இலக்குகள்

நிதியின் ஊடாக சிறந்த இலங்கையை உருவாக்குதல்

  1. சிறந்த பிஸ்கால் முகாமைத்துவம்; இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முதலீடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்காக, வருவாயானது நியாயமான, பொறுப்பான மற்றும் திறமையான வழியில் உயர்த்தப்பட்டு செலவிடப்படுவதை உறுதி செய்தல்.
  2. துல்லியமான வறுமைக் குறைப்பு ; வீடுகளில் வறுமைக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளை மதிப்பிடும் 50 குறிக்காட்டிகள் மூலம் ஏழை வீடுகளை அடையாளம் காண நவீன தொழிநுட்பங்களை ஒதுக்குதல், மற்றும் வளர்ச்சியடைந்த நாட்டின் வறுமை மட்டத்தை குறைப்பதற்கு தேவையான முதலீடுகளை ஒதுக்குதல்.
  3. மனித மூலதனத்தின் அபிவிருத்தி ; ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை கல்வியை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தல், மற்றும் ஆண்டொன்றுக்கு மொத்தம் 360,000 மாணவர்களில் 50% ஆனவர்கள் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்தல். தொழில்நுட்ப, தொழில் முறை மற்றும் கல்வி பயிற்சியின் (TVET) தரத்தினை மறு பெயரிட்டு மேம்படுத்துதல், அத்துடன் ஆண்டொன்றுக்கு 360,000 மாணவர்களில் 40% ஆனவர்கள் TVET கல்வி நிலையத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதை உறுதி செய்தல், அதன் மூலம் வருடத்திற்கு 10% மாணவர்கள் மாத்திரமே திறமையற்ற தொழிலாளர் சந்தையில் இணைந்துக் கொள்வார்கள்.
  4. சிறந்த சமூகக் கொள்கை கட்டமைப்பு ; நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள், மற்றும் வேலைவாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கும், விவசாயத்துறையை மறுசீரமைப்பதற்குமான (விவசாயிகளின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பது, விவசாயிகளின் வீட்டு வருமானம், பாதுகாப்பான மற்றும் மலிவு விலையின் சமமான நுகர்வு, சத்தான உணவு ஆண்டு மற்றும் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு உள்ளடங்களாக) அரசாங்கத்தின் முன்னுரிமைகளை எட்டுவதற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல்.
  5. உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ; ஒரு வலுவான நீண்ட கால மற்றும் தூய்மையான பொருளாதார நிலைமைகளை உருவாக்குதல், இதன் மூலம் இலங்கையர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தல்.
  6. இலங்கையின் மக்கள் தொகை வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 190,000 ஆகும். எனவே, தற்போதைய பொருளாதாரத்தை பராமரிக்கும் பொருட்டு, மேலதிகமாக ஆண்டுக்கு 62,400 வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் அவசியமாகும்.

    (மூலம்: Jobless Growth, World Bank, 2018)

    வேலையின்மை விகிதத்தில் ஒவ்வொரு 1% குறைப்பிற்கும் மொத்த தனி நபர் உள்நாட்டு உற்பத்தி 3% அதிகரிக்கும் என்று ஒகுனின் சட்டம் கூறுகிறது.

    வேலையின்மையை குறைப்பதற்கு மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தினை நிறுவி செயற்படுத்துதல். இது மாதந்தோறும் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் தனியார்த் துறை முதலீடுகளுக்கு அரசு உதவும்.

    லாபர் வளைவானது, வரி விதிப்பு விகிதங்களுக்கும் அதன் விளைவான அரசாங்க வருவாயின் அளவிற்கும் இடையிலான உறவை விளக்குகிறது. இது வரி விதிக்கக் கூடிய வருமான நெகிழ்ச்சித் தன்மையின் கருத்தை விளக்குகிறது. உ.ம் வரி விதிப்பு விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வரி விதிக்கக் கூடிய வருமான மாற்றங்கள்.

    தற்போது நாட்டில் முதலீடுகள் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம் தவறான வரி விகிதங்களாகும், ஏனெனில் நமது தற்போதைய வரி விகிதங்கள் முதலீட்டாளர்கள் எங்கள் போட்டியாளர்களை விட அதிகமாக உள்ளனர், அது நாட்டினுள் முதலீடு செய்யப்படுவதனை ஊக்கப்படுத்தவில்லை.

    எனவே, நாட்டிற்கு உயர்ந்த அளவிளான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருவாய் அதிகரிக்கும் புள்ளியில் வரி விகிதத்தை பராமரித்தல் தேவைப்படுத்தப்படுகிறது.

    கிறீன்பீல்ட் மற்றும் பிரவுன்பீல்ட், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்க வரி மற்றும் சுங்க வரி கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதானது பொருளாதார வளர்ச்சி, மாவட்ட வரியான வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி என்பவற்றிற்கு அவசியமாகும்.

    ஆண்டு வருமான வரி
    (நேரடி வரி)
    (ரூ.மில்லியன்)
    அரசாங்க மொத்த வருமானம்
    (ரூ.மில்லின்)
    % அரசாங்க மொத்த வருமானத்தின் நேரடி வரி வீதம். % அரசாங்க மொத்த வருமானத்தின் மறைமுக வரி வீதம். ரூபாய் தேய்மானத்தின் விளைவாக பரிமாற்ற இழப்பு வெளிநாட்டு கடன்
    (ரூ மில்லியன்)
    2005 52,535 379,747 13.80% 86.20% 117,785 956,620
    2006 79,693 477,833 16.70% 83.30% 108,579 1,103,418
    2007 107,169 565,051 19.00% 81.00% 71,646 1,326,487
    2008 126,541 655,260 19.30% 80.70% 117,785 1,448,734
    2009 139,558 699,644 19.90% 80.10% 23,114 1,760,467
    2010 135,624 817,279 16.60% 83.40% -10,028 2,024,583
    2011 157,310 967,862 16.30% 83.70% 90,335 2,329,280
    2012 172,594 1,051,462 16.40% 83.60% 230,642 2,767,299
    2013 205,666 1,137,447 18.10% 81.90% -15,361 2,960,424
    2014 198,115 1,195,206 16.60% 83.40% -89,335 3,113,116
    2015 262,583 1,454,878 18.00% 82.00% 285,091 3,544,031
    2016 258,857 1,686,061 15.40% 84.60% 186,650 4,045,796
    2017 274,562 1,831,531 15.00% 85.00% 225,223 4,718,618
    2018 310,450 1,919,974 16.20% 83.80% 1,063,218 5,959,547
    மொத்தம் 2,481,257 2,405,344

    *வருமான வரி (நேரடி வரி)

    வருமான வரி
    (நேரடி வரி)

    =

    கூட்டிணைக்கப்பட்ட மற்றும் கூட்டிணைக்கப்படாத வரி

    +

    நீங்கள் சம்பாதிக்கும் போது செலுத்தும் வரி (PAYE)

    +

    பொருளாதார
    சேவைக் கட்டணம்

    +

    வட்டி
    வருமானத்திற்கான வரி.

    செயற்திட்டம்

    கடந்த 14 ஆண்டுகளில், அரசாங்கத்தின் நேரடி வரி வருவாய் மொத்த அடிப்படையில் ரூ 2,481 பில்லியனாக இருந்த அதே வேளை, மேலதிகமான ரூ 2,405 பில்லியன் ரூபா தேய்மானம் காரணமாக கடந்த வருடம் வெளிநாட்டுக் கடன் ரூ 5,959 பில்லியனாக அதிகரித்தது. எனவே, ரூபாய் தேய்மானமானது 2% - 3% இற்கு அப்பால் தேய்வடைவதை நிறுத்துவதற்கு முதலீடுகளை கொண்டு வருதல் அவசியமாகின்றது, விஷேடமாக வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் நேரடி வரி வருமானத்தை பொருட்படுத்தாத ஏற்றுமதியை அதிகரித்தல் என்பன முக்கியமானவை.

    உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான கொள்கைகள்

    2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.1,919 பில்லியனாகும். தவிர்ப்புக்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் ஒரு செயற்கை உளவுத்துறை (AI) அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் (சுவிஸர்லாந்தில் ஐடீஆ றுயவளழn இனை அறிமுகப்படுத்திய பின்பு 10% சுங்க வருவாய் அதிகரித்தது) அதன் பிறகு, அரசாங்க வருவாய் 15% அதிகரிக்கப்படுவதுடன் அதன் மூலமான மேலதிக வருமானமாக ரூ.287 பில்லியன் பெறப்பட முடியும்.

    1. பின்வரும் தொழில்த் துறைகளில் தற்போதுள்ள கூட்டிணைக்கப்பட்ட வரியின் விகிதத்தினை பேணுதல்.
      • காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியியல் தவிர்ந்த நிதி சேவைகள்
      • மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கில்கள் தவிர்ந்த ஏனைய மொத்த விற்பனை.
      • புகையிலை தயாரிப்புக்களின் உற்பத்தி.
      • தொடர்பாடல்.
      • சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடர்பான செற்பாடுகள்.
      பங்கு இலாப வரி மற்றும் மூலதன ஆதாய வரி என்பவற்றின் விகிதத்தை 0% ஆக குறைத்தல
      (இது மேலதிக வேலைவாய்ப்பிற்கு உதவும்)
    2. தற்போதைய கூட்டிணைக்கப்பட்ட வரி விகிதத்தினை 0% ஆக குறைத்து, டீழுஐ உடனான ஒப்பந்தத்தின் மூலம் புதிய முயற்சியாளர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கும் பின்வரும் தொழில்துறைகளுக்கு குறைக்கப்பட்ட விகித உத்தரவாதத்தை வழங்குதல்.
      • கல்வி
      • தகவல் சேவை செயற்பாடுகள்
        (ஏதேனும் வகையான டீPழு, முPழு, தொகுப்பிற்கான உட்கட்டமைப்பு கூறு, தரவு செயலாக்க சேவைகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள், வலைத்தளங்கள், செய்தி பிரதிநிதிகள் மற்றும் செய்தி முகவர்களின் நடவடிக்கைகள், ஊடகத்திற்கான படம் மற்றும் அங்கங்கள், கணினி அடிப்படையிலான தொலைப்பேசி தகவல் சேவைகள், ஒப்பந்த அல்லது கட்டண அடிப்படையிலான தகவல் தேடுகை சேவைகள் மற்றும் செய்தி துண்டாடல் சேவைகள், பத்திரிக்கை துண்டாடல் சேவைகள் மற்றும் ஏனைய எண்முறை சேவைகள்)
      • மனித சுகாதார செயற்பாடுகள்.
      • வான் போக்குவரத்து
      • மோட்டார் வாகனங்கள், டிரைலர்ஸ் மற்றும் செமி டிரைலர்ஸ் உற்பத்தி.
      • கழிவுகளை சேமித்தல், முறைமைப்படுத்தல் மற்றும் அகற்றல் செயற்பாடுகள்; பொருட்கள் மீட்பு.
      • தண்ணீர் சேமிப்பு, முறைமைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல்.
      • கழிவு நீர்.
      • ஏனைய போக்குவரத்து சாதனங்களின் உற்பத்தி
      • மீன் பிடி மற்றும் மீன் வளர்ப்பு.
      • மாற்று செயற்பாடுகள் மற்றும் கழிவு முகாமைத்துவ சேவைகள்.
    3. 1 மற்றும் 2 ஆம் குறிப்புக்களில் சொல்லப்படாத தற்போது காணப்படுகின்ற முயற்சியாளர்களுக்கான தற்போதைய கூட்டிணைக்கப்பட்ட வரி விகிதத்தினை 12% ஆக குறைத்தல்.
    4. 1 மற்றும் 2 ஆம் குறிப்புக்களில் சொல்லப்படாத புதிய முயற்சியாளர்களுக்கான தற்போதைய கூட்டிணைக்கப்பட்ட வரி விகிதத்தினை 12% ஆக குறைத்தல் மற்றும் அனைத்து துறைகளுக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்ட விகிதத்தை உத்தரவாதப்படுததுதல் (மேல் மாகாணத்தில் ) , எட்டு மாகாணங்களுக்கும் 80% சலுகை வழங்கப்படுதல், இதன் மூலம் 2.4% ஆன பயனுள்ள விகிதத்தை வசூலிக்க முடியும்(இது மாவட்ட ரீதியாக கிராமப் புறங்களில் மேலதிக வேலை வாய்ப்புக்ககை உருவாக்க உதவும்)
    5. மாதாந்த வருமானம் ரூ.500,000 இலிருந்து ஆரம்பிப்பவர்களுக்கு PAYE வரி 12% அறவிடப்படும்.

    இலங்கை சுங்கம் தொடர்பான கொள்கைகள்.

    2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.1,919 பில்லியனாகும். தவிர்ப்புக்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் ஒரு செயற்கை உளவுத்துறை (AI) அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் (சுவிஸர்லாந்தில் ஐடீஆ றுயவளழn அனை அறிமுகப்படுத்திய பின்பு 10% சுங்க வருவாய் அதிகரித்தது) அதன் பிறகு, அரசாங்க வருவாய் 15% அதிகரிக்கப்படுவதுடன் அதன் மூலமான மேலதிக வருமானமாக ரூ.287 பில்லியன் பெறப்பட முடியும்.

    1. சுங்கத்தில் நிலவும் 7,162 ர்ளு குறியீடுகளில் 90% ஆன சுங்க வருவாய் 500 ர்ளு குறியீடுகளில் ஊடாக உருவாக்கப்படுகின்றன (6-எண்கள்). 90% ஆன சுங்க வருவாயினை பெற்றுத் தரும் 500 ர்ளு குறியீடுகள் மறுசீரமைக்கப்படும், இது மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவின் தரப்படுத்தலாகும் (இது உள்நாட்டு தொழில்த் துறைகள் மற்றும் மேலதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் உதவும்). அதன் விளைவாக, சுங்க வருவாய் 10% ஆல் அதிகரிக்கப்பட முடியும்.

    அரசாங்க மூலதன முதலீடு.

    1. அரசாங்க மூலதன முதலீடானது பொது முதலீட்டு நிகழ்ச்சி (PஐP) என அறியப்படுகின்றது, இங்கு பல காலமாக இலங்கையர்களுக்கு நன்மை விளைவிக்கப்படுகின்றது, சில கடன் முறைமைகள் மூலம் அவர்களுக்கு பணம் செலுத்துவது நியாயமானதும் அதிக பயனுடையதுமாகும்.
      அறிவார்த்த நிதி ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் நிதியின் பங்கை தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு மிகவும் சமமாக விநியோகி;க்க உதவும் வகையில் பொறுப்புள்ள விதத்தில் மற்றும் நிலையான முறையில் கடன் செய்து கொடுக்கப்படும்.

    அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவு

    1. துல்லியமான வறுமைக் குறைப்பு, ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, பல்கலைக்கழக, தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி கல்வி என்பன அவசிய செலவுகளாக கணக்கிலெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக செலவு செய்யப்படல்.
    2. இலங்கை கடனின் மூலமாக இந்த செலவுகளுக்கு நிதியளிப்பதன் மூலம் இலகு வழிமுறையை கையாளுகின்றது. இது நீண்ட காலத்திற்கு ஏற்றதல்ல, இது போன்ற கடன்கள் இன்றைய தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான சுமையை எதிர்கால சந்ததியினருக்கு கைமாற்றும்;. தொடர்ச்சியான வருவாயுடன் தொடர்ச்சியான செலவீனங்ளை சந்திப்பதே ஒரு சிறந்த மற்றும் வலுவான அணுகுமுறையாகும். எனவே, எங்கள் வரி முறையின் வினைத்திறனை உறுதிப்படுத்த நாம் தொடர்ந்தும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

    இலங்கைக்கான எதிர்கால கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம்.

    1. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு இலங்கைக்கான எதிர்கால கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடலுக்கு பொறுப்பாகும்.
    2. பொருளாதார பகுப்பாய்வு செய்யப்பட்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட எந்தவொரு கொள்கையையும் சரி பார்க்க நிதி அமைச்சை பயன்படுத்தலாம்.
    3. வரவு செலவுத் திட்டத்தின் உறுதிகளின் செயற் திறனை கண்காணிக்க தகவல் முகாமைத்துவ முறைமை (MIS) இனை அமுல்ப்படுத்துதல்
    4. அரசாங்க மூலங்கள் மற்றும் சொத்துக்களின் அதிகப்படியான பயன்பாடு தொடர்பில் கண்காணிப்பதற்கு சொத்து முகாமைத்துவ முறைமை அமுல்ப்படுத்தப்படல்.