிறுவுதல்.
  32. மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ள நபர்களை அடையாளம் காண நடத்தை பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல்.
  33. அவசர கால சூழ்நிலைகளில் பொது மக்களுக்கு அடிப்படை முதலுதவி நுட்பங்களை கற்பிக்க ஒன்லைன் ஒளிநாடாக்களை அடிப்படையாக கொண்ட பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல்.
  34. பாடசாலைகள், வேலைத்தளங்கள், வைத்தியசாலைகள் மற்றும் மத நிறுவனங்களில் சிறந்த சுகாதாரப் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தல்.
  35. மாதவிடாய் காரணமாக பெண்கள் வருகை தராமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்:;
    • பாடசாலைகள், சமூகங்கள் மற்றும் குடும்பங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு திட்டங்களை நடாத்துதல்:
      • மாதவிடாய் செயல்முறை
      • மாதவிடாய் துணியை கழுவுவதன் முக்கியத்துவம்
      • மாதவிடாயின் போது பயன்படுத்தக் கூடிய உறிஞ்சிகளின் வகைகள்.
      • இளம் பெண்களின் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு கற்பித்தல்.
      • மாதவிடாய் காலத்தில் எதை எதிர்ப்பார்க்கலாம், அந்த காலத்தில் அவர்களது சுகாதாரத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பன குறித்து இளம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தயார்ப்படுத்துதல்.
    • மாதவிடாய் சுகாதரம் குறித்த ஒன்லைன் விழிப்புணர்வு ஒளிநாடாக்களை உருவாக்குதல்.
    • அகற்றும் வழிமுறைகளை நிறுவுதல்.
    • மாதவிடாய் சுகாதார நிர்வாகத்தை ஆதரிக்கும் நீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான வசதிகளை உருவாக்குதல் (ஒவ்வொரு 40 சிறுமியர்களுக்கும் ஒரு கழிப்பறை, தண்ணீர் மற்றும் சவர்க்காரம்.)
    • கிராம புறங்களில் சுகாதார நப்கின்களின் உற்பத்தியை ஊக்குவித்தல்.
    • இளம் பருவப் பெண்கள் தங்கள் உணவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை மற்றும் ஆதரவு.
    • சமூக மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்களை நடாத்துதல்.
    இந்த பயிற்சித் திட்டத்தின் குறிக்கோள்கள்:;
    • மாதவிடாய் சுகாதார நிர்வாகத்தின் முக்கயத்துவத்தை புரிந்துக் கொள்தல்.
    • Tபாடசாலைகளிலும், சமூக மட்டங்களிலும் மாதவிடாய் சுகாதார முகாமைத்துவததிற்கான திறன்களை வளர்ப்பது.
  36. உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக குறிப்பாக விளையாட்டு வீரர்களின் ஆரோக்கிய அளவுருக்களை இலவசமாக வாசிக்க வழங்கப்படுவதன் மூலம் நாடு முழுவதும் செயலில் உள்ள சுகாதார ஆய்வகங்களை நிறுவுதல்.
  37. புதிய மற்றும் பிள்ளைப் பேற்றை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கு அத்தியவசியமான தகவல்களுடன் தடுப்பூசிகளை செலுத்துவது, வைத்தியரை எப்போது பார்ப்பது மற்றும் வைத்தியர்களுடன் சந்திப்புக்களை பதிவு செய்வது என்பவை தொடர்பில் பதிவு செய்வதற்குமான ஒரு வலைத்தளத்தையும் பயன்பாட்டையும் தொடங்குதல்.
  38. சுகாதார மேம்பாட்டிற்கான இலவச காற்று மற்றும் சுகாதார ஊக்குவிப்பிற்கான இடம் என பவற்றை ஒதுக்குதல், குறிப்பாக சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நோய் ஆபத்துக் காரணிகள் தொடர்பில் வெளிப்படுத்துதல்.

இலக்குகள்

  • 2025 ஆம் ஆண்டுக்குள் 200,000 புதிய வேலைகளை உருவாக்குதல்.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை உள்நாட்டு முதலீடுகளை உறுதி செய்தல்.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை உறுதி செய்தல்.
  • Ease of Doing Business Index இல் இலங்கையின் தரத்தை 2022 இற்குள் 100 இலிருந்து 50 ஆக உயர்த்துதல்.
  • உலகலாவிய போட்டித் திறன் குறியீட்டில் இலங்கையின் தரத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் 85 முதல் 45 வரை மேம்படுத்துதல்.

  • செயற் திட்டம்

    1. முதலீட்டு விண்ணப்பத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கையை 14 முதல் 3 ஆக குறைப்பதன் மூலம் முதலீட்டு ஒப்புதல் செயல்முறையை நெறிப்படுத்தவும், 24 மணிநேரத்திற்குள் பூர்வாங்க ஒப்புதலை வழங்கவும் ஏற்பாடு செய்தல்.

      சிவப்பு நாடாவைக் கடக்க முதலீட்டு ஒப்புதல் செயல் முறையின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை எளிதாக்குங்கள்.

    2. BOI உடனான ஒப்பந்தத்தில் 25 ஆண்டு உத்தரவாத வரிச் சலுகைகளுடன் இலங்கையில் முதலீடு செய்வதன் போட்டி நன்மையை வெளிப்படுத்துதல்.

      புpன்வரும் துறைகளுக்கு 25 வருடங்களுக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT;

      • கல்வி
      • தகவல் சேவை செயற்காடுகள்.

        (ஏதேனும் வகையான BPO, KPO தொகுப்பிற்கான உட்கட்டமைப்பு கூறு, தரவு செயலாக்க சேவைகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள், வலைத்தளங்கள், செய்தி பிரதிநிதிகள் மற்றும் செய்தி முகவர்களின் நடவடிக்கைகள், ஊடகத்திற்கான படம் மற்றும் அங்கங்கள், கணினி அடிப்படையிலான தொலைப்பேசி தகவல் சேவைகள், ஒப்பந்த அல்லது கட்டண அடிப்படையிலான தகவல் தேடுகை சேவைகள் மற்றும் செய்தி துண்டாடல் சேவைகள், பத்திரிக்கை துண்டாடல் சேவைகள் மற்றும் ஏனைய எண்முறை சேவைகள்)

      • மனித சுகாதார செயற்பாடுகள்.
      • வான் போக்குவரத்து
      • மோட்டார் வாகனங்கள், டிரைலர்ஸ் மற்றும் செமி டிரைலர்ஸ் உற்பத்தி.
      • கழிவுகளை சேமித்தல், முறைமைப்படுத்தல் மற்றும் அகற்றல் செயற்பாடுகள்; பொருட்கள் மீட்பு.
      • தண்ணீர் சேமிப்பு, முறைமைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல்.
      • கழிவு நீர்.
      • ஏனைய போக்குவரத்து சாதனங்களின் உற்பத்தி
      • மீன் பிடி மற்றும் மீன் வளர்ப்பு.
      • மாற்று செயற்பாடுகள் மற்றும் கழிவு முகாமைத்துவ சேவைகள்.

      மாதாந்த வருமானம் ரூ.500,000 இலிருந்து ஆரம்பிப்பவர்களுக்கு Pயுலுநு வரி 12% அறவிடப்படும்.

    3. உள்நாட்டு மற்றும் செளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீட்டு செயன் முறையில் வேகத்தை அதிகரிப்பதற்காக தொழில்நுட்ப பூங்கா மற்றும் தொழில்துறை பூங்கா என்பவற்றை 25 மாவட்டங்களிலும் விருத்தி செய்தல்.
    4. இலங்கைக்கு ஒரு தேசிய பெயரிடல் உத்தியை அறிமுகப்படுத்துதல்.
    5. முழுமையான தயாரிப்பு மற்றும் முதலீட்டு சலுகைகள் மூலம் வணிக நட்பு சூழலை உருவாக்கி காட்சிப்படுத்துதல்.
    6. மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பை மாதந்தோறும் கண்காணித்தல். வேலைகள் இல்லாத இடத்தில் அமைச்சரவை எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
    7. ஆம் குறிப்புக்களில் சொல்லப்படாத புதிய முயற்சியாளர்களுக்கான தற்போதைய கூட்டிணைக்கப்பட்ட வரி விகிதத்தினை 12% ஆக குறைத்தல் மற்றும் அனைத்து துறைகளுக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்ட விகிதத்தை உத்தரவாதப்படுததுதல் (மேல் மாகாணத்தில் ) , எட்டு மாகாணங்களுக்கும் 80% சலுகை வழங்கப்படுதல், இதன் மூலம் 2.4% ஆன பயனுள்ள விகிதத்தை வசூலிக்க முடியும் (இது மாவட்ட ரீதியாக கிராமப் புறங்களில் மேலதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க உதவும்)
    8. ஒரு நெகிழ்வான மற்றும் உலகளவில் வேலை செய்யக் கூடிய பணியாளர்களை வளர்ப்பது:
      • ஓராண்டிற்கு உலகளவில் கோரப்பட்ட முதல் 50 வேலைகளை அடையாளம் காணுதல்.
      • தொழில்பயிற்சி நிறுவனங்களின் உற்பத்தி திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துதல், சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் உள்ள தொழில் பயிற்சி நிறுவனங்களில் சிறந்த நடைமுறைகளை மதிப்பீடு செய்தல்.
      • உலகலாவிய தொழிலாளர் தேவைகளுக்கு ஏற்ப தொழில் வளரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களை நிறுவுதல்.

இலக்குகள்

  • Ease of Doing Business Index இல் இலங்கையின் தரத்தை 2022 இற்குள் 100 இலிருந்து 50 ஆக உயர்த்துதல்.
  • உலகலாவிய போட்டித் திறன் குறியீட்டில் இலங்கையின் தரத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் 85 முதல் 45 வரை மேம்படுத்துதல்.
  • அமைதியான பிராந்திய சூழலை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் இறையாண்மையை மேம்படுத்துதல்.
  • இலங்கையர்களுடன் வெளிநாட்டு தேசத்தில் வலுவான தொடர்பை ஏற்படுத்துதல்.

  • குடியரசு அல்லாத நாடுகளில் 38 தூதரகங்கள்.
  • குடியரசு நாடுகளில் 13 உயர்ஸ்தானிகர் ஆணைக்குழுக்கள்.
  • 13 துணைத் தூதரகங்கள்.
  • ஐக்கிய நாடுகள் சபைக்கு 2 நிரந்தர பணிகள்

செயற் திட்டம்

  1. இலங்கையின் தூதரகங்கள் மற்றும் உயர் இஸ்தானிகர் ஆணைக்குழுக்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்தல்:;
    • இராஜதந்திர முக்கியத்துவம், தாக்கம் மற்றும் புவிசார் அரசியல் ஆதரவு.
    • இருதரப்பு வர்த்தகம், பொருளாதார மற்றும் சமூக நன்மைகள்.
    • வெளிநாட்டினருக்கான தூதரக சேவைகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, பயணங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் ஒவ்வொரு தூதுக் குழுவின் பராமரிப்பு செலவு.
    • தற்போது காணப்படும் தூதுக் குழுவின் சேவைகளை அதிகரித்து மேம்படுத்துதல்.
    • புதிய தூதுக் குழுக்களை நிறுவுதல் மற்றும்; பயனற்ற தூதுக் குழுக்களை இல்லாது செய்தல்.
  2. ஆர்வமுள்ள தூதுவர்களுக்கு கட்டாய தூதர் நிர்வாக பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்துதல் (AETP)
    • AETP இனை பின்பற்ற அரசியல் நியமனம் சார்ந்த அதிகாரிகளை நியமித்தல்.
    • நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்ட கற்கைகள்:
      • இராஜதந்திர நெறிமுறைகள் மற்றும் உத்திள்.
      • ஐக்கிய நாடுகள் முறைமை.
      • உணர்வுசார் நுண்ணறிவு.
      • எதிர்கால தொலைநோக்கு.
      • பொதுப் பேச்சு மற்றும் ஊடகம் கையாளும் விவகாரங்கள்.
      • தூதரக மற்றும் மனிதாபிமான இராஜதந்திரம்
      • தலைமைத்துவம்.
    • சர்வதேச உறவுகள் பற்றிய டிப்ளோமா கற்கையை BCIS இல் ஒரு வருட கற்கை நெறியாக்கவும் அதனை அனைத்து இராஜதந்திரிகளுக்கும் கட்டாயமானதாக்குவதையும் உறுதி செய்தல்.
    • தூதர்களுக்கான முக்கிய செயற்திறன் குறிகாட்டிகளை (KPIs)அறிமுகப்படுத்துதல். முக்கிய முPஐள உள்ளடக்குபவை
      • இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மதிப்பு
      • இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை.
      • இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை.
      • இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை.
      • இலங்கையின் தேசிய பெயரின் விழிப்புணர்வை அதிகரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட ஊடக மதிப்பு.li>
    • கட்டாய மொழி கற்கைகளை இராஜதந்திரிகள் பின்பற்றுவதை உறுதி செய்தல். பின்வரும் மொழிகளில் பரீட்சயமாகுதல் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
      • சீன மொழி
      • ஹிந்தி
      • இஸ்பானிய மொழி.
      • அரபு மொழி
      • பிரஞ்சு மொழி
      • ரஷ்ய மொழி
  3. “Get to Know Sri Lanka Programme” இற்கு ஏற்பாடு செய்தல்.
    • இலங்கை வம்சாவழியை சேர்ந்த (18 முதல் 30 வயதிற்குட்பட்ட) டயஸ்போரிக் இளைஞர்களுக்கான நிகழ்ச்சித் திட்டதின் மூலம் அவர்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதோடு அலங்கை வரலாறு மற்றும் மரபுகளின் பலவேறு அம்சங்களைப் பற்றிய விழிப்ணர்வை அளித்தல்.
    • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஒழுங்குப்படுத்துவதற்காக, ஒரு ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல், இதன் மூலம் தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள், முதலாளிகள் மற்றும் திட்ட ஏற்றுமதியாளர்களைக் கண்டு கொள்ளலாம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் வழிகாட்டுதல்களையும் இந்த தளம் வழங்கும்.
  4. வெளிநாட்டில் படிக்கும் இலங்கை மாணவர்களுக்கான ““Youth Ambassador Programme” இணைத் தொடங்குதல்.
    • இலங்கையின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக.
    • குறிப்பாக பதட்டமான சூழலில் துல்லியமான செய்திகளை வழங்குவதற்கு.
    • வெவ்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞசர்களிடையே உறவை வளர்ப்பதற்கு.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒளிநாடா மற்றும் பயிற்சிப் பட்டறைகளை பயன்படுத்தி பயிற்சி தொடர்புடைய தூதரகங்கள் ஊடாக பயிற்சியளித்தல்.

  5. முடிவெடுப்பவர்கள், சிந்திக்கக் கூடியவர்கள், ஊடகம் மற்றும் சிவில் அமைப்பு நிறுவனங்களுடன் நிகழ்ச்சித் திட்டங்களை தொடங்குதல்.
    • இராஜதந்திர தலைமை அடைகாப்புகளை ஒழுங்கமைத்தல்.
    • கொள்கை சோதனை ஆய்வகங்களை ஒழுங்கமைத்தல்.
    • உருவகப்படுத்தல் வகுப்புகளை நடாத்துதல்
  6. பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அருகிலுள்ள எல்லை நாடுகளுடன் பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை துரிதப்படுத்த நாட்டு எல்லை கொள்கையை அறிமுகப்படுத்துதல்.
  7. ASEAN உச்சி மாநாடு போன்ற வெளிநாட்டு பொருளாதார மன்றங்கள் மூலம் வெளிநாடுகளுடன் தொடர்புகனை வலுப்படுத்துதல் மற்றும் பல.
  8. வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் பொருட்டு
    • பொருளாதாரம், பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புக்கள் மற்றும் எளிதான வணிகக் குறியீட்டு தரவரிசையை 100 முதல் 50 ஆக மேம்படுத்துவதற்கான முயற்கிகள் மற்றும் குறியீPட்டில் 2022 ஆம் ஆண்டாகும் போது 85 இலிருந்து 45 ஆக அதிகரித்தல் உலக போட்டி குறித்த தகவல் உள்ளடக்கிய காலாண்டு சஞ்சிகையை அறிமுகம் செய்தல்.
    • பொருளாதாரம், வரி, ஊக்கத் தொகை, மற்றும் ஒழுங்குமுறைகள், தகவல்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சக்தி, எரிசக்தி பற்றிய விபரங்களுடன் கூடிய ஆண்டுக் கையேட்டை வடிவமைத்தல்.
  9. வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி, புவிசார் அரசியல் பிரச்சினைகள் மற்றும் தேசிய திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவாற்காக வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் தொடர்பாக கொள்கைகளi உருவாக்குவதில் நிபுணர்களைக் கொண்ட ஒரு அலகினை அமைத்தல்.
  10. சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, ASEAN,Commonwealth போன்ற நாடுகளில் உள்ள முன்னணி சட்ட அமுலாக்க மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒரு தொடர்பை பேணுதல்.
  11. 120,000 அமெரிக்க டொலர் முதலீடுகளும், 2,400 அமெரிக்க டொலர் மாத வருமானமும் கொண்ட வெளிநாட்டவர்கள் பின்வரும் நன்மைகளை “இலங்கை எனது இரண்டாவது நாடு” என்ற ஊக்கமளித்தல் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தல்.
    • வாகனங்களுக்கு வரியில்லாத கொடுப்பனவு.
    • குடியிருப்பதற்கான சலுகைகளுடன் கூடிய வாய்ப்புக்கள்.
    • 21 வயதிற்கு குறைவான பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கான அணுகள் விருத்தி செய்யப்படல்.
    • சமூக ரீதியான வருகைக்கான அனுமதி.
  12. இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும்; மூலோபாய நலன்களை பின்வருவனவற்றின் மூலம் ஊக்குவித்தல்.
    • இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல்
    • கூட்டங்கள் அல்லது கலந்துரையடல்களில் எழுப்பப்படும் பலவேறு பிரச்சினைகள் குறித்த நிலை அறிக்கைகளைத் தயாரித்தல்.
    • சர்வதேச கூட்டங்களின் போது கூடுதலாக இரு தரப்பு வருகைகள் மற்றும் கூட்டங்களின் போது விவாதித்தல்.
    • துணை செயலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வருகைகளின் போது பிரச்சினைகளை எழுப்புதல்.
    • ஏல்லையை விஞ்சிய திட்டங்கிள்ன மூலம் மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்துதல்.
  13. ஐக்கிய நாடுகள் சபை முகவர் மற்றும் பிற பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் சர்வதேச சுயவிபரத்தை பலதரப்பு அமைப்பில் வளர்த்த்ல.

இலக்குகள்

  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வருமானத்தை 2025 இல் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல்.
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புக்களை 2025 ஆகும் போது 80,000 ஊழியர்கள் எண்ணிக்கையிலிருந்து 400,000 ஊழியர்களாக அதிகரித்தல்.
  • 2030 இல் வளர்ச்சியடைந்த இலங்கையை ஒரு அறிவுபூர்வமான (Smart)இலங்கையாக மாற்றுதல்.

செயற் திட்டம்

இலங்கை தற்போது வளர்ந்து வரும் சந்தையிலிருந்து வளர்ச்சியடைந்த சந்தைக்கு மாற்றப்படும் கட்டத்தில் உள்ளது மற்றும் அறிவுப்பூர்வமான தீர்வுகள் வளர்ச்சியை நோக்கிய முக்கியமான விடயமாக காணப்படுகிறன. இந்த வளர்ச்சியடைந்த சந்தை என்ற இலக்கை 2030 இற்குள் அடைய வேண்டும், மேலும் வளர்ந்த இலங்கையை மெலும் 3 ஆண்டுகளில் இஸ்மார்ட் இலங்கையாக மாற்ற வெளிவாரி வளங்கள் அவசியமாகும்.

கவனம் செலுத்தப்படும் அம்சங்கள்,

  • இஸ்மார்ட் பாதுகாப்பு
  • இஸ்மார்ட் கல்வி
  • இஸ்மார்ட் சுகாதாரம்
  • இஸ்மார்ட் விவசாயம்
  • இஸ்மார்ட் போக்குவரத்து
  • இஸ்மார்ட் சுற்றுலாத்துறை
  • இஸ்மார்ட் விளையாட்டுக்கள்
  • இஸ்மார்ட் பயன்பாடுகள்
  • இஸ்மார்ட் நிதி
  • இஸ்மார்ட் உட்கட்டமைப்பு

தூர நோக்கு

இலங்கையை உலகின் 10 மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக ஆக்குதல்

குறிக்கோள்

மக்களின் மகிழ்ச்சிக்காக இஸ்மார்ட் சேவைகளை விருத்தி செய்தல்.

தொழில்நுட்பத்தை ஆக்குதல்

AI (செயற்கையான உளவுத்துறை) – அனைத்து பொதுச் சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தளத்தை இயக்குதல்

  1. இஸ்மார்ட் பாதுகாப்பு
    • பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்படும் மக்களுக்கான புதிய எண்முறை பயோமெட்ரிக் அடையாளப்படுத்தல் முறைமையை அமுல்படுத்தல்.
    • முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் கூடிய CCTV கெமராக்களை அனைத்து பொது மற்றும் தனியார் இடங்களில் நிறுவுதல்.
    • உலக பாதுகாப்பு முகவர்களுடன் குற்றவாளிகளின் தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல். மேலும், நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவுவது தொடர்பில் கவனமாக செயற்படுவதற்காக முக அடையாளப்படுத்தலை விமான நிலையங்களில் பாவித்தல்.
    • பொலிஸாருக்கு உடனடியாக முகத்தை அடையாளம் காணும் வகையிலான மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல்.
    • சமூக ஊடக நடவடிக்கைகளை கண்காணிக்கவும், சாத்தியமான குற்றச் செயல்களை கண்காணிக்கவும் தரவு அறிவியலின் பகுப்பாய்வு மூலம் சாத்தியமான குற்றச் செயல்களை அனுமானித்தல்.
  2. இஸ்மார்ட் கல்வி
    • சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்றல் கற்பித்தலுக்காக அனைத்து பாடசாலைகளிலும் வீடியோ அடிப்படையிலான வகுப்பறைகள்.
    • அனைத்து புதிய வகுப்பறைகளையும் மாணவர்களுக்கு பரந்த அணுகலை வழங்கக் கூடிய இஸ்மார்ட் வகுப்புறைகளாக உருவாக்குதல்.
    • கிடைக்கக் கூடிய அனைத்து வேலை வாய்ப்புக்களுடனும் ஒரு ஒருங்கிணைந்த ஒன்லைன் தளத்தை உருவாக்குதல், அது மக்களின் திறன்கள், விருப்பத் தேர்வுகள் மற்றும் இருப்பிடங்களுடன் பொருந்த வேண்டும்.
  3. இஸ்மார்ட் சுகாதாரம்
    • ஓன்லைன் மூலமாகவும் தொலைப்பேசி அப் மூலமாகவும் கிடைக்கக் கூடிய “Digital Health Hub” (DHH) இனை அறிமுகப்படுத்துதல். எண்முறை அடையாள அட்டையின் உதவியுடன் DHH இணை அணுகலாம், DHH இன் சேவைகள் பின்வருமாறு,

      • கடந்த 10 ஆண்டுகளுக்கான நோயாளரின் சுகாதார வரலாற்றை அணுகலாம்.
      • அனைத்து வைத்தியசாலைகள், சிறிய வைத்திய நிலையங்கள், இஸ்கேன், வைத்தியர்களின் சந்திப்பிற்கான நேர மற்றும் இடங்களை காண்தல்.
      • திட்டமிடப்பட்ட சந்திப்புக்கள் குறித்த விழிப்பூட்டல்கள்.
    • நோயாளிகளுக்கு வைத்தியசாலையை அடைவதில் இருக்கும் சிக்கல், செலவு செய்வதற்கான தரம், காத்திருப்பு நேரம் மற்றும் கிடைக்கக் கூடிய இடம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணும் வகையில் தொலை நோயறிதல் சேவைகளை வழங்குதல்.
    • புற்று நோயின் கட்டத்தை கண்டறிந்து சுகாதார பதிவுகளின் பகுப்பாய்வின் படி சிகிச்சையினை பரிந்துரைத்தல்.
    • டெங்கு அப் இனை பயன்படுத்தி புவியியல் ரீதியாக நோயாளிகள் பரவலை விரைவாகச் சமாளிப்பதற்கு திசையையும் அதிகரிப்பு வீதத்தையும் கணித்தல்.
  4. இஸ்மார்ட் விவசாயம்
    • விவசாயியின் பயிர் விவரக் குறிப்பு மற்றும் கண்காணிப்பு.
    • 7 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு
    • காலநிலைப் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் காலநிலை இஸ்மார்ட் பாசன விவசாய நிகழ்ச்சி.
    • உரப்பயன்பாடு பற்றிய பரிந்துரை.
    • பயிர்நிலைக் கண்காணிப்பு
    • புவியியல் அடையாப்படுத்தல் மற்றும் பகுதிகளை அடையாளம் காணுதல்.
    • விவசாயிகளுக்கு பயிர்களின் குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் அளிக்க பகுதி ஆய்வுகள்.
    • அறுவடைக் கண்காணிப்புக்கள்
    • பூச்சிய அளவிலான நோய் மற்றும் ஆலோசனைகள் (சரியான நேரத்திலான பயிர் ஆலோசனை)
    • நாற்று நிலைத் தொடக்கம் விற்பனை வரையான முடிவுக்கு முடிவை கண்டறிதல்.
    • விவசாயிகளுக்கான பயிர் ஆலோசனை தொலைபேசி அப்லிகேஷன் பயன்பாடு.
    • அறுவடையின் அளவை புரிந்துக் கொள்வதற்கு செயற்கை கோள் படங்கள் மூலம் இலங்கையின் பயிர்களின் முழுமையான வரைப்படத்தை பெறுதல்.
    • விநியோகஸ்தர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையில் அல்காரிதம் அடிப்படையிலான பொருத்தப்பாட்டை செய்தல்.
    • நாடு முழுவதும் பயிர் விளைச்சலைக் கணிப்பதன் மூலமும் உகந்த தீர்வுகளை வழங்குவதன் மூலமும் விவசாய விரயத்தைக் குறைத்தல்.
  5. இஸ்மார்ட் போக்குவரத்து
    • பொதுப் போக்குவரத்துக்கு ஒரு தொலைப்பேசி அப் இணைப் பயன்படுத்துதல், இதன் மூலம் பொது மக்கள் பேரூந்துகள் மற்றும் புகையிராங்களின் சரியான நிலை இடைங்களை அறியலாம்..
    • பயணிகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களுக்கு இஸ்மார்ட் நேர மற்றும் வரிசை முகாமைத்துவ முறையை அமுல்படுத்துதல்.
    • கிடைக்கக் கூடிய தரிப்பிடங்களில் குறித்த நிகழ் நேர தகவலுடன் ஒரு ஒன்லைன் தளத்தை வழங்கி ஒன்லைன் கட்டணம் செலுத்துபவருக்கு 10% தள்ளுபடியுடன் தரிப்பு கட்டணங்களை சேகரித்தல்.
    • அல்ட்ரா உயர் விலக்க கெமராக்கள் மற்றும் செயலற்ற நேரத்தைக் குறைக்கும் மற்றும் ஓடுபாதை திறனை அதிகரிக்கும் ஒருங்கிணைந்த தரவுத் தளம் என்பவற்றை பயன்படுத்தி விமான நிலையங்களில் தரையிறங்கும் திறனை அதிகரித்தல்.
    • வீதிக் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்துப் புகார்களை செய்வதற்கு ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல். வீதி ஒழுங்குகளை மீறியமைக்காக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்தியதற்காக அரசு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்கள் மீதும் புகார் பதிவு செய்தல்.
    • போக்குவரத்து வாகனங்களின் ஓட்டங்களுக்கு ஏற்ப போக்குவரத்து விளக்குகளை தானியக்கமாக்குவதற்கு இஸ்மார்ட் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துதல்.
    • நேருக்கு நேர் விபத்துக்களின் மிக உயர்ந்த பதிவைக் கொண்ட புவியியல் சார் இடங்களுக்கு ஆலோசனை அறிகுறிகள் மற்றும் அறிவிப்புக்களுடன் கூடிய பொறியியல் தீர்வுகளை வழங்குதல்.
    • கையடக்க முறைமைகள் மூலம் தளத்திலேயே தண்டம் செலுத்துவதற்கான நடைமுறைகள்.
    • வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க விவேகமான போக்குவரத்து ஒளி மற்றும் வீதிக் கமராக்களை அறிமுகப்படுத்துதல்.
    • அனைத்து இலத்திரனியல் போக்குவரத்து அப்லிகேஷன்களையும் ஒரே ஒரு கையடக்கத் தொலைப்பேசி அப் இல் அடக்குதல்.
    • பொது போக்குவரத்து கட்டண வசூலிப்பிற்காக இலத்திரனியல் முறைமையை அறிமுகப்படுத்துதல், இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான நாள் அல்லது வாரங்களுக்குரிய விசேட அனுமதியை வழங்குதல்.
    • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஒளிநாடாக்களை உருவாக்கி பதிவேற்றுதல்.
  6. இஸ்மார்ட் சுற்றுலாத் துறை
    • சுற்றுலாப் பயணிகளுக்கான தொடர்புடைய சேவைகளை நிர்வகி;க்க நாடு முழுவதும் அன்றாடம் விடுதி குடியிருப்புக்கள் மற்றும் எதிர்கால முன்பதிவுகளின் தெரிவு நிலைகள் குறித்து ஒரு பகுப்பாய்வு தளத்தை உருவாக்குதல்.
    • அனைத்து சொத்துக்களையும் (தளங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள் போன்றன) எண்முறையாக்குதல் மற்றும் இவைப் பற்றிய முக்கியமான தகவல்களை சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரே தளத்தின் கீழ் வழங்குதல்.
    • சுற்றுலாத் தளங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு சுற்றுலாவுக்கு மேட்பட்ட யதார்த்தத்தை உருவாக்குதல்.
    • சுற்றுலாப் பயணிகளின் திகதிகள், விருப்பத் தேர்வுகள், அவர்கள் பார்வையிட விரும்பும் இடங்கள் மற்றும் சேவை வழங்குனர்களுடன் இணைவது ஆகியவற்றின் அடிப்படையில் பயணத்திட்டத்தை உருவாக்க ஒரு தளத்தை விருத்தி செய்தல்.
  7. இஸ்மார்ட் விளையாட்டுக்கள
    • அனைத்து விளையாட்டுப் பதிவுகளையும் எண்முறையாக்கி ஒரு தளத்தை அமைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களை பாடசாலை மட்டத்திலிருந்தே கவனித்தல்.
    • தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாட்டைக் குறிக்கவும், வீரர்களின் வெற்றிகரமான சேர்க்கைகளை தெரிவு செய்யவும் AI இனை பயன்படுத்துதல்.
    • அதிக செயற் திறன் கொண்ட வீரர்களிடையே இஸ்மார்ட் அணிகலங்களை பாவித்தல் மற்றும் பயிற்சி வகுப்புகளின் போது அவர்களின் முக்கிய புள்ளி விபரங்களை கணித்து எதிர்கால செயற்திறன் தொடர்பில் அனுமானித்தல்.
    • போட்டிகளுக்கான வருகை விகிதத்தை அனுமானிக்க AI இனை பயன்படுத்தல் மற்றும் விளையாட்டில் பண வருமானத்தினை ஈட்டிக் கொள்வதற்கு அனுமதி சீட்டு விலையை மேம்படுத்தல்.
    • பயிற்றுவிப்பாளர்களுக்கு வீடியோ அடிப்படையிலான பயிற்சி மற்றும் கற்கைகளை வழங்குதல்.
  8. இஸ்மார்ட் பயன்பாடுகள
    • குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயன்பாட்டுச் சேவைகளின் பதிவுகளையும் எண்மயமாக்கி, அவற்றை ஒரு தளத்தின் கீழ் தேசிய அடையாள அட்டையுடன் இணைத்தல். இதில் பின்வருவன அடங்கும்:
      • E-அடையாளப்படுத்தல்
      • பாதுகாப்பு
      • E-நு ஆட்சி
      • இணைந்து செயலாற்றும் சேவைகள் (E - காணிப் பதிவு போன்றன)
      • நடமாடும் சேவைகள் (சாதுர்யமான போக்குவரத்து முறைமைகள், நடமாடும் தரிப்பிடம், எல்லை வரிசை முகாமைத்துவம் போன்றன)
      • சுகாதாரம்
      • E- கல்வி
      • வியாபாரம் மற்றும் நிதி (E – வரி, E-வியாபார பதிவு போன்றன)
    • IoT சென்ஸார்களைப் பயன்படுத்தி பயன்பாடுகள் உற்பத்தியில் ஈடுபடும் இயந்திரங்களின் முறிவை முன்னறிவிப்பதன் மூலம் தடுத்து பராமரித்தல்.
    • வலைத்தளத்தின் மூலம் அனைத்து பயன்பாடுகளுக்கும் அல்லது வழங்கப்பட்ட சேவைகளுக்கும் ஒன்லைன் கட்டணங்களை அனுமதித்தல். இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் எண்முறை பண செலுத்துகையை ஒருங்கிணைப்பதன் மூலம் செயற்படுத்தப்படலாம்.
  9. இஸ்மார்ட் நிதி
    • AI ஐப் பயன்படுத்தி வரி செலுத்துதல்கள் மற்றும் பரிவர்தணைகளை கண்காணித்தல் மற்றும் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் எச்சரிக்கைகளை தானியங்குப்படுத்துதல்.
    • அனைத்து அரசு வங்கி செயல்முறைகளையும் காகிதமில்லா வங்கி முறைமையாக்கல், ஒன்லைனில் FD க்கள் திறத்தல் போன்றன.
    • கட்டண நுழைவாயில்களுக்கான தடைகளை நீக்குதல், கொடுப்பனவுகளுக்கான பரிவர்தணை செலவுகளைக் குறைத்தல் மற்றும் கையடக்கத் தொலைப்பேசி பணப் பைகளை பிரபலப்படுத்துதல்.
    • அனைத்து பொது சேவைகள் , வருமான வரி நிரப்புகை போன்ற அம்சங்களுக்கு ஒன்லைன் பண செலுத்துகை முறையை இயலச் செய்தல்.
  10. இஸ்மார்ட் உட்கட்டமைப்பு
    • உள்நாட்டு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் கிராமப் புறங்களில் அதிவேக இணைய இணைப்பைக் கொண்டு வருவதற்கான பைபர் ஆப்டிக் கேபிளினை நிறுவுவதற்கான திட்டத்தை ஆரம்பித்தல்.
      இது தொலை-வைத்தியம், தொலை-கல்வி, E-சுகாதாரம், E -பொழுதுபோக்கு போன்ற அரசு சேவைகளை செயற்படுத்த உதவும்
    • சொத்து உரிமைகளை அறிவதற்கு அனைத்து சொத்து பதிவுகளையும் ஒவ்வொரு பரிவர்தணையையும் எண்மயமாக்கல் Blockchain பயன்படுத்தல்
    • வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் FDIக்கள் என்பன தகவல் தொடர்பாடல் ஆரம்பிப்புக்கள் மற்றும் வெளிவாரி வளங்களில் கவனம் செலுத்தி சிறந்த நிறுவனங்களை ஈர்க்க சிறந்த வர்த்தக கட்டமைப்பில் சுதந்திர வர்த்தக வலயங்களில் இஸ்மார்ட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைத்தல்.
    • கழிவு நீர் மற்றும் வடிகால் முகாமைத்துவ முறைமையை அறிமுகப்படுத்துதல்.
    • தனியார் துறைக்கான இலக்குகள்.
      • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வருமானத்தை 2025 இல் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 4 மடங்கு அதிகரித்தல்.
      • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புக்களை 2025 ஆகும் போது 80,000 ஊழியர்கள் எண்ணிக்கையிலிருந்து 400,000 ஊழியர்களாக 5 மடங்காக அதிகரித்தல்.
      • மேலதிக 320,000 ஊழியர்களை தங்க வைப்பதற்காக 30.2 மில்லியன் சதுர அடியில் அலுவலக கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைத்தல்.
      • டீழுஐ ஊடான அலுவலக கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு அடுத்த 25 வருடங்களுக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரியினை உத்தரவாதப்படுத்துதல்.
      • 2030 இற்கான இலக்கு 800,000 ஊழியர்களுடன் 10 அமெரிக்க டொலர்களாகும்.

    படிமுறைகளை இயலச் செய்தல்.

    • இணைய பாவிப்பு (Internet data) தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குதல்.
    • மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பெற்றோர் கட்டுப்பாடுகளுடன் குழந்தைக்கு பாவிக்க கூடிய இணையத் திரையை அறிமுகப்படுத்துதல். இது போன்ற சேவைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்,
      • கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்
      • மொழித் திறன்களை மேம்படுத்தல்.
      • சிக்கல் தீர்க்கும் தன்மையை மேம்படுத்துதல்.
      • உயர்தரமான உள்ளடக்கத்தை அணுகுதல்.
    • கணிதம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை ஆரம்ப கல்வி நிலையில் இருந்தே ஆரம்பித்தல்.
    • அனைத்து பாடசாலை பாடங்களுக்குமான ஒளிநாடாக்களுடன் இணைய கட்டணம் இல்லாத ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல்.
    • IT மற்றும் AI கற்கைகளை தரம் 9 இல் அறிமுகப்படுத்துதல்.
    • தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் IT மற்றும் AI கற்கைகளை டிப்ளோமா மற்றும் சான்றிதழ் தரத்திலான கற்கைகளாக வழங்குதல் (எதிர்காலத்தில் 40மூ ஆன மாணவர்கள் தொழில்பயிற்சி நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.)
    • அனைத்து பல்கலைக்கழங்களிலும் IT மற்றும் AI இற்கான இளமானி, முதுமானி கலாநிதி பட்டங்களை வழங்குதல் (எதிர்காலத்தில் 50% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களாக இருப்பார்கள்)
      • உலகளவில் முன்னணி தரத்தில் காணப்படும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் உயர் தர கேள்வியுடன் கூடிய கற்கைகளை விருத்தி செய்தல்.
      • ORCAD, ../SIlab, MATLAB, AUTOCAD, போன்ற திறந்த உருவகப்படுத்தல் தொகுப்புக்களை ஏற்று வரிசைப்படுத்தல்.
    • Ease of Doing Business index தரப்படுத்தலில் இலங்கையை 100 இலிருந்து 50 ஆம் நிலைக்கு கொண்டு வருதல்.
    • அடுத்த 25 வருடங்களுக்கு தகவல் சேவை நடவடிக்கைகள் மற்றும் உட்கட்டமைப்புக்களுக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி, 0% VAT மற்றும் 0% பங்குலாப வரி என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்.

      (ஏதேனும் வகையான BPO,KPO,தொகுப்பிற்கான உட்கட்டமைப்பு கூறு, தரவு செயலாக்க சேவைகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள், வலைத்தளங்கள், செய்தி பிரதிநிதிகள் மற்றும் செய்தி முகவர்களின் நடவடிக்கைகள், ஊடகத்திற்கான படம் மற்றும் அங்கங்கள், கணினி அடிப்படையிலான தொலைப்பேசி தகவல் சேவைகள், ஒப்பந்த அல்லது கட்டண அடிப்படையிலான தகவல் தேடுகை சேவைகள் மற்றும் செய்தி துண்டாடல் சேவைகள், பத்திரிக்கை துண்டாடல் சேவைகள் மற்றும் ஏனைய எண்முறை சேவைகள்)

    • அடுத்த 10 வருடங்களுக்கு கணினி இறக்குமதி மற்றும் ஏனைய வன்பொருள் அங்கங்களுக்கு 0% சுங்க வரி, 0% PAL என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்.
    • IBM இ INTEL மற்றும் MICROSOFT போன்ற முன்னணி 100 பல்தேசிய தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை தங்களது உலக விநியோக மையங்களை இலங்கையில் நிறுவுமாறு அழைத்தல்.
    • அடுத்த 25 வருடங்களுக்கு இலங்கையில் குடியேறிய கம்பனிகளின் தலைமையகத்தை நிறுவுவதற்கு 0மூ கூட்டிணைக்கப்பட்ட வரி, 0% VAT மற்றும் 0% பங்குலாப வரி என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்.
    • உலகளாவிய ரீதியில் இலங்கை கம்பனிகளின் உலக விநியோக மையங்களை நிறுவுதல்.
    • கம்பனியின் ஆரம்பக் கட்டங்களில், அவற்றை ஆதரிக்க பல்வேறு ஆரம்ப கட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு மானிய விலையில் கிளவுட் உட்கட்டமைப்பை வழங்குதல்.
    • கிடைக்கக் கூடிய அனைத்து வேலைவாய்ப்புக்களுடனும், ஒரு ஒருங்கிணைந்த ஒன்லைன் தளத்தை உருவாக்குதல், இவை மக்களின் திறன்கள், விருப்பத்தேர்வுகள் மற்றும் இருப்பிடங்களுடன் பொருந்த வேண்டும்.

இலக்குகள்

  • இலங்கையின் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல்.
  • தற்போதுள்ள போக்குவரத்து வலையமைப்பை நெறிப்படுத்துதல்.
  • போக்குவரத்து மீறல்களை குறைந்தபட்சமாக ஆக்குதல்.
  • கொழும்புக்கு 7 முக்கிய தாழ்வாரங்களில் போக்குரத்து நெறிசலை தணித்தல்.

செயற் திட்டம்

ஸ்மார்ட் போக்குவரத்து

  1. பொதுப் போக்குவரத்துக்கு ஒரு தொலைபேசி அப் இணைப் பயன்படுத்துதல், இதன் மூலம் பொது மக்கள் பேரூந்துகள் மற்றும் புகையிரதங்களின் சரியான நிலை இடங்களை அறியலாம்.
  2. பயணிகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களுக்கு இஸ்மார்ட் நேர மற்றும் வரிசை முகாமைத்துவ முறையை அமுல்படுத்துதல்.
  3. கிடைக்கக் கூடிய தரிப்பிடங்களில் குறித்த நிகழ் நேர தகவலுடன் ஒரு ஒன்லைன் தளத்தை வழங்கி ஒன்லைன் கட்டணம் செலுத்துபவருக்கு 10% தள்ளுபடியுடன் தரிப்பு கட்டணங்களை சேகரித்தல்.
  4. அல்ட்ரா உயர் விலக்க கெமராக்கள் மற்றும் செயலற்ற நேரத்தைக் குறைக்கும் மற்றும் ஓடுபாதை திறனை அதிகரிக்கும் ஒருங்கிணைந்த தரவுத் தளம் என்பவற்றை பயன்படுத்தி விமான நிலையங்களில் தரையிறங்கும் திறனை அதிகரித்தல்.
  5. வீதிக் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்துப் புகார்களை செய்வதற்கு ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல். வீதி ஒழுங்குகளை மீறியமைக்காக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்தியதற்காக அரசு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்கள் மீதும் புகார் பதிவு செய்தல்.
  6. போக்குவரத்து வாகனங்களின் ஓட்டங்களுக்கு ஏற்ப போக்குவரத்து விளக்குகளை தானியக்கமாக்குவதற்கு இஸ்மார்ட் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துதல்.
  7. நேருக்கு நேர் விபத்துக்களின் மிக உயர்ந்த பதிவைக் கொண்ட புவியியல் சார் இடங்களுக்கு ஆலோசனை அறிகுறிகள் மற்றும் அறிவிப்புக்களுடன் கூடிய பொறியியல் தீர்வுகளை வழங்குதல்.
  8. கையடக்க முறைமைகள் மூலம் தளத்திலேயே தண்டம் செலுத்துவதற்கான நடைமுறைகள்.
  9. வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க விவேகமான போக்குவரத்து ஒளி மற்றும் வீதி கமராக்களை அறிமுகப்படுத்துதல்.
  10. அனைத்து இலத்திரனியல் போக்குவரத்து அப்லிகேஷன்களையும் ஒரே ஒரு கையடக்கத் தொலைப்பேசி அப் இல் அடக்குதல்
  11. பொது போக்குவரத்து கட்டண வசூலிப்பிற்காக இலத்திரனியல் முறைமையை அறிமுகப்படுத்துதல், இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான நாள் அல்லது வாரங்களுக்குரிய விசேட அனுமதியை வழங்குதல்.
  12. சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஒளிநாடாக்களை உருவாக்கி பதிவேற்றுதல்.

உட்கட்டமைப்பு

  1. மொரட்டுவ, கொட்டாவ, ராகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய புகையிரதங்களுடன் இணைப்புக்களைக் கொண்ட இலகுவான மற்றும் அதிவேக பேரூந்துக்களுடன் பல மாதிரி போக்குவரத்து முறையை செயற்படுத்தல்.
  2. பிலியந்தல, பத்தரமுல்ல மற்றும் கடவத்தயில் இலகுவான மற்றும் அதிவேக பேரூந்துக்களுடன் பல மாதிரி போக்குவரத்து முறையை செயற்படுத்தவும்.
  3. பல்-மாதிரி மையங்களில் இருந்து நகரத்திற்கு வரும் அனைத்து புதிய பேரூந்துகளும் ஊனமுற்றோர் அணுகலுடன் low-floor பேரூந்துகள் என்பதை உறுதிப்பத்தல்.
  4. கொழும்பின் முக்கிய 7 தாழ்வாரப் பகுதிகளில் (மொரட்டுவ, கொட்டாவ, ராகம, நீர்கொழும்பு,பிலியந்தல, பத்தரமுல்ல மற்றும் கடவத்த) மற்றும் பிற பகுதிகளில் போக்குவரத்து நெறிசல்களை தணிக்க சிறந்த பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் கொழும்பு அடிப்படையிலான அனைத்து வசதிகளுடனான கிளைகளும் கிடைப்பதை உறுதி செய்தல்.
  5. போக்குவரத்து நெறிசல் வெளிப்புறமாக இயக்கப்படும் என்பதால் உச்ச நேரங்களில் போக்குவரத்து நெறிசல்களைக் குறைக்க மத்திய கொழும்பில் 100,000 குடியிருப்புகள் கட்டுதல்.
  6. செலவுகள் மற்றும் பயண நேரத்தைக் குறைக்க அனைத்து சந்திப்புக்களிலும் வட்ட சுற்றுக்களில் போக்குவரத்து விளக்குகளை மாற்றுதல்.
  7. அனைத்து பாதசாரி குறுக்கு வெட்டுகளிலும் சரியான விளக்குகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல்.
  8. நெறிசலான குறுக்கு வெட்டுக்களில் மேம்பாலங்களை கட்டுதல்.
  9. ஒரு பிரதான பாதையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 1,400 கிராமங்களுக்கு சிறிய பஸ் சேவைகளை பயன்படுத்துதல்.
  10. இலத்திரனியல் வாகனங்களுக்காக 1,500 மின் ஏற்றி நிலையங்களை அமைத்தல்.
  11. ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்மொழியப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மீன் சந்தைகளில் வீதி உட்கட்டமைப்பை விருத்தி செய்தல்.
  12. பொருட்களின் விரைவான இயக்கத்திற்கு தேசிய தளவாட வலையமைப்பை உருவாக்குதல்.
  13. சன நெறிசலான புகையிரத நிலையங்களை சிற்றுண்டிச் சாலைகள், சுத்தமான பொது கழிவறைகள் மற்றும் சௌகரியமான இருக்கைகள் போன்ற வசதிகளுடன் நவீனமயமாக்குதல்.
  14. அனைத்து புகையிரதக் கடவைகளிலும் எச்சரிக்கை சமிக்ஞைகள் மற்றும் வாயில்களை பொருத்துதல்.
  15. பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 6 முதல் 15 ஆக உயர்த்தவும், அதிக தேவை உள்ள புகையிரத பயணிகளுக்கான இருக்கைகளை அதிகரித்தல்.
  16. ஆடம்பர சேவைகளுடன் நியமிக்கப்பட்ட சுற்றுலா புகையிரதங்களுக்கு பயிற்சியாளர்களை நிறுவுதல்.

இலக்குகள்

  • கொழும்பு துறைமுகத்தின் மொத்த திறனை 21.1 மில்லியன் வுநுரு களாக உயர்த்தவும்.
  • பயண இலக்கு மையங்களை உருவாக்குங்கள்.
  • துறைமுகங்களில் செயல்திறனை மேம்படுத்தவும்.

செயற்திட்டம்

  1. கொழும்பு துறைமுக அபிவிருத்தி

    துறைமுகம் தற்போது 7.5 மில்லியன் இருபது அடி சமமான அலகுகளை (TEUs)கொண்டுள்ளது.)

    • புதிய தென் துறைமுக ஓடத்துறையின் நீளம் 3.5 கிலோ மீட்டர், தற்போது 1.3 கிலோ மீட்டர் தூரத்தை கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள் (Colombo International Container Terminals) முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
    • 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள 3.5 கிலோ மீட்டர் பரப்பளவில் மூன்று முனையங்கள் கட்டப்பட உள்ளன.
      இதன் விளைவாக, 7 மில்லியன் TUE களில் கூடுதல் திறனை உருவாக்க முடியும்.
    • வடக்கு துறைமுகத்திற்கு முன்மொழியப்பட்ட நீர் உடைப்புக்கள் மற்றும் முனையங்கள் 3.3 கிலோ மீட்டர் நீளமாகும், அவை 6 வருடங்களுக்குள் கட்டப்படும். இதன் விளைவாக, 6.6 மில்லியன் கொள்திறன் கொண்ட TUE கள் உருவாக்கப்படும்.
    • இந்த முன்னேற்றங்களின் விளைவாக, கொழும்பு துறைமுகத்தின் மொத்த திறனை 21.1 மில்லியன் TUE களாக அதிகரிக்க முடியும்.
    தற்போதைய கொழும்பு துறைமுகத்தின் கொள்திறன் 7.5 மில்லின TEU கள்
    மீதமுள்ள தெற்கு துறைமுகத்தின் மேலதிக கொள்திறன் 7 மில்லின TEU கள்
    முன்மொழியப்பட்ட வடக்கு துறைமுகத்தின் கொள்த்திறன் 6.6 மில்லின TEU கள்
    கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்த்திறன் 21.1 மில்லின TEU கள்
  2. ஹம்பாந்தோட்ட துறைமுக அபிவிருத்தி
    ஹம்பாந்தோட்ட துறைமுக அபிவிருத்திக்கான புதிய முன்மொழிவுகள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  3. தனது தலைமைக் காரியாலயத்தை இலங்கையில் நிறுவும் சர்வதேச கம்பனிகளிடமிருந்து 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% பங்குலாப வரியை அறவிடுதல்.
  4. கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்ட மற்றும் திருகோணமலை ஆகிய .டங்களில் பயண இலக்கு மையங்களை உருவாக்குதல். பயண வழித்தடங்கள் கொழும்பு-காலி-ஹம்பாந்தோட்ட-திருகோணமலை-காங்கேஸன்துறை ஊடானதாகும்.
  5. போதுமான இடவசதிகள் கொண்ட நவீன கட்டிடங்களுடன் கூடிய நிறுத்துகை தளத்துடன் (கப்பல் நங்கூரமிடப்படும் ) பயணிகள் முனையத்தை உருவாக்குதல். இந்த வளர்ச்சிக்கு விருப்பமான இடம் பண்டாரநாயக்க ஓடுபாதையில் உள்ளது (ஒரு முறை கொள்கலன் சரக்கு நிலைய நடவடிக்கைகள் தெற்கு துறைமுகத்திற்கு மாற்றப்பட்டன)
  6. ஒருங்கிணைந்த கப்பல் மூலோபாயத்தை செயற்படுத்த மற்றும் கண்காணித்து மதிப்பாய்வு செய்ய ஒரு தேசிய கப்பல் சபையை நிறுவுதல், இது பின்வருவனவற்றை உள்ளக்கும்:
    • கப்பல் வணிகத்தில் இலங்கையின் கவர்ச்சியை மேம்படுத்தல்.
    • மூலதனம் மற்றும் நிதியுதவிக்கான அணுகலை உளிதாக்குதல்.
    • கண்டுபிடிப்புக்கள் மற்றும் துணை கடல்சார் சேவைகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல்
      (ஆதரவு நடவடிக்கைகள்: எரிபொருள் நிரப்புதல், அழிந்துப் போகக் கூடியவற்றை மீண்டும் வழங்குதல், உ.ம் உணவு, நீர் போன்றன)
  7. இலங்கை கப்பல் கட்டும் பொறியியல் திறன்களை பிற அரசு அமைப்புக்களுக்கும், கப்பல் இயக்குனர்கள் போன்ற சர்வதேச கொள்முதலாளர்களுக்கும் ஊக்குவித்தல்.
  8. இலங்கை மாலுமிகளின் வேலையை மேம்படுத்தல்:
    • பயிற்சிக்கான நிதி, மாலுமிகளின் திறனை மேம்படுத்தல்
    • கடற்படை வேலைவாய்ப்பு, பாதுகாப்பு நிலமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
  9. கடற்கரை பயிற்சி மற்றும் கல்வியை மேம்படுத்தல்.
  10. தற்போதைய துறைமுக-சாலை நெறிசலைக் குறைக்க பின்வரும் முறைகள் பின்பற்றப்படலாம்,
    • வழி செயல்முறையை மேம்படுத்துதல்: காத்திருக்கும் கணரக வாகனங்களுக்காக நெறிசலைக் குறைக்க தானியங்கி கதவு செயல்முறையை செயற்படுத்தல். மேலதிகமாக, வாகனங்களின் காத்திருப்பு நேரங்களை குறைக்கும் பொருட்டு இலகுவாக வாகனங்கள் உள்நுழைந்து வெளியேறக் கூடிய நெகிழ்வான வாயிலை உருவாக்குதல்.
    • துறைமுக அணுகலுக்கான பாதையை அகலப்படுத்துதல்: கொள்திறனை அதிகர்ப்பதற்கு பாதையை 4 முதல் 6 அடி வரை அகலப்படுத்த வேண்டும். அளுத்மாவத்த பாதை குறுக்குவெட்டுக்கு அடியில் உள்ள பகுதி 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்.
    • 6 பாதைகளின் சமிக்ஞை பயன்பாடு விருத்தி செய்யப்பட வேண்டும, உதாரணமாக இரண்டு சாலை வாயிலுக்கும் ஒரு பாதை உள் முனைய நெறிசலுக்காக.
    • வாகனங்களை சீரமைக்க கோட்டையின் அருகே முடிவடையும் வளைவில் நுழைவதற்கு போதுமான இடத்தை உறுதி செய்தல்.
    • இங்குருகடே சந்திக்கு அருகிலுள்ள வளைவுகளில் மேலதிக அனுமதி வழியாக குறுக்கு வழி போக்குவரத்தை நீக்குதல்.
  11. துறைமுகத்தில் செயற்திறனை மேம்படுத்த பின்வரும் செயல்முறைகளை எண்மயமாக்குதல்:
    • Jaya Container Terminal(JCT)துறைமுக சமூக முறைமைகளின் முனையங்களை கையாளுதல்.
    • வாயில் செயன்முறை.
    • சேமிப்பக முகாமைத்துவம்.
    • சேமிப்பக பொருள் தீர்வுகள்.
    • சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி.
    • செலவுகள் மற்றும் வருவாய் முகாமைத்துவ அமைப்புக்கள்.
  12. பொருட்களை அதிகரிக்க வரி செலுத்துகையை எண்மயமாக்குதல்.
  13. கொள்கலன்களை பரிசோதிக்க இஸ்கேன் வசதிகளை அறிமுகப்படுத்துதல், மனிதர்களை வைத்து பரிசோதிப்பதால் ஏற்படும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிலான ஆபத்தை குறைத்தல்.
  14. ஆழமான வரைவு தானியங்கள் மற்றும் சிமெந்து கொண்டு காவிகளை அனுமதிக்க Prince Vijaya Quay (PVQ)13 மீட்டர் வரைபுடன் கடற்படுக்கை ஆழத்தை அதிகரித்தல்.
  15. முனையங்களுக்கு அருகில் நேரடி புகையிரத சேவையை கையாள்வதற்கு, குறிப்பாக புதிதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு உலர் துறைமுகங்களுக்கு இடமளிப்பதற்காக, கொழும்பு துறைமுகத்தில் தெற்கு துறைமுகத்திற்கு நீட்டிப்புடன் ஒரு புகையிரத பாதை முன் பதிவை அறிமுகப்படுத்தல்.

இலக்குகள்

  • ஒவ்வொரு வீட்டிற்கும் 100% மின்சாரத்தை உறுதி செய்தல்..
  • தேசிய வலுசக்தி திறனை மேம்படுத்தல்.
  • எரி சக்தி நுகர்வோருக்கு சிறந்த கட்டணங்களை உறுதிப்படுத்த எரிசக்தி சந்தையின் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல்.

இலங்கை மின்சார சபை

தனியார் மின் நிலையங்களுடன் கூடிய மின் நிலையங்களின் (PPP) எண்ணிக்கை: 258.

நிறுவப்பட்ட கொள்த்திறன்.

PPP: 4,046 MW

உற்பத்தியின் உடன் நிகர்

PPP: 15,374 GWh

மின் சக்தி நிலையங்களின்
எண்ணிக்கை..
நிறுவப்பட்ட கொள்திறன
(MW)
உற்பத்தி
(GWh)
இலங்கை மின்சார சபை – மொத்தம். 25 2,903 11,803
நீர் 17 1,399 5,149
தெர்மல் (எண்ணை) 7 604 1,886
தெர்மல் (நிலக்கரி) 1 900 4,764
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (காற்று) 0 0 1.3
சிறிய தீவு 2.4
PPP: மொத்தம் 233 1,143 3,571
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (சிறிய நீர்) 195 394 1,232
தெர்மல் (எண்ணை) 3 533 1,740
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (காற்று) 15 128 325
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (சூரிய ஒளி, டென்ரோ, உயிரியல் 20 88 185
கூரை சூரிய 88
மொத்தம் 258 4,046 15,374

மூலம் : இலங்கை மின்சார சபை வருடாந்த அறிக்கை 2018

CEB இன் செலவுகளாவன தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் மின் கொள்முதல் மற்றும் இயக்க செலவுகளாகும்.

CEB இன் உற்பத்தி செலவு மாறுபாடுகளில் இருந்து விலகி, பசுமை வலுசக்தியின் பெறும் போது குறைந்தபட்ச விலைய பயன்படுத்த வேண்டும்.

செயற் திட்டம்

இலங்கை மின்சார சபை

  1. தற்போதுள்ள அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களின் மின் செலவைக் கணக்கிட ஊதிய கணக்கியல் முறையைப் பயன்படுத்தல்.
  2. புதிய மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்யும் போது மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்க மதிப்பி;டப்பட்ட அளவிலான வலுசக்தி செலவைப் பயன்படுத்தல்.
  3. புதிய மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்யும் போது மலிவு விலையில் சுத்தமான வலுசக்தியை பயன்படுத்தல்.

    உ.ம். CEB நஷ்டம் ரூ.30 பில்லியன் ஆகும்.
    (ரூ 2 ஓ 15 பில்லியன் ) மின்சாரம் ஒரு அலகு ரூ.2 ஆல் அதிகரிக்கப்படுமானால்.
  4. ஒவ்வொரு மாவட்டத்திலும் வலுசக்தியை உருவாக்க நகராட்சி திண்மக் கழிவுகளை பயன்படுத்தி மின் நிலையங்களை அமைத்தல்.

    பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் கூட்டாக இணைந்து மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல். மேற்கண்ட ஆலைகளுக்கு இயக்க கட்டணமானது அரசால் செலுத்தப்படும்.

  5. மின்குமிழ்களை இறக்குமதி செய்யும் போது VAT மற்றும் PAL வரிகளில் விலக்குகளை வழங்குதல். பாரம்பரிய மற்றும் மின்குமிழ்களுக்கு கூடுதலாக 30% CESS இனை அறிமுகப்படுத்துதல்
  6. குறைந்த பட்ச வலுசக்தி செயற்திறன் தரங்களை ஊக்குவித்தல்.

    விளக்கு வெளிச்சத்தின் திறனை ஊக்குவித்தல்.
    உ.ம்: LED மின் குமிழ்களை அதன் உற்பத்தி விலைக்கு வழங்குவது. வீடுகளுக்கான CEB வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 5.5 மில்லியனாகும். ஆண்டுக்கு குறைந்தது ஒரு வீட்டில் 40 வோல்டேஜ் விளக்கு மாற்றப்படும். ஆகவே 30 வோல்டேஜ் கொண்ட மின் குழிழை ஊக்குவிப்பது 10 வோல்டேஜ் இனை சேமிக்கும். வருடாந்த சேமிப்பு 100 GWh சேமிக்கப்படும்.
    இது ஒரு வருடத்திற்கு 1825 மணித்தியாலங்களாகும்.

  7. பெரிய வணிக கட்டடிடங்களுக்கு அரசாங்கத்தால் வலுசக்தி தணிக்கைகளை இலவசமாக மேற்கொள்ளுதல் மற்றும் முதல் ஆண்டு வலுசக்தி சேமிப்பில் 95% வாடிக்கையாளருக்கு திரும்ப செலுத்தப்படல்.
  8. 500 இற்கு மேல் நுகரும் மின் சக்தியினை நுகரும் வீடுகளில் இஸ்மார்ட் அளப்பான்களை பொறுத்துதல். இந்த திட்டத்தின் நன்மைகளில் பின்வருவன அடங்கும்:
    1. வலுசக்தி பயன்பாடு பற்றிய நிகழ்நேர தகவல்.
    2. மின்சார நுகர்வுக்கு சிறந்த முகாமைத்துவம்.
    3. மீட்டர் வாசிப்பு செலவுகள் தவிர்க்கப்படும்.
    4. மேம்பட்ட பட்டியலிடல் திறன்.
    5. மாதாந்த மின்சார கட்டணத்தில் குறைப்பு.
    6. குறுகிய செயழிலப்பு காலம்.
    7. மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பைக் கண்காணிக்கும் திறன் (AT& CL).
  9. அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் மின்சாரம், நீர் ஆகியவற்றிற்கான வலுசக்தியின் திறனை பயன்படுத்தும் பழக்கத்தை மேம்படுத்த குறுகிய விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கி பகிர்தல்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபணம்.

  1. தற்போதுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1967 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது (ஹைட்ரோகிராக்கர் இல்லாமல் 53 ஆண்டுகள் பழைமையான தொழில்நுட்பம்) மற்றும் அதன் கொள்திறன் ஒரு நாளைக்கு 40,000 பீப்பாக்கள் ஆகும்.

    தற்போதைய சுத்திகரி;ப்பு நிலையத்திற்கு கூடுதலாக, அதே வளாகத்தில், ஹைட்ரோகிராக்கர் மற்றும் ஒரு நாளைக்கு 100,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட ஒரு புதிய ஆலையை உருவாக்குதல், இது 51% உரிமையும் நிர்வாகமும் அரசாங்கத்திடம் காணப்பட வேண்டும்.

இலக்குகள்

  • 10 மில்லியன் பார்வையாளர்கள்.
  • சுற்றுலாத் துறையிலிருந்து 18 பில்லியன் வருமானம்.

செயற் திட்டம்

  1. பின்வருவனவற்றை கவனத்திற் கொண்டு இலங்கையை மையமாகக் கொண்ட ஒரு தேசிய மூலோபாயத்தை அறிமுகப்படுத்துதல்.

    • சுற்றுலாத்துறை
    • ஏற்றுமதிகள்
    • ஆட்சி
    • கலாச்சாரம்
    • மக்கள்
    • விமான நிலையம், குடியேற்றம் மற்றும் முதலீடு

  2. விமானநிலைய அபிவிருத்து மற்றும் விமானத் தொடர்பு.

    • அதிகரித்த அப்ரொன் இடவசதி மற்றும் 16 கூடுதல் விமானப் பாலங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவாக்குதல்.
    • அதிகரித்த பயணிகள் இயக்கத்தை சமாளிப்பதற்கு பண்டாரநாயக்கவில் முனைவு இடத்தை மேம்படுத்தல்.
      (சரி பார்க்கும் தளம், குடிவரவு தளம், லோஞ்ச் வசதிகள், மேம்படுத்தப்பட்ட சாப்பாட்டிடம் மற்றும் அனுபவங்கள், ஓய்வுகால செயற்பாடுகள் மற்றும் விமானறிலையத்தில் இருந்து விடுதிக்கான போக்குவரத்து போன்றன)
    • VVIP lounge மற்றும் அதன் நுழைவு வாயில்களை (BIA) இன் பட்ஜெட் விமான சேவை செயற்பாடுகளுக்கு மாற்றுதல்.
    • ரத்மலான, பலாலி மற்றும் மத்தள விமான நிலையங்களை சர்வதேச பஜ்ஜெட் விமான சேவைக்காக விருத்தி செய்தல்.
    • ரத்மலானை விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதையை 1773 மீட்டரில் இருந்து 2400 மீட்டராக கிழக்கு பக்கமாக நீடித்தல். இது D வகை விமானங்களை தரையிறக்க உதவும். அதாவது, 120 இருக்கை திறன் கொண்ட விமானங்கள் ஆகும். ரத்மலானை விமான நிலையத்தை ஒத்த ஓடுபாதை நீளம் கொண்ட சர்வதேச விமான நிலையற்கள் பின்வருமாறு.
      • லண்டன் நகர சர்வதேச விமான நிலையம் - ஐக்கிய இராச்சியம் - ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
      • அன்டவேர்ப் சர்வதேச விமான நிலையம் - பெல்ஜியம் - ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
      • பொகோஸ் டெல் டொரொ கொலொன் சர்வதேச விமான நிலையம் - பணாமா – ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
    • தற்போதைய ரத்மலானை விமான நிலைய முனையத்தை ஒரு வருடத்திற்குள் கட்டப்பட்ட ஒரு பெரிய இரும்பு கட்டிடமாக மாற்றுதல், இது பயணிகள் கையாளுதலுக்கு மேம்பட்ட தளவமைப்பை வழங்கும்.
    • ரத்மலானையில் ஒரு தனியார் ஜெட் செயற்பாட்டு வசதிகளை நிறுவுதல். சர்வதேச தனியார் விமானங்கள் முழு வரவேற்பு சேவைகளுடன் ரத்மலானையில் தரையிறங்கும்.
    • மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை மீளாரம்பித்தல்.
    • உள்நாட்டு விமான நடவடிக்கைகளுக்காக கொக்கல, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் விமான நிலையங்களை உருவாக்குதல் மற்றும் கண்டியின் திகனவில் உள்நாட்டு விமானங்களுக்கு புதிய விமான நிலையத்தை அமைத்தல்.
    • தாமரை கோபுரத்தின் ஒரு பகுதியை பொதியிற்கும் சேவைகளுடன் கூடிய ஒரு உப அதிவேக சர்வதேச சோதனை மையமாக மாற்றுதல்.
    • எரிபொருள் தரையிறக்கம், தரிப்பிடம்,விமான நிலைய வரி, விமான பாலம் மற்றும் பொருட்களை கையாளும் கட்டணங்களை மலேசியாவுடன் பொருத்துதல்.
    • பட்ஜெட் பாவிகளுக்கு தற்போதைய விமானம் சுற்றி திரும்பும் நேரத்தை 60 நிமிடங்கள் வரைக் குறைக்கவும், ஓடுபாதை இயக்கத்தை தற்பேதைய 11 முதல் 17 மணித்தியாளமாக அதிகரித்தல்.
    • BIA இல் KIOSKS சரிபார்ப்பு நேரத்தை 8 முதல் 20 ஆக அதிகரித்தல்.
    • முதல் தர மற்றும் வியாபார வகுப்பு பயணிகளுக்கு VIP க்களுக்கு விஷேடமான அதிவேக குடிவரவு சேவையினை வழங்குதல்,
    • அனைத்து விமானச் சேவைக் கட்டணங்களையும் அதி உச்ச நேரம் அதி உச்ச நேரமின்மை என பிரித்து அதி உச்ச நேரம் இல்லாத போது குறைந்த கட்டணத்தை வசூலித்தல்.
    • இலங்கையினுள் பயணிப்பதற்காக 50 இருக்கைகளைக் கொண்ட விமான சேவையை நடைமுறைப்படுத்தல்.
    • அனுமதிக்கும் வேகத்தை அதிகரிக்கவும் மற்றும் செயற்த்திறனை மேம்படுத்தவும் தானியங்கி குடிவரவு வாயில்களை அறிமுகப்படுத்துதல்.
    • இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவரும் முதல் 20 ஐரோப்பிய பிரதேசங்களுக்கு நேரடி விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
      • ஐக்கிய இராச்சியம்
      • ஜேர்மனி
      • பிரான்ஸ்
      • நெதர்லாந்து
      • இத்தாலி
      • சுவிஸர்லாந்து
      • இஸ்கண்டினேவியன்.
    • விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களையும் அவற்றின் அட்டவணைகளையும் அந்தந்த சர்வதேச இணைப்பு விமானங்களுடன் ஒத்திசைய செய்தல்.
    • முன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விசாவை அங்கீகரித்தல்.
    • புpன்வருவனவற்றை வழங்குவதன் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வாகன சேவையை நிறுவுதல்.
      • இரு வகை வாகன சேவைகளை பேணுதல்..
      • சுpறப்பு வாகன பதிவுத் தகடுகளுடன் 900 வாகன உரிமையாளர்களுக்கு வரி இல்லாத வாகன அனுமதி வழங்குதல்.
      • இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வாகன சேவைகளை ஒழுங்குப்படுத்துதல்.
  3. உட்கட்டமைப்பு செயற்பாடுகள்

    • தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்காக 80,000 தொடக்கம் 100,000 கொள்ளளவு கொண்ட பல் நோக்க அரங்கத்தை கட்டுதல்.
    • பிரதான நகரம் அல்லது மாவட்டத்தில் சுற்றுலா தகவல் மையத்தை நிறுவுதல்.
    • கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து பிரதான வீதிகளிலும் சுத்தமான கழிவறை வசதிகளுடன் கூடியஉணவு விடுதிகள் மற்றும் ஓய்வு மையங்களை நிறுவுதல்.
    • அனைத்து புகையிரத நிலையங்களிலும் சரியான இருக்கைகள், கழிவறைகள் மற்றும் சிற்றூண்டிச் சாலைகள் காணப்படுவதை உறுதிச் செய்தல்.
    • பெரியளவிலான ஈர்ப்பிற்காக சரியான கழிவறை வசதிகள், கழிவகற்றல், கார் மற்றும் பேரூந்து தரிப்பிடம் மற்றும் றுi-குi வலயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தல்
    • சூடான நிலைகளில் குளிர்மையைத் தருவதற்காக பாதையோரங்களில் மரங்களை வளர்த்தல்.
    • வெலிகம மற்றும் மிரிஸ்ஸ துறைமுகங்களில் மீன்பிடி படகு உரிமையாளர்களை ஊக்குவிக்கவும், திமிங்கலத்தைப் பார்க்கும் சுற்றுப் பயணங்களுக்காக பிரத்தியேகமாக குறைந்த சத்தத்துடன் வேகப் படகுகளை இயக்குதல் - அவர்களின் தற்போதைய மீன் பிடி நடவடிக்கைகளுக்கு கூடுதல் வணிக வாய்ப்பை வழங்குதல்.
    • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களை ஈர்க்கவும் தெரிவிக்கவும் கூகிள் மெப் வழியாக இருப்பிடம் மற்றும் திசைகள் உள்ளிட்ட தெரு உணவு விற்பனையாளர்கள் பற்றிய தகவலுடன் கையடக்க தொலைப்பேசிப் பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல்.
    • வாடகை இடங்கள் மற்றும் குடியிருப்புகளை பராமரிப்பதற்கும், யுசைடிnடி போன்ற ஒன்லைன் வாடகை தளங்கள் வழியாக சொத்துக்களை பட்டியலிட மக்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு நிலையான வழிகாட்டுதலை உருவாக்குதல்
    • சிகிரியா, அநுராதபுரம், பொலன்னறுவை சிறிபாத மற்றும் கண்டி போன்ற பாரம்பரிய தளங்களை பாதுகாத்து, பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்தல்.
      • நிலப்பரப்பை மீட்டெடுத்து பராமரித்தல், பொது கழிப்பறைகளை மேம்படுத்தல் மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குதல்.
      • சில்லறை வியாபாரத் தளங்கள் மற்றும் சிற்றூண்டிச் சாலைகளுடன் ஒன்றிணைந்த பார்வையாளர் தளங்களை விருத்தி செய்தல்.
    • பாரம்பரிய மற்றும் மத தளங்களை மீடடெடுத்து அபிவிருத்தி செய்தல்:
      • புனித நகரமாக கண்டி
      • சிகிரியா பண்டைய நகரம்
      • புனித நகரம் அநுராதபுரம்
      • காலியின் பழைய நகரம் மற்றும் அதன் கோட்டைகள்
      • யாழ்ப்பாணம் நல்லூர் கோவில்
      • எம்பக்க தேவாலயம்
        மற்றும் தேவையானவைகள்.
    • சுற்றுலாத் துறையின் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக வெள்ளத் தடுப்பு மற்றும் தணிக்கைகளைத் தொடங்குதல். இலங்கை கடற்படையின் பொறியியலாளர்கள், பருவகால அகழ்வாராய்ச்சி மற்றும் நிரப்புதல், நதி வாய் முகாமைத்துத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
    • சாத்தியமான பாரம்பரிய சுழற்சிப் பாதைகளை வரைபடமாக்கி, சுழற்சி தடங்களை அறிமுகப்படுத்துதல்.
    • கொழுப்பிற்கு அருகாமையில் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு பூங்காக்களை அமைத்தல்.
    • தனியார்த் துறையின் பங்களிப்புடன் மிருகக்காட்சி சாலைகளை விருத்தி செய்தல்.
      • 15 ஆண்டுகளாக நிதியுதவி செய்யும் தனியார் நிறுவனத்தின் கீழ் முத்திரை குத்தக் கூடிய புதிய விலங்கு கூடுகளை வழங்குதல்.
      • மொத்த வடிவமைப்பு மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தலை மேற்கொள்ளுதல்.
      • இலங்கை உயிரியல் பூங்காவாக மறு பெயரிடுதல்.
      • மிருகக்காட்சி சாலை வருகைக்காக கட்டப்பட்ட பிரபல விடுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக பேரூந்து சேவைகளை செயற்படுத்தல்.
      • பாடசாலைக் சிறுவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
      • பலவகையான சாப்பாட்டு மற்றும் நினைவுச்சின்ன கடைகளை அறிமுகப்படுத்துதல்.
    • வருவாயை அதிகரிப்பதற்கு 573,376 ஹெக்டேயர் வரை வனவிலங்கு பூங்காக்களை உருவாக்குதல்.
    • பதுள்ளையில் உள்ள டிக்காப்பிடிய மற்றும் வவுனியா மற்றும பிலியந்தலை பிரNhசங்களில் 3 புதிய உயிரியல் பூங்காக்களை உருவாக்குதல்.
    • அம்பாறையின் லகுகலையில் ஒன்றும் மின்னேரியாவில் ஒன்றும் என 2 யானைகள் சரணாலயத்தை கட்டுதல்.
    • நாடு முழுவதும் தாவரவியல், மூலிகை மற்றும் வாசனைத் திரவியங்கள் தோட்டங்களை உருவாக்குதுல்.
    • பயணிகளுக்கு வன இருப்புக்களை திறப்பதன் மூலம் வெப்பமண்டல மழைக்காடு அனுபவங்களை உருவாக்குதல்.
    • பின்வருவனவற்றின் மூலம் திருகோணமலை, மிரிஸ்ஸ மற்றும் கல்பிட்டியில் திமிங்கிலம் பார்வையிடுதலை விருத்தி செய்தல்.
      • நடைப்பாதைகள், தெரு விளக்குகள், குடிநீர், பொதுக் கழிப்பிடங்கள், காத்திருக்கும் இடங்கள் மற்றும் வாகன தரிப்பிடஙகள் ஆகியவற்றை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட மீன்வளத் துறை மேம்பாடு.
      • 200 பயணிகள் அமரக் கூடிய சிற்றூண்டிச் சாலை மற்றும் ஓய்வறைகளுடன் கூடிய படகுகளை மேம்படுத்துதல்.
      • பார்வையிடும் இடங்களுக்கு பயண நேரத்தை குறைக்க, 20 முடிச்சுகளில் இடத்தை அடையக் கூடிய வேகப் படகுகளை இயக்குதல், தற்போது அடைய எடுக்கும் நேரம் 5-7 மணித்தியாலமாகும், பரிந்துரைக்கப்பட்ட படகுகளை பயன்படுத்தி 1-2 மணித்தியாலங்களில் பயண இடத்தை அடையலாம்.
    • பவளப் பரப்புதல் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பவளப் பாறைகளை புதுப்பத்தல்.
    • மோட்டார் ஓட்டுதல், வான் நீச்சல், காற்று நீச்சல், காற்றாடி உலாவுகை மற்றும் நீருக்கடியிலான இஸ்கூட்டர் சுற்றுப் பயணங்கள் போன்ற கடற்கரை செயற்பாடுகளை மேம்படுத்தல்.
    • நாடு முழுவதும் கடல் ஆமை விடுதிகளை விருத்தி செய்தல்.
    • பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்ட உலாவல் பயிற்றுவிப்பாளர்களை அதிகரித்தல்.
    • அனுதியளிக்கப்பட்ட உயிர் காப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் எண்ணிக்கையை அதிகரித்தல்.
    • பொருத்தமான மென்மையான திறன்கள் மற்றும் மொழிப் பயிற்சி அளிப்பதன் மூலம் கடற்கரை சிறுவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்.
    • இலங்கையின் முக்கிய வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சுற்றுலா சான்றிதழ் பெற ஊக்கமளித்தல்.
    • கொழும்பிற்குள் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கான ஈர்ப்புக்களுடன் புதிய நகர பூங்காக்களை உருவாக்குதல்.
    • “டிஸ்னி லேன்ட்” போன்ற பொழுதுப்போக்கு பூங்காக்களில் முதலீடு செய்தல்.
    • கடலோரப் பகுதிகளில் கூடுதல் ஓய்வு நேர செயற்பாடுகளாக 100 கிளப்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் “ஹோம்ஸ்டே” சுற்றுலா கருத்தை பிரபலப்படுத்துதல்.
    • மலைப்பிரதேசம் மற்றும் தெற்குப் பகுதிகளுக்கான ஆடம்பர புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களை மேம்படுத்துதல்.
    • கண்ணியா, மடுநாகல மற்றும் மகா ஓயா போன்ற சூடான நீரூற்றுக்களை உரவாக்குதல்.
    • விடுதி அறைகள் மற்றும் உணவகங்களை மேம்படுத்த அரசாங்க ஆதரவு மற்றும் பயிற்சி பட்டறைகளை வழங்குதல்.
    • பாரம்பரிய கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமங்களை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்தல், தயாரிப்புக்களின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கைவினைஞர்களுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுத்தல்.
    • சுற்றுலா பற்றிய புகார்கள் மற்றுமு; சிக்கல்களை நிர்வகிப்பதில் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒன்லைன் பயிற்சி ஒளிநாடாக்களை வழங்குதல்.
    • மொழி, தகவல் தொடர்பு திறன் மற்றும் சரியான அவசர நிலைமை முகாமைத்தும் குறித்த பயிற்சி ஒளிநாடாக்களை அறிமுகப்படுத்துதல்.
  4. அனுபவங்கள்

    • நாட்காட்டி நிகழ்வுகளை அறிமுகம் செய்தல்.
    • கலை மற்றும் கைவினைப் பொருட்கள், வரலாறு மற்றும் பாரம்பரியம், கட்டிடக் கலை, கலாசாரம், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு, இயற்கை மற்றும் வனவிலங்குகள், சாகச சமையல் அனுபவங்கள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் 10 மாவட்டங்களை முக்கிய சுற்றுலாத் தளங்களாக உருவாக்குதல்.
    • பாரம்பரிய பண்டிகைகளின் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல்.
      • சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசகாக், எசல மற்றும் தீபாவளி போன்ற பாரம்பரிய விழாக்களை அடிப்படையாக கொண்ட பயணத்திட்டங்கள்.
      • யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை பயணத்தை பிரபல்யப்படுத்தல் (ஜூன் 8 முதல் ஜூலை 24 வரை 52 நாட்கள்.
      • கதிர்காம யாத்திரையை பிரபலப்படுத்தல்
      • அனுராதபுர நகர யாத்த்pரையை பிரபலப்படுத்தல்.
    • MICE சுற்றுலாத் துறை (கூட்டங்கள், சலுகைகள்;, மாநாடுகள், மற்றும் கண்காட்சிகள்)
      • 30,000 சதுர மீட்டர் பரப்பளவுக் கொண்ட ஜா-எல மற்றும் சிறி ஜயவர்தனபுற கோட்டையில் இரண்டு கண்காட்சி மையங்களையும், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடாத்த அனைத்து நவீன வசதிகளையும் செய்தல்.
      • 85,000 சதுர அடி இடத்தில் தாமரைக் கோபுரத்தில் உள்ள ஒரு மாநாட்டு மையமாக மாற்றுதல்.
      • கொழும்பில் உள்ள போர்ட் சிட்டியில் 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மாநாடு மையத்தை உருவாக்குதல். டிடந
      • நாட்டினுள் வர்த்தகப் பயணிகளை ஈர்ப்பதற்காக விளம்பர ஒளிநாடாக்களை உருவாக்குதல், இதில் “இலங்கைக்கு வருகைத் தர 10 காரணங்கள்” உட்பட கிடைக்கும் அனைத்து வசதிகளையும் காண்பிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
      • ஹம்பாந்தோட்டை மாநாடு மையம் மாநாடு மற்றும் கண்காட்சிகளுக்கான சந்தையாகும்
      • MICE பயணிகளுக்கான வர்த்தக விசாவை எளிதாக்குதல்.
        • விமான நிலையங்களில் குடிவரவு தளங்களில் MICE பற்கேற்பாளர்களுக்கு பிரத்தியேக பாதைகளை வைத்திருப்பதன் மூலம் விரைவான விசா செயலாக்க சேவைகளை வழங்குதல்.
        • அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து வரும் அனைத்து MICE பங்கேட்பாளர்களுக்கு விசா கட்டணங்ளைத் தள்ளுபடி செய்தல். இது Mice பயணிகளை தங்கள் நிகழ்விற்கான இடமாக இலங்கையை தெரிவு செய்ய ஊக்குவிக்கும்.
        • MICE பங்பேற்பாளர்களுக்கான விரைவான பாதை உரிம முறையை செயற்படுத்தவதன் மூலம் MICE நிகழ்வுகளுக்கான வர்த்தக உரிமங்களை எளிதாக்குதல்.
      • நிகழ்வினை திட்டமி;டுபவர்கள், ஒலி-ஒளி உபகரணங்கள் விநியோகிப்பவர்கள், சரக்கு அனுப்புபவர்கள், பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள், அச்சுப் பொறிகள், மொழிப்பெயர்ப்பாளர்கள் போன்ற அனுபவமிக்க வல்லுநர்கள் மூலம் MICEஅமைப்பாளர் உதவியை வழங்குதல்.

இலக்குகள்

  • ஒவ்வொரு ஆண்டும் ஒலிம்பிக்கில் 20 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்தல்.
  • ஒரு செயற்பாட்டு சூழலை உருவாக்கி,பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வினையூக்கியாகவும் உதவியாளராகவும் செயற்படுதல்.
  • இளைஞர்களி;ன் அபிலாசைகளுக்கும் தேவைகளுக்கும் பதிலளிக்க வேண்டும், சிறந்த எதிர்காலத்திற்காக அவர்களை ஊக்குவித்தல் மற்றும் குடிமக்கள் மத்தியில் விளையாட்டு கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்தல்.

செயற் திட்டம்

இளைஞர்

  1. இளைஞர் மையங்களில் பயிற்சி திட்டங்கள் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல்.
    1. நிரற்படுத்தக் கூடிய தரக் கட்டுப்பாடு
    2. கணினி உதவி வடிவமைப்பு (CAD).
    3. கணினி உதவியுடனான உற்பத்தி (CAM).
    4. கணினி உதவியுடனான பொறியியல் (CAE).
  2. தனிப்பட்ட நிதி முகாமைத்தும் குறித்து இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்க ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல்.
  3. கலை, இசை, ஊடகம், நடனம் மற்றும் விளையாட்டுக்கான வளங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில் தொடர்புகள் ஆகியவற்றின் மூலம் திறமைகளை அடையாளம் காணுதல் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
  4. வெற்றிகரமான வர்த்தகர்களிடமிருந்து தொழில்முறை உதவி மற்றும் இளைஞர்களுக்கு குறைந்த ஆரம்ப அபாயங்களுடன் கூடிய வியாபாரங்கள் மற்றும் யோசனைகளுக்கு இணங்க வேலை செய்யும் இடத்தை அறிமுகப்படுத்துதல்.
  5. தேர்ந்தொடுக்கப்பட்ட 21 அணிகளுக்கு 6 மாற்று கூட்டுறவு திட்டத்தை அறிமுகப்படுத்தவும், 22 மாற்று அமர்வுகள் மற்றும் அர்ப்பணிப்பு வழிகாட்டல் (1 முதல் 1 அமர்வுகள் ) வரை அவர்களின் தொடக்க யோசனைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுதல்.
  6. .
  7. தொழில் முயற்சியாண்மையாளர்கள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கப்படும் தொடர் பேச்சுக்களை ஒழுங்கு செய்தல்.
  8. வேலைவாய்ப்புச் சந்தை கோரிக்கைகளுக்கு பொருந்தக் கூடிய புதிய கற்கைகளை தேசிய இளைஞர் பேரவை மூலம் அறிமுகப்படுத்துதல், பரிந்துரைக்கப்பட்ட கற்கைகள் பின்வருமாறு,
    பரிந்துரைக்கப்பட்ட கற்கைகள் பின்வருமாறுஇ
    • உடற்பயிற்சி பயிற்றுனர்கள்
    • சில்லறை விற்பனை
    • தோட்டச் செய்கை
    • வரவேற்பாளர்
    • சிற்றூண்டிச் சாலை தொழிலாளர்கள்
    • வைட்டர்கள்
    • குழந்தை பராமரிப்பு
    • வைத்தியசாலை உதவியாளர்கள்
    • துப்பரவு தொழிலாளர்கள்.
  9. தேசிய இளைஞர் பேரவையில் வேலை தேடல் உதவி மற்றும் தொழில் ஆலோசனைகளை அறிமுகப்படுத்துதல்.
  10. எண்முறை வளங்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் மென்மையான திறன் மேம்பாட்டுக்கு உதவுதல்.

கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஆரம்பித்தல்.

  1. ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையற்ற இளைஞர்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு பொருத்தமான வேலைகளை ஒதுக்குதல்.
  2. வேலைக்கான விண்ணப்ப நடைமுறைகளை மற்றும் வேலை தேடலில் கிராமப்புற இளைஞர்களுக்கான ஆலோசனைகளை அறிமுகப்படுத்துதல்.
  3. 12 ஆம் வகுப்பினை நிறைவு செய்யாமல் பாடசாலையை விட்டு வெளியேறிய அல்லது தற்போது வேலையில்லாமல் இருக்கும் 13 முதல் 19 வயதுடைய இளைஞர்களை ஆதரிக்க இளைஞர் அணைப்பு மையத்தை ஏற்பாடு செய்தல்.
    1. திட்டத்தின் மூலம் தனிப்பட்ட கல்வி மற்றும் பயிற்சி தேவைகளுக்கு ஏற்ப வழிகாட்டுதல்களை வழங்குதல்.
    2. மோசமான கல்வி செயற்திறன் கொண்ட வேலையற்ற இளைஞர்களுக்கு ஒரு முன் தொழில் பயிற்சி தளத்தை வழங்குதல்.
      • கூடுதலாக, இளைஞர் இணைப்புத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை வழறங்கும், தனித்துவமான திறமைகள், மற்றும் திறன்களை அடையாளம் காணுதல்.
      • சுதந்திரம், வாழ்க்கைத் திறன் மற்றும் கூட்டிணைக்கப்பட்ட இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்படும்.

யுளளளைவயnஉந வழ ளவயசவரிள – ஆரம்பிப்புக்களுக்கு உதவி

  1. சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உலகெங்கும் உள்ள சிறந்த ஆரம்ப சஞ்சிகைகள் அடங்கிய ஒரு வலைத் தளத்தை அறிமுகப்படுத்துதல், அங்கு வாரந்தோறும் சஞ்சிகைகள் பதிவேற்றப்படும்.
  2. சிறந்த வியாபார முன்மொழிவுகளுடன் கூடிய வாரத்திற்கு 5 வித்தியாசமான 5 தொழிற்துறைகள் பற்றிய நிகழ்கால நிகழ்ச்சியை தரக் கூடிய தொலைக்காட்சி செனல்களுக்காக (3 சிங்கள செனல்கள், 1 தமிழ் செனல் மற்றும் 1 ஆங்கில செனல்) ரூ 5பில்லியன் (ரூ 1 பில்லியன் ஒ 5 தொலைக்காட்சிகள்) இனை ஒதுக்குதல்
  3. வர்த்தக வழிகாட்டல்கள், ஒன்லைன் கற்கைகள், சந்தை ஆராய்ச்சி மற்றும் பங்காளர் சேவைகள் போன்ற இலவச ஆதாரங்களை உள்ளடக்கிய தொடக்க தளத்தை உருவாக்குதல்.
  4. நாட்டில் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், தகுதியான முதலீட்டார்களை ஈர்க்கவும் சரிச் சலுகைத் திட்டத்தை நிறுவுதல்.

    அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர், குறைந்தபட்சம் 1 மில்லியன் ரூபா முதலீட்டினை இரண்டு ஆண்டு காலத்திற்கு வைத்திருக்கும் போது அவரது முதலீட்டுத் தொகையில் 50% வரி விலக்கு கோர தகுதியுடையவராவார்.

  5. வழிகாட்டுதல்கள், ஆய்வக வசதிகள், நிதி ஆலோசனை, மாணவர்க் காப்புரிமை திட்டங்கள், IP வணிகமயமாக்கல் போன்ற சேவைகளை மாணவர்களுக்கு வழங்கும் பல்கலைக்கழகங்களில் தொடக்க வகுப்புகளை ஆரம்பித்தல்
  6. வேலையற்ற இளைஞர் தொழில்முனைவோருக்கு (18-37 வயது முதல் ) 750,000 ரூபா வட்டியில்லாத கடனை ஒரு முறை வழங்குதல்.


விளையாட்டு பற்றிய செயற் திட்டம்

இஸ்மார்ட் விளையாட்டுக்கள்.

  1. அனைத்து விளையாட்டுப் பதிவுகளையும் எண்முறையாக்கி ஒரு தளத்தை அமைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களை பாடசாலை மட்டத்திலிருந்தே கவனித்தல்.
  2. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாட்டைக் குறிக்கவும், வீரர்களின் வெற்றிகரமான சேர்க்கைகளை தெரிவு செய்யவும் AI இனை பயன்படுத்துதல்.
  3. அதிக செயற் திறன் கொண்ட வீரர்களிடையே இஸ்மார்ட் அணிகலங்களை பாவித்தல் மற்றும் பயிற்சி வகுப்புகளின் போது அவர்களின் முக்கிய புள்ளி விபரங்களை கணித்து எதிர்கால செயற்திறன் தொடர்பில் அனுமானித்தல்.
  4. போட்டிகளுக்கான வருகை விகிதத்தை அனுமானிக்க AI இனை பயன்படுத்தல் மற்றும் விளையாட்டில் பண வருமானத்தினை ஈட்டிக் கொள்வதற்கு அனுமதி சீட்டு விலையை மேம்படுத்தல்.
  5. பயிற்றுவிப்பாளர்களுக்கு வீடியோ அடிப்படையிலான பயிற்சி மற்றும் கற்கைகளை வழங்குதல்.

தடகளங்கள்

  1. பாடசாலை தடகளத்திற்காக “தேசிய விளையாட்டு திறமை தளத்தை” அறிமுகப்படுத்துதல்.
    • ஓடுகள நிகழ்ச்சி – 100 மீட்டர் மரதன்.
    • கள நிகழ்வுகள் - உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற அனைத்து கள நிகழ்வுகளும்.

    ஒலிம்பிக் மட்டத்தை எட்டும் திறனைக் கொண்ட சிறந்த செயற்திறன் மிக்க 1,000 விளையாட்டு வீரர்களின் ஒரு குழுவை தேர்ந்தெடுத்து உருவாக்குதல், அவர்களுக்கு கல்வி, தங்குமிடம் மற்றும் செலவுகளுடன் கொழும்பில் பயிற்சி அளித்தல்.

    அனைத்து முக்கிய விளையாட்டுகளுக்கும் விளையாட்டு நுட்பங்களை கற்பிக்க ஒளிநாடாக்களை பயன்படுத்தும் ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல்.

  2. விளையாட்டுக் கல்வி கற்கைகளை அறிமுகப்படுத்துதல், பயிற்சியாளர்களுககும் விளையாட்டுக் குழு, முகாமையாளர்களுக்கும்,பயிற்சி திறன், விளையாட்டு வைத்தியம் மற்றும் பிசியோதெரப்பி, மீட்பு முகாமைத்துவம் போன்ற தொடர்புடைய திறன்-தொகுப்புகளை மேம்படுத்துவதற்காக அவற்றை கிடைக்கச் செய்தல்.
  3. பயிற்சியாளர்களுக்கான ஒன்லைன் கற்கைகள் மற்றும் பயிற்சி ஒளிநாடாக்களை உருவாக்குதல்
    1. சர்வதேச அனுபவமுள்ள விளையாட்டு நபர்களை உதவி பயிற்சியாளர்களாக நியமித்தல். ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி டிப்ளோமா கற்கைகளில் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் சிறந்த செயற்திறன் மிக்கவர்களை ஈடுத்துதல்.
    2. பயிற்சியாளர்களுக்கான ஒன்லைன் கற்கைகள் மற்றும் பயிற்சி ஒளிநாடாக்களை உருவாக்குதல்.
  4. சர்வதேச அனுபவமுள்ள விளையாட்டு நபர்களை உதவி பயிற்சியாளர்களாக நியமித்தல்.
    ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி டிப்ளோமா கற்கைகளில் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் சிறந்த செயற்திறன் மிக்கவர்களை ஈடுத்துதல்.
  5. விளையாட்டு அணிகளுக்கு நிதியளிக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்குதல்.
  6. ஓவ்வொரு மாகாணத்திலும் ஒரு செயற்கை இறப்பர் தடகள அமைப்புடன் ஒரு அரங்கத்தை உருவாக்குதல்.
  7. பெயரளவு கட்டணம் வசூலிப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டுத் துறை (உடற்பயிறசி மையம், குளங்கள் ) வசதிகளுக்கு பொதுவான அணுகலை வழங்குதல். பயிற்சிப் பொற்ற பயிற்சியாளரின் மேற்பார்வையின் கீழ் அவை பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
  8. மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு நடவடிக்கைகளில் பயிற்சியளிக்கவும் பங்கேற்கவும் உதவுவதற்காக ஒரு விளையாட்டு மையத்தை நிறுவுதல்.
  9. இருக்கின்ற விளையாட்டு வளாகங்களை விருத்தி செய்தல்.
    1. வளாகங்களை “விளையாட்டுக் கழகங்கள்” என மறுப் பெயரிடுதல் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டுக் கழகத்தை, ஒரு நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து முக்கிய வசதிகளுடன் ஒரு முழுமையான ஆயுதம் கொண்ட விளையாட்டுக் கழகம் போன்றவற்றுடன் விருத்தி செய்தல்
    2. இந்த விளையாட்டுக் கழகங்களில் உணவு விடுதிகள் மற்றும் விளையாட்டு முகாம்கள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல்.
    3. கொழும்பில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திற்குள் கல்வி நிலையம், பொழுதுபோக்கு பகுதி மற்றும் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட விளையாட்டு நகரத்தை உருவாக்குதல்.
  10. தனியார்ததுறையுடன் இணைந்து விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு மூலோபாயத்தை உருவாக்குதல்,
    தற்போதுள்ள பயனற்ற உட்கட்டமைப்பு வசதியை வசதிகளை புதுபிக்கவும், வளாகத்தை பராமரிக்கவும் 50 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடல்.
  11. நீச்சல் குளங்கள், சைக்கிள் ஓட்டுதல், கிரிக்கட் அல்லது காற்பந்து மைதானம் போன்ற அருகில் உள்ள விளையாட்டு வசதியைக் கண்டுபிடிக்க அப் பயன்பாட்டைத் தொடங்குதல்.
  12. கிரிக்கட், மென்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து மற்றும் காற்பந்து ஆகியவற்றிற்கான விளையாட்டு தொடர் நிகழ்வுகளை வெள்நாட்டு வீரர்களின் பங்கேட்புடன் நடாத்துதல்..
  13. அமைப்பாளர்களுக்கும் பங்கேட்பாளர்களுக்கும் தேவையான வசதிகளை மற்றும் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச ட்ரையத்லான் நிகழ்வுகளை இலங்கைக்கு ஈர்த்தல்.
    ட்ரையத்லான் நிகழ்வுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளாக, ஹம்பந்தோட்ட, கொழும்பு, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகும்.
  14. சர்வதேச கோல்ப் போட்டிகளை இலங்கைக்கு ஈர்ப்பதற்காக தற்போதுள்ள கோல்ப் மைதானங்கள் மற்றும் வசதிகளை உருவாக்குதல்.
  15. விளையாட்டுகளுக்கான நிகழ்வு நாட்கட்டியை பராமரித்தல்.
  16. அங்கம்போரா, கபடி மற்றும் எல்லே போன்ற பாரம்பரிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நவடிக்கைகளை உருவாக்கி பலப்படுத்துதல்.

கிரிக்கெட்

  1. “தேசிய திறமைத் தளத்தில்” கிரிக்கெட்டைச் சேர்த்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட செயற்திறன் நிலைகளையும் அடையாளம் காணுதல்.
  2. தனிப்பட்ட விளையாட்டு வீரர்களில் திறன்-பகுதிகளை, குறிப்பாக கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு முன்கூட்டியே அடையாளம் காண யுஐ இனை பயன்படுத்துதல், வீரர்கள் மற்றும் பாடசாலை அளவிலன கிரிக்கெட் வீரர்களிடமிருந்து தரவை சேகரிக்கும் இஸ்மார்ட் மட்டைகள் மற்றும் இஸ்மார்ட் பந்துகளை உள்ளடக்குதல், இது முடிவெடுப்பவர்களுக்கு மிகவும் திறமையான வீரர்களை பகுப்பாய்வு செய்து தேர்ந்தெடுக்க உதவுகிறது.
  3. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்நாட்டு அளவிலான தரத்துடன் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்குதல்.
  4. ரடெல்லா கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச மைதானமாக விருத்தி செய்தல்.

இலக்குகள்

  • நமது தேசத்தின் பல இன, பல கலாச்சார, பல மதத் தன்மையை வலுப்படுத்த உதவும் சூழலை மேம்படுத்தி உருவாக்குதல்.

செயற்திட்டம்

  1. பலர் புத்த மதத்தை இலங்கையில் பிரதான மதமாக ஏற்றுக் கொண்டாலும், சிறுபாண்மை கலாச்சாரங்களை சகித்துக் கொள்வது மட்டுமல்லாமல் வரவேற்கும் ஒரு பன்முக கலாச்சார நாடாக வரையறுத்தல்.
  2. பன்முகக் கலாச்சார வாதத்தை நமது தேசிய அடையாளத்தை வரையறுக்கும் அம்சமாக அங்கீகரித்து ஒருவருக்கொருவர் மத அடித்தளங்கள், இனத்தின் வரலாறு, கலாச்சார நிகழ்வுகள், சமூகத் தேவைகள், மொழிகள் மற்றும் மரபுகள் பற்றிய உண்மையான புரிதலை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் நமது சமூகத்தின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தவும், மதத்தை அனுமதிக்காத உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும் நாட்டின் பன்முக கலாச்சார தன்மையை தொந்தரவு செய்யும் தீவிதவாதத்திற்கு இடம் கொடுக்காமை.
  3. பாதுகாப்பு விடயங்களில் சமூகங்களுடன் ஈடுபடுவதற்கு முன் கல்வி, தொண்டு, தனிப்பட்ட மற்றும் உணவுச் சட்டங்கள் போன்ற விடயங்களில் சமூகங்களிடையே ஈடுபாட்டுடன் நம்பிக்கையை வளர்த்தல்.
  4. பின்வருவனவற்றை உள்ளடக்கும் ஒரு மத மற்றும் பன்முக கலாச்சார சட்டத்தை உருவாக்குதல்.
    • நாட்டின் மத மற்றும் பன்;முக கலாச்சாரத்தின் அழகு குறித்து இலங்கையரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்..
    • மத மற்றும் இன வேறுபாட்டைக் கொண்டாடுதல்.
    • வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் “பூச்சிய சகிப்புத்தன்மையை” செயற்படுத்துதல்.
    • பின்வருவனவற்றை உள்ளடக்கும் ஒரு மத நல்லிணக்கச் சட்டத்தை நிறைவேற்றுதல்:

      • மதக் குழுக்களிடையே பகை அல்லது வெறுப்பை வளர்ப்பது தொடர்பான சாத்தியமான மற்றும் உண்மையான சம்பவங்களை கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறை.
      • அடையாளம் காணப்பட்ட இந்த பிரச்சினைகள் சிறுபாண்மை மதத்தினர் மற்றும் இனத்;திடையே நீண்ட கால கருத்து வேறுபாட்டிற்குள் வருவதற்கு முன்னர் உடனடியாக அவற்றை தீர்த்ததல்.
      • பொது மக்களை வன்முறைக்குத் தூண்டும் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு மூலம் அமைதியை வெளிப்படையாக சீர்குழைக்கும் ஏந்தவொரு நம்பிக்கை அல்லது சித்தாந்தத்தைச் சேர்ந்த மதக் குழுக்கள் அல்லது அமைப்புக்களைத் தடை செய்தல்.
      • மதத் தீவிரவாத சம்பவங்களை அடையாளமிடல். மத தீவிரவாதச் செயல் ஒன்று நடந்தால், அது தொடர்பில் முடிவெடுப்பவர்கள் ஒரு முழு சமூகத்தின் பொறுப்புக்கும் குற்றவாளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
      • பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும், ஆதரிக்கும், தொடர்புடைய அல்லது வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்தால் எந்தவொரு அமைப்பையும் உடனடியாக தடை செய்தல்
      • நாட்டில் சிறுபாண்மையினருக்கு எதிராக தேவையற்ற தப்பெண்ணங்களை உருவாக்கக் கூடிய செய்திகள் தொடர்பில் ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தல். கருத்துச் சுதந்திரம் மற்றும் “பொறுப்புள்ள வெளிப்பாடு” ஆகியவற்றிற்கு இடையிலான நுட்பமான சமநிலையை பேணுதல், இது ஒன்லைன் மற்றும் ஒப்லைன் செய்தி வெளியீடுகளுக்கான அனைத்து ஊடக நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும்;.
      • மத மற்றும் பன்முக கலாச்சார பாதுகாப்பு குறித்து குறுக்கு-கலாச்சார சுற்று அட்டவணையை உருவவாக்குதல். அனைத்து மத மற்றும் சிறுபாண்மை இனக் குழுக்களின் தலைவர்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுவது கட்டாயமாக இருக்க வேண்டும். இங்கு அடிப்படை சிக்கல்கள் திறம்பட விவாதிக்கப்படும் ஒரு மன்றமாகயிருக்கும், மேலும் அவை தீர்க்கப்பட கூடிய முறை குறித்தும் முடிவெடுக்கப்படும்.
      • உறுதியளித்த அல்லது எந்தவொரு செயலையும் செய்ய முயற்சிக்கும் பின்வரும் செயல்கள் தொடர்பில் தனிநபருக்கு (துறவி, பாதிரிமார்கள், போதகர், இமாம், வயதானவர்,அலுவலக பொறுப்பாளர் ) அல்லது எந்தவொரு மதக் குழு அல்லது நிறுவனத்தில் அதிகார நிலையில் உள்ள வேறு எந்த நபருக்கும் அல்லது உறுப்பினருக்கும் எதிராக தடை உத்தரவை பிறப்பித்தல்.

        • வெவ்வேறு மதக் குழுக்களிடையே பகை, வெறுப்பு அல்லது கோபத்தை அல்லது விரோதப் போக்கை ஏற்படுத்துதல்.
        • ஒரு அரசியல் காரணத்தை ஊக்குவிப்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வது, அல்லது கட்சியின் காரணத்தையும் அல்லது எந்த மத நம்பிக்கையையும் பரப்புதல் அல்லது நடைமுறைப்படுத்துதல் என்ற போவையில் செயற்படுதல்.
        • எந்தவொரு மத நம்பிக்கையையும் பரப்புதல் அல்லது கடைபிடிப்பது என்ற போர்வையில் மோசமான ந்வடிக்கைகளை மேற்கொள்வது, அல்லது
        • எந்தவொரு மத நம்பிக்கையின் போர்வையிலும் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியான செயல்களை செய்தல். மேற்கூறிய எந்தவொரு பயங்கரவாத செயலையும் செய்ய எந்தவொரு மதக் குழு அல்லது மத நிறுவனம் அல்லது நபரையும் தூண்டுதல் அல்லது ஊக்குவித்தல்.
  1. அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய ஒரு “அமைதிக் குழுவை” ஏற்பாடு செய்து, மோதல்களைத் தவிர்ப்பதற்கும், நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் தொடர்புடைய சமூகங்களின் வாராந்த கூட்டங்கள் நடாத்தப்படுவதை உறுதி செய்தல்.
  2. சமூகத்திற்குள் எரிச்சலை ஏற்படுத்தாமல், பண்டிகைகள் ஒரு இணக்கமான சூழ்நிலையில் அனுசரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பல்வேறு திருவிழாக்களை கடைபிடிப்பதற்காக பல்வேறு சமூகங்களி;ன் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு நடத்தை விதிகளை நிறுவி விளம்பரப்படுத்துதல்.
  3. வகுப்புவாத இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டால் குற்றவாளிகளை அடையாளம் காணவும் வழக்குத் தாக்கல் செய்து வழக்கு தொடரவும், மத ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களின் நடவடிக்கைகளை பதிவு செய்ய வீடியோ / ஓடியோ எடுப்பவர்கள் மற்றும் கமராக்களை பயன்படுத்துபவர்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்
  4. வதந்திகளைக் கட்டுப்படுத்தவும், சரிபார்க்கவும் பயனள்ள மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்தல். அனைத்து சமுகங்களின் தலைவர்களுடனும் தகவல் தொடர்பு ஒளியலைகளை நிறுவுதல் மற்றுமு; உணர்ச்சிகளை தூண்டும் மற்றுமு; இனவெறி மற்றும் வெறுப்பு உரைகள் / சொற்களால் இனவாத பதற்றத்தைத் தூண்டும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல். எந்தவொரு தவறான வாந்திகளையும் அகற்றுவும், பொது மக்களுக்குத் அது தொடர்பில் தெரியப்படுத்தவும் ஊடகங்களையும் பிற ஒளியலைகளையும் பயன்படுத்துதல்.
  5. அரசு மற்றும் தனியார் துறை மாணவர்களிடையே எழுச்சியூட்டும் இலக்கியங்களை விநியோகிக்கவும், நல்லிணக்கம் என்ற விடயத்தில் போட்டி மற்றும் விவாதங்களை ஊக்குவிததல். பாடசாலை பாடத்திட்டத்தின் ஒருப் பகுதியாக மத மற்றும் இன வேறுபாடு மற்றும் பன்முக கலாச்சாரத்தை உள்ளடக்குதல்.
  6. குறிப்பாக இனவாத சூழலில் ஊணர்ச்சிகளை தூண்டக் கூடிய சம்பவங்கள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை கண்காணித்து சுருக்கமாகக் கூறுதல்,

    புத்தமதம், இந்து மதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு ஒரு பிரதான அமைச்சரையும் நான்கு இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்தல். தற்போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை இரண்டு மடங்காக்கி ஒவ்வொரு மதத்தி;லும் அந்தந்த மக்கட் தொகை விகிதத்தில் பட்ஜெட்டை விநியோகித்தல்.

  7. “Home Police”நிகழ்ச்சித் திட்டத்தை நிறுவுதல்..

    முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ).

    வருடாந்தம் 1,700 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவதுடன் அவர்களை “Home Police Programme” இற்காக இணைத்துக் கொள்ள முடியும், இது தற்போதைய வருடாந்த குடும்ப வன்முறை பற்றி புகார்களை 3,000 இலிருந்து 2,000 ஆக குறைக்கலாம்,

    மற்றும் இந்த செயன் முறையானது 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்.“Home Police Programme’ இன் விளைவாக மொழி சுமை குறைக்கப்படும்.

இலக்குகள்

  • நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு சுற்றுலாத் துறை மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல்.
  • உள்நாட்டு சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாத்தின் வளர்ச்சிக்கான முக்கிய ஊக்கியாக கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இலங்கையின் தனித்துவத்தை ஊக்குவித்தல்.
  • உள்நாட்டு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தில் அறிவு மிக்க, திறமையான, ஆக்கபூர்வமான மற்றும் புதுமையான மனித மூலதனத்தை உருவாக்குதல்.

  • செயற் திட்டம்

    கலைகளை வளர்ப்பதற்காக மூலோபாயத் திட்டம்.

    1. இலங்கையின் அனைத்து சுற்றுலா பயணிகள் தளங்களி;லும் கலை சந்தைகளை விருத்தி செய்தல்.
    2. வெளிநாட்டவர்களுக்கு கன்வாஸ்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படும் சித்திர சேமிப்பக குழாய்களை உள்நாட்டு கலைஞர்களுக்கு மலிவான விலையில் கிடைக்கச் செய்தல்.
    3. இலாப நோக்கற்ற நிறுவனங்களின் உதவியுடன் பாரம்பரிய கலைகளை மேம்படுத்த ஒரு வலைத்தளத்தை தொடங்குதல். மேலும், உலகெங்கிலும் அதிகம் விற்பனையாகும் கலைப்படைப்புகளின் வண்ணங்களைப் பயன்படுத்த உள்நாட்டு கலைஞர்களுக்கு அறிவுறுத்துதல்.
    4. உள்நாட்டு கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புக்களைவ விற்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒன்லைன் தளத்தை உருவாக்குதல்..
    5. ஒன்லைன் கலை சஞ்சிகைகளை பிரசுரித்தல்.
    6. சர்வதேச அளவில் புகழ்ப்பெற்ற கலைக் கூடங்கள் மற்றும் கூட்டுப் பணியிலிருந்து ஓவியங்கள், சிற்பங்கள், நிறுவல்கள் மற்றும் புகைப்படங்களை உள்ளடக்கிய ஒரு கலை கண்காட்சியை ஏற்பாடு செய்தல்.
    7. கலை மற்றும் கலாசாரம் தொடர்பான உலக உச்சி மாநாட்டை இணைந்து நடாத்துதல்.
    8. கலை மற்றும் கலாச்சார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க வரி சலுகைகளை வழங்குதல்.

    ளுவசயவநபiஉ pடயn கழச ஊரடவரசந – கலாச்சாரத்திற்கான மூலோபாய திட்டம்.

    1. இலங்கையின் மாறுபட்ட கலாச்சார, மத மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் யூடியூப் செனலை ஆரம்பித்தல்.
    2. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு கலாச்சாரங்களின் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.
    3. வெளிநாடுகளில் உள்நாட்டு கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கத்தல்.
    4. உள்நாட்டு மற்றும் சர்வதேச திறமைகளைக் கொண்ட ஐந்து நாள் இலவச கலை விழாவை ஏற்பாடு செய்தல்.
    5. படைப்பாளிகள், தனியார் முதலீட்டாளர்கள் அல்லது வணிகர்கள், நுகர்வோர், ஒழுங்குப்படுத்தும் அமைப்புகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே ஒரு இணைப்பாளராக செயற்பட ஒரு கலாச்சார பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவுதல்.
    6. பின்வரும் வகைகளில் பிராந்திய தகவல்களை உள்ளடக்கிய கலாச்சார வரைபடத்தை கொண்டிருத்தல்:
      • கலை நிகழ்ச்சி
      • பாரம்பரிய உணவு வகைகள்
      • பாரம்பரிய விளையாட்டுக்கள்
      • பாரம்பரிய மரபுகள்
      • பாரம்பரிய ஆடை
      • உள்நாட்டு கலை மற்றும் கலாச்சாரத்தில் முக்கிய நபர்கள்.
      • கலை உட்கட்டமைப்பு
    7. கலாச்சார செயற்பாட்டு நாட்காட்டியினை உருவாக்குதல்.
    8. அனைத்து மாவட்டங்களிலும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
    9. கல்வித் திட்டங்கள் மூலம் கலாச்சார மரபுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல்.
    10. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பயிற்சி, சமூக மேம்பாடு மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடாத்துதல்.
    11. கடினப் பிரதிகளை இலத்திரனியல் புத்தகம் அல்லது ஓடியோ கோப்புகளாக வெளிடுபவர்களை ஊக்குவித்தல்.
    12. உள்நாட்டு எழுத்தாளர்களின் உலகளாவிய முறையீட்டை வளர்க்க அவர்களுக்கு உதவுதல்.
    13. அருங்காட்சியகங்களில் மெய்நிகர் சுற்றுப் பயணங்களை வழங்குதல்.
    14. உள்நாட்டு அருங்காட்சியகங்களின் தரங்களையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல்.

இலக்குகள்

  • மீனவருக்கான இரட்டை வருமானம்
  • தற்போதைய மீன் மகசூழ் ஆண்டிற்கு 0.9 டன் /சதுர மீட்டர் தொடக்கம் 1.8 டன் /சதுர மீட்டரினை இரட்டிப்பாக்குதல் (2.02 மில்லி மீட்டர் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் இருந்து இந்தியாவின் மீன் மகசூல் ஆண்டிற்கு 2 டன் /சதுர கிலோ மீட்டராகும்)
  • மீன்வளப் பொருட்கள் மற்றும் மீன்வளர்ப்பின் தரத்தை வளர்த்தல்.
  • நீடித்த தன்மை மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்த மீன்வள மூலங்களை நிர்வகித்தல்.

  • செயற்திட்டம்

    1. துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் 1,337 மீன் பிடி கிராமங்களின் கல்வி, கழிப்பறைகள், நீர் மற்றும் மின்சாரம் போன்ற சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.
    2. நிகழ்நேர தரவுகளுக்காக புவிசார் தொழில்நுட்பத்துடன் கூடிய மீன் பிடி வலயத்தை அடையாளம் காண இலங்கை கடற் தகவல் மையத்தை நிறுவுதல்.
      • கடல் வெப்பநிலை,குளோரோபில் வடிவங்கள், அலையின் வேகம் மற்றும் திசையின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் பிடிப்பதன் மூலம் மீன்கள் பல காணக் கூடிய சாத்தியமான மீன்பிடி வலயங்களை (PFZ) குறித்து ஆலோசனை கூறுதல்
      • இந்த மையத்தின் மூலம் பேரழிவு வலயங்கள் / பாதிப்பிற்குள்ளான பகுதிகளுக்கு அதிக அலை மற்றும் காற்று எச்சரிக்கைகள் வழங்குதல்.
    3. நிகழ்நேர வானிலை முன்னறிவிப்பு முறையை நிறுவுதல்.
    4. தற்போதைய / புதிய திட்டங்களுடன் கடற்கரையில் உள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்கள் / மீன் தரையிறக்கும் மையங்களின் திறனை நவீனப்படுத்துதல் மற்றும் அதிகரித்தல்.
    5. மீன் பிடி கிராமங்களை கொண்ட 14 மாவட்டங்களுக்கும் மீன் மொத்த சந்தைகளை அறிமுகப்படுத்துதல்.
    6. மீன்களின் புத்துணர்ச்சியைப் பாதுகாக்க உள்நாட்டு போக்குவரத்து நோக்கங்களுக்காக அடுக்கக் கூடிய கடல் உணவு நடமாடும் முறையை வழ ங்குதல்.
      உள்நாட்டு தொழில் நிலையானது அடுக்கக் கூடிய கடல் உணவு நடமாடும் முறைக்கு வரி மற்றும் ஊநுளுளு இல் விலக்களித்தல்.
      பொதுவாக இதுபோன்ற முறைகள் 165 மணிநேரம் வரை உறைந்திருக்கும் மீன்களை கொண்டிருக்கும்.
    7. கப்பல்களில் மீன்களை உறைய வைக்க நடமாடும் குளிர் சேமிப்பு கொள்கலன்களை அறிமுகப்படுத்துதல்.
    8. ஒவ்வொரு மீன்பிடி கிராமத்திலும் மீன் விலை மற்றும் பங்கு கிடைக்கும் தன்மை பற்றிய நிகழ்நேர தகவல்களை உள்ளடக்கிய ஒரு விண்ணப்பத்தை வழங்குதல்.
    9. மீன் உபகரணங்கள் மீதான இறக்குமதி வரியினை விலக்குதல்.
    10. மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு காப்பீட்டு திட்டத்தை வழங்குதல்.
    11. மீனவர் நல வசதிகளை அதிகரிக்கும் முயற்சியை நிறுவுதல்.

      இந்த முயற்சியின் மூலம் இறந்த மீனவர்கள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல்.

    12. இலவசமாக கிராமப்புற நிதி ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
    13. பொது-தனியார் கூட்டாண்மை மூலம் சந்தை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்; பண்ணைக்கு சந்தை வீதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய திட்டத்தின் மூலம் மீன் பொருட்கள் பிரிவுடன் கூடுதல் சந்தைகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல்.
    14. ஆதரவு வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பை வரையறுக்கவும் - தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேவையான மாற்றங்களை எளிதாக்க இந்த நிறுவனங்களுக்குள் அர்ப்ணிப்புடன் கூடிய நிபுணர்களுடன் பணிபுரிதல்.
    15. மீன்களின் அளவு மற்றும் மீனவர்களுக்கு கண்டுபிடிக்கக்கூடிய தன்மையைக் கண்டறிய ஒரு விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தல்.
    16. சிற்பி சாகுபடியை சமூக வருமானம் ஈட்டும் திட்டமாக விரிவுப்படுத்துதல்.
    17. இலங்கையில் திறந்த கடல் மீனவளர்ப்பை அதிகரித்தல், இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தற்போது திருகோணமலையில் கூண்டு வடிவிலான விவசாய முறைமை.
    18. விவசாயிகள் / தொழில் முனைவோருக்கு மீன் வளர்ப்பிற்கான ஊக்கத்தொகைகளுடன் நீண்ட கால குத்தகை ஒப்பந்தங்களில் நீரில் மூழ்கிய பகுதிகள் / இறந்த ஆறுகளை வழங்குதல்.
    19. மேலதிக மீன் பண்ணைகளை உருவாக்குதல் மற்றும் புதிய மற்றும் உப்பு நீரில் கட்டப்பட்டு இருக்கும் மீன் பண்ணைகளை தீவரப்படுத்துதல்.

      புதிய மீன் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் கடன் திட்டங்களை நிறுவுதல்.

    20. தற்போதுள்ள தொழில் கல்வி கல்லூரிகளில் மீன் வளர்ப்பு குறித்த தொழி;லநுட்ப, தொழில் கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துதல். மேலதிகமாக,

      மீன் பிடித் துறையில் ஈடுபடுவோருக்கு பின்வரும் பகுதிகளில் தொழில் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துதல்.

      • மீன் விவசாயி பயற்சி – நன்னீர் மீன் வளர்ப்பு
      • சிறிய இயந்திரங்கள் கொள்கைகள் பயற்சி – தொழில்நுட்ப சேவைகள்.
      • சமூக அடிப்படையிலான இஸ்ப்ராட் விவசாயிகள் மற்றும் பெண்கள் விற்பனையாளர்களுக்கான நிதிக் கல்வியறிவு (பண முகாமைத்தவம்)
      • அறுவடைக்கு பிந்திய மீன்வளத்துக்கான பயிற்சி உட்பட்ட பயிற்சி.
      • ஆழ்நீர் “மீன் திரட்டு சாதனம்” குறித்த பயிற்சி.
      • கடற்பாசி விவசாய பயிற்சி.
    21. மீனவர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்புகளை அரசு அமுல்ப்படுத்தல். பதிவேற்ற வேண்டிய பயிற்சி ஒளிநாடாக்கள் மற்றும் மின் கற்றல் தளம் என்பன உருவாக்கப்பட வேண்டும்.
    22. கடற்கரைக்கு அப்பாலான மீன்பிடி.

    23. ஒரு கையடக்கத் தொலைப்பேசி அப்லிகேஷனை பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல், அங்கு மீன் பண்ணை உரிமையாளர்கள் நோய்களைக் கண்டறிந்து, மீன்களின் நோய்களுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் கண்டறியலாம்.
    24. அனைத்து மாவட்டங்களிலும் நன்னீர் குஞ்சுப் பொறிப்பகங்களை நிறுவுதல் மற்றும் தற்போதுள்ள அனைத்து நன்னீர் குஞ்சுப் பொறிப்பகங்களையும் மேம்படுத்துதல்.
      நடந்துக் கொண்டிருக்கும் திட்டங்களானவை பின்வருகின்றன,
      • மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையம் நிறுவுதல், செவனப்பிட்டி, பொலன்னறுவை.
      • மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையம் நிறுவுதல், முறுத்தவெல
      • நண்டு நகரக் கட்டம் 1 நிறுவுதல், கல்முல்ல, ஹம்பந்தோட்ட
      • நண்டு நகரக் கட்டம் 2 நிறுவுதல், ரகாவ, ஹம்பந்தோட்ட
      • நண்டு நகரக் கட்டம் 3 நிறுவுதல், மணற்கேனி, மட்டக்களப்பு
      • அலங்கார மீன் வளர்ப்பு மையம் நிறுவுதல், செவனப்பிட்டிய
      • அலங்கார கடல் மீன் வளர்ப்பு மையம் நிறுவுதல், பங்கதெனியா
      • மரபணு மேம்பாட்டு மையம் நிறுவுதல், தம்புள்ள
      • மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையம் நிறுவுதல், முறுத்தவெல
      • நன்னீர் இறால் குஞ்சிப் பொரிப்பகங்கள் நிறுவுதல், திருகோணமலை.
      • மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையம் நிறுவுதல், உடவலவ
      • குடல் வெள்ளரி குஞ்சிப பொரிப்பகங்கள் நிறுவுதல், மன்னார்.
      • துற்போதுள்ள மையங்களில் (இங்கின்யாகல, தம்புள்ள, கலாவெவ மற்றும் உடவலவ – திலபியா) வசதிகளை புதுப்பித்தல் மற்றும் விரிவுப்படுத்தல்.
    25. துற்போதுள்ள மையங்களில் (இங்கின்யாகல, தம்புள்ள, கலாவெவ மற்றும் உடவலவ – திலபியா) வசதிகளை புதுப்பித்தல் மற்றும் விரிவுப்படுத்தல்.
    26. நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் கொல்லைப்புற குஞ்சுப் பொரிப்பகங்களி;ல் வளர்ப்பது கிராமப்புற சமூகத்திற்கு ஒரு குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தப்பட்டது..
    27. அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் பயிற்சி மையங்களை விரிவுப்படுத்துதல்.

      தற்போது ரம்படகல்லவில் உள்ள அலங்கார மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தைப் மீன் வளர்ப்பு மற்றும் முகாமைத்துவத்துக்கான பயிற்சி வீடியோக்களை அறிமுகப்படுத்துதல்.

இலக்குகள

  • பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 11 முதல் 17 புறப்படும் ஓடுதள இயக்கத்தை அதிகரித்தல்.
  • விமான நிலையங்களின் வலுவான வலையமைப்பை உறுதிப்படுத்த உகந்த கட்டமைப்பை செய்தல்.

  • பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்.

    1. தாமரை கோபுரத்தின் ஒரு பகுதியை பொதியிறக்கும் சேவைகளுடன் கூடிய ஒரு உப அதிவேக சர்வதேச சோதனை மையமாக மாற்றுதல்.
    2. அனுமதிக்கும் வேகத்தை அதிகரிப்பதற்காக முக மற்றும் கைரேகையுடன் கூடிய தானியங்கி குடிவரவு வாயில்களை அறிமுகப்படுத்துதல்.
    3. BIA இல் பொதிகள் இல்லாத பயணிகளுக்கு நுழைவினை வழங்கும் பொருட்டு kiosks சரிபார்ப்பு நேரத்தை 8 முதல் 20 ஆக அதிகரித்தல்.
    4. உள்நுழைவு பிரிவில் ஏற்படும் நெறிசலை குறைக்கும் பொருட்டு BIA இல் தற்போது காணப்படும 57 உள்நுழைவு பிரிவுகளுக்கு மேலதிகமாக 30 உள்நுழைவு பிரிவுகளை அறிமுகப்படுத்துதல்.
    5. VVIP lounge மற்றும் அதன் நுழைவு வாயில்களை BIA இன் பட்ஜெட் விமான சேவை செயற்பாடுகளுக்கு மாற்றுதல்.
    6. நிகழ்நேர விமான விவரங்கள், முனைய வரைப்படங்கள், வானக விபரங்கள் மற்றும் முன்பதிவுகள், உணவகங்கள் மற்றும் விமான நிலைய விடுதி விபரங்களை கொண்ட BIA அப் பயன்பாட்டை அமுல்ப்படுத்துதல்.
    7. 16 கூடுதல் விமானப் பாலங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவாக்குதல்.
    8. விமானப் பாலங்கள் இல்லாமல் நுழைவுக் கதவுகள் மற்றும் விமானங்கள் இடையே பயணிக்கும் பேரூந்துகளுக்கு வங்கிகள் போன்ற நிறுவனங்கள் குறைந்த ஓட்டம் கொண்ட பேரூந்துகளை நீண்டக் காலப்பகுதியான 15 வருடங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
    9. தற்பேதைய ஓடுபாதை இயக்கத்தை 11 முதல் 17 மணித்தியாளமாக அதிகரிப்பதற்கு, பட்ஜெட் காவிகளுக்கு தற்போதைய விமானம் சுற்றி திரும்பும் நேரத்தை 60 நிமிடங்கள் வரைக் குறைத்தல்.
    10. BIA தற்போது அதன் வளாகத்தை சுற்றி ஒரு கண்ணி வேலியை கொண்டுள்ள உலகின் ஒரே நிலையமாகும். மேம்பட்ட பாதுகாப்பிற்காக சென்ஸஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் மின்சார வேலிகளை அமைத்தல்.
    11. சிறப்பு வாகன பதிவுத் தகடுகளுடன் கூடிய வரி இல்லாத வானக அனுமதியினை வாகன உரிமையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் டீஐயு இல் ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கு முறையான வாகன சேவைகளை நிறுவுதல் மற்றும் ஒரு நிறுவப்பட்ட வாகன கம்பனிக்கு செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஒதுக்குதல்.
      இரண்டு வகையான வாகனங்களை வைத்திருத்தல், உ. ம், கார், வேன்.
      சிறப்பு பதிவு தகடுகளுடன் கூடிய வரி இல்லாத வாகன அனுமதிகளை 900 வாகனங்களுக்கு வழங்குதல்.
      பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக, வாகன சேவையை முறையாக ஒழுங்குப்படுத்தல்.

    உட்கட்டமைப்பு

    1. இத்மலான, பலாலி மற்றும் மத்தள விமான நிலையங்களை சர்வதேச பஜ்ஜெட் விமான சேவைக்காக விருத்தி செய்தல்.
    2. மற்றும் ரத்மலானை பட்ஜெட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானங்களை அறிமுகப்படுத்துதல,
      • புலாலி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • கொக்கல
      • மத்தள
      • திகன, கண்டி
    3. தற்போதைய இரத்மலானை விமான நிலைய முனையத்தை ஒரு வருடத்திற்குள் கட்டப்பட்ட ஒரு பெரிய இரும்பு கட்டிடமாக மாற்றுதல், இது பயணிகள் கையாளுதலுக்கு மேம்பட்ட தளவமைப்பை வழங்கும்.
    4. இரத்மலானை விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதையை 1773 மீட்டரில் இருந்து 2400 மீட்டராக கிழக்கு பக்கமாக நீடித்தல். இது D வகை விமானங்களை தரையிறக்க உதவும். அதாவது, 120 இருக்கை திறன் கொண்ட விமானங்கள் ஆகும். இரத்மலானை விமான நிலையத்தை ஒத்த ஓடுபாதை நீளம் கொண்ட சர்வதேச விமான நிலையங்கள் பின்வருமாறு.
      • லண்டன் நகர சர்வதேச விமான நிலையம் - ஐக்கிய இராச்சியம் - ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
      • அன்டவேர்ப் சர்வதேச விமான நிலையம் - பெல்ஜியம் - ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
      • பொகோஸ் டெல் டொரொ கொலொன் சர்வதேச விமான நிலையம் - பணாமா – ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
    5. மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை மீளாரம்பித்தல்.
    6. உள்நாட்டு விமான நடவடிக்கைகளுக்காக கொக்கல, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் விமான நிலையங்களை உருவாக்குதல் மற்றும் கண்டியின் திகனவில் உள்நாட்டு விமானங்களுக்கு புதிய விமான நிலையத்தை அமைத்தல்.
    7. கண்டி, திகன விமான நிலையத்தை 3 வருடங்களுக்குள் உள்நாட்டு பட்ஜெட் விமான நிலையமாக கட்டுதல்.
    8. இலங்கையினுள் பயணிப்பதற்காக 50 இருக்கைகளைக் கொண்ட விமான சேவையை நடைமுறைப்படுத்தல்.
    9. நாட்டில் 55,335 பட்ஜெட் அறைகள் இருப்பதால், குறைந்த கட்டண காவிப் பயணிகளுக்கு தங்குவதற்கு இலங்கைக்குள் அதிகமான பட்ஜெட் விமானங்களை (குறைந்த கட்டண காவிகளை) ஈர்த்தல்.
    10. பொதி சுமக்கும் விமானங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, கொக்கல மற்றும் திகன(கண்டி) இலிருந்து சர்வதேசத்திற்கு பறக்கக் கூடிய வசதிகளை செய்தல்.
    11. பட்ஜெட் விமான நிறுவனங்களில் பொருட்களை கையாளும் ஏகபோகத்தை அகற்றி, பட்ஜெட் விமான நிறுவனங்கள் தங்கள் சொந்த பொதிகளைக் கையாள அனுமதித்தல்.
    12. எரிபொருள் தரையிறக்கம், தரிப்பிடம்,விமான நிலைய வரி, விமான பாலம் மற்றும் பொருட்களை கையாளும் கட்டணங்களை மலேசியாவுடன் பொருத்துதல்.
    13. ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அனைத்து பொதி சுமக்கும் விமானங்களுக்கும் இலவச தரையிறக்கம் மற்றும் தரிப்பிட வசதிகளை வழங்குதல்.
    14. அனைத்து விமானச் சேவைக் கட்டணங்களையும் அதி உச்ச நேரம் அதி உச்ச நேரமின்மை என பிரித்து அதி உச்ச நேரம் இல்லாத போது குறைந்த கட்டணத்தை வசூலித்தல்.
    15. இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவரும் ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி போன்ற முதல் 20 ஐரோப்பிய பிரதேசங்களுக்கு நேரடி விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
    16. விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களையும் அவற்றின் அட்டவணைகளையும் அந்தந்த சர்வதேச இணைப்பு விமானங்களுடன் ஒத்திசைய செய்தல்.
    17. முதல் தர மற்றும் வியாபார வகுப்பு பயணிகள், ஏஐP க்களுக்கும் விஷேடமான அதிவேக குடிவரவு சேவையினை வழங்குதல்.

2030 இல் இலங்கை – ஒரு வளர்ச்சியடைந்த நாடு | தம்மிக்க பெரேரா
24 செப்டெம்பர் 2019